என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கூடலூர்: தோட்டத்துக்குள் புகுந்த வாழை மரங்களை நாசம் செய்த யானைகள்
கூடலூர்:
தேனி அருகே கூடலூர் மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலை பகுதியில் விலை உயர்ந்த மரங்களும், மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்குள் உள்ளிட்ட பலவகை இன உயிரினங்களும் உள்ளன.
வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் விவசாயிகள் வாழை, கரும்பு, தென்னை, மா உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் வன விலங்குள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் வனத்துறையினர் சில இடங்களில் மட்டும் அகழிகள் அமைத்தும், சூரிய மின்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டது.
தற்போது அகழிகள் மழையினால் சேதம் அடைந்து விட்டது. மின்வேலி கம்பிகளும் செயல்படாமல் உள்ளது. இதனால் வன விலங்குகள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.
கூடலூர் வனச்சரகம், வெட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு விடியும் நேரத்தில் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்