search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elangovan"

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என்று இளங்கோவன் கூறினார். #Congress #DMK #Elangovan
    மதுரை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு அ.தி.மு.க. அரசை காப்பாற்றும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கொண்டு இருக்கிறார்.

    ஆனால் இன்றைய சூழ்நிலையில் பாரதிய ஜனதா என்பது தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கட்சியாக உள்ளது.

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றிகரமான தோல்வி என்று தமிழிசை கூறி வருகிறார். அவர் விரக்தியில் இப்படி கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி அழிந்து வருகிறது.


    இது தமிழிசைக்கு நன்றாக தெரியும். எனவே தமிழிசை பாரதிய ஜனதாவில் இருந்து விலகி வேறு கட்சியில் சேர்ந்தால் தான் வார்டு அளவிலான தேர்தலில் வெற்றி பெற முடியும்.

    கஜா புயல் நிவாரணத்துக்காக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட நெசவாளர்கள், துணி வகைகளை தயாரித்து வைத்திருந்தனர்.

    ஆனால் தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.

    இத்தகைய மோசடி பேர் வழிகளுக்கு வருகிற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். தினகரன் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சி மீது அக்கறை செலுத்த வேண்டாம். அவரது கட்சியே கரைந்து வருகிறது. தினகரன் அவரது கட்சியை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

    நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. சிலிண்டர் மானியம் கூட பல இடங்களில் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #DMK #Elangovan
    நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவுடன் உஷாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். #congress #Elangovan #Rajinikanth #BJP
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல்காந்தி பதவியேற்று ஓராண்டாகிறது. நடந்து முடிந்த தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்று பெற்றுள்ளது. மோடியை வீழ்த்தும் வகையில் ராகுல்காந்தி வளர்ந்துள்ளார்.

    இந்த தோல்வியை ஏற்று கொண்டு மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழிசை பேச்சு மரண ஓலம் போல் உள்ளது. அவர் சொல்வது போல் சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்று எதுவும் கிடையாது. தமிழிசை பாரதிய ஜனதாவை விட்டு தனிக்கட்சி தொடங்க வேண்டும். அப்போது தான் அவர் ஒரு வார்டிலாவது வெற்றி பெற முடியும்.


    நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காமல் நிம்மதியாக இருக்க வேண்டும். பா.ஜனதா வலுவிழந்து வருகிறது என்று ரஜினி கூறியதை நான் வரவேற்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் பி.ஜே.பி.யுடன் உஷாராக இருக்க வேண்டும்.

    நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்வது மோடியின் செயல்பாடுதான் காரணம். தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    கஜா புயல் பாதிப்பிலும் கமி‌ஷன் அடிக்க தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. சென்னிமலையில் பெட்சீட் தேங்கி கிடக்கிறது. இதை வாங்காமல் வெளி மாநிலங்களில் கமி‌ஷனுக்காக கொள்முதல் செய்துள்ளனர்.

    இதே நிலை நீடித்தால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசீட் வாங்காது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #congress #Elangovan #Rajinikanth #BJP
    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடியையும், பா.ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். #Results2018 #Modi #EVKSElangovan
    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் முன்னணி பெற்றுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் வெற்றி உறுதியாகி விட்டது.

    இந்த தேர்தல் முடிவு மூலம் மோடியையும், பா.ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விட்டார்கள். காங்கிரசையும் ராகுலையும் மக்கள் ஏற்று கொண்டு உள்ளார்கள். இந்த தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக நல்ல பிரகாசம் உருவாகி உள்ளது.


    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்த வரை அங்கு சந்திரபாபு நாயுடுயுடன் கூட்டணி வைத்ததை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. சந்திரபாபு நாயுடுவிடம் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் அங்கும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

    தமிழகத்திலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க.வையும், பாரதிய ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.  #Results2018 #Modi #EVKSElangovan
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்ததால் இளங்கோவன் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். #Congress #Elangovan
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சக் கட்டத்தில் உள்ளது. எனவே கட்சி பதவிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்படுகிறது.

    அனைத்து கோஷ்டி தலைவர்களும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் தங்கள் கோரிக்கையை வைத்தனர். புதிய தலைவர் நியமிக்கப்படலாம் அல்லது செயல் தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் என்று புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.

    5 மாநில சட்டசபை தேர்தல் நடந்ததால் ராகுல் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அதில் கவனம் செலுத்தி வந்தனர். கட்சி பணிகளை கவனிக்க நேரம் இல்லை. தற்போது 5 மாநில தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது. ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி திரும்பி விட்டனர்.

    இன்று முதல் மாநில கட்சி விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது.

    இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு இளங்கோவன் டெல்லி புறப்பட்டு சென்றார். எனவே அவருக்கு தமிழக காங்கிரசில் முக்கிய பொறுப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #Elangovan
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் தத்து எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆலோசனை வழங்கியுள்ளார். #GajaCylone #Congress #Elangovan
    சென்னை:

    கஜா புயல் பாதித்த பட்டுக்கோட்டை பகுதியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் 8 கிராமங்களை நேரில் சென்று பார்த்தேன். விமானத்தில் குண்டு வீசி அழிக்கப்பட்டது போல் அழிந்துகிடக்கிறது.

    உட்புற கிராமங்களுக்கு இன்னும் யாரும் செல்லவில்லை. மின்சார வசதி கிடைக்க ஒரு மாதம் ஆகலாம் என்கிறார்கள்.

    அமைச்சர்களும், அதிகாரிகளும் மெயின் ரோடுகள் வழியாக செல்கிறார்கள். கிராமங்களுக்குள் செல்ல வேண்டும். இதனால்தான் மக்கள் கோபப்படுகிறார்கள். எங்களையும் சில இடங்களில் வழிமறித்தார்கள். அவர்களிடம் நாங்கள் காங்கிரஸ்காரர்கள் என்று சொன்ன பிறகுதான் விட்டார்கள்.

    மிகப்பெரிய துயரில் மக்கள் சிக்கி கிடக்கிறார்கள். அவர்களை உடனடியாக மீட்க வேண்டியது அவசியம்.

    மத்திய குழு வருகை, நிவாரணம் வழங்குதல் ஒரு புறம் நடக்கட்டும். அமைச்சர்கள் எல்லோரும் வசதியாகத்தானே இருக்கிறார்கள். ஒவ்வொரு யூனியனையும் ஒன்றிரண்டு அமைச்சர்கள் சேர்ந்து தத்தெடுங்கள். அங்கேயே போய் முகாமிடுங்கள். நிவாரண பணிகளை செய்யுங்கள். ஒரு இடைத்தேர்தல் வந்தால் எப்படி தெரு தெருவாக முகாமிட்டு முழு வீச்சில் பணிகளை செய்கிறார்கள். அதே போல் இந்த பணியையும் மேற்கொண்டால் மக்களை விரைவாகமீட்டு விடலாம்.

    முக்கியமாக ஒரு வி‌ஷயத்தை பார்த்தேன். காமராஜர், கருணாநிதி காலத்தில் நடப்பட்ட பல மின்கம்பங்கள் தாக்கு பிடித்துள்ளன.

    ஆனால் ஜெயலலிதா காலத்து மின்கம்பங்கள்தான் பெருமளவு உடைந்து விழுந்துள்ளது. அந்த அளவுக்கு உறுதி தன்மையோடு அமைத்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பாதிக்கப்பட்ட 8 கிராமங்களில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இளங்கோவன் வழங்கினார்.

    இதில் காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே ஜே ராமச்சந்திரன், நிர்வாகிகள் வி.ஆர்.சிவராமன், நாசே ஆர்.ராஜேஷ், கே. மகேந்திரன், ஜெரோம் ஆரோக்கியராஜ், ராஜதம்பி, வைரக்கன்னு, ஏ.ஜி.சிதம்பரம், திருச்சி வேலுசாமி, மற்றும் பலர் உடன் சென்றனர்.

    மேலும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொந்த ஊரான செங்கப்படுத்தான்காடு, சேண்டாக் கோட்டை, குடிசை வீடு இடிந்து நான்கு பேர் உயிரிழந்த சிவக்கொல்லை கிராமங்களில் ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களை வழங்கினார். #GajaCylone #Congress #Elangovan
    இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்று அடையாளம் தெரியாதவர்கள் கூறிய கருத்துக்கள் குறித்து மேலிடத்தில் கூறி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #Elangovan
    சென்னை:

    தமிழக காங்கிரசில் நிலவி வரும் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு நீடித்து வருகிறது.

    திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் மேலும் சில தலைவர்களும் டெல்லி மேலிடத்தில் வலியுறுத்தி உள்ளனர். நுங்கம்பாக்கத்தில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கோஷ்டி மோதல் வெளிப்படையாகவே தெரிந்தது.

    இதேபோல கடந்த 9-ந்தேதி நடைபெற்ற போராட்டத்திலும் திருநாவுக்கரசருக்கு எதிராக காங்கிரசார் பங்கேற்கவில்லை. அவர்கள் வேறு வேறு மாவட்டங்களில் சென்று பங்கேற்றனர்.

    இந்தநிலையில் நேற்று இளங்கோவன் ஆதரவாளர்கள் திருநாவுக்கரசரை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

    அதில் திருநாவுக்கரசர் ‘‘தன்மானத்தை இழந்த பொம்மை தலைவர்’’ என்றும் இளங்கோவனை தொடர்ந்து விமர்சித்தால் எம்.ஜி.ஆர் இறந்த அன்று நடந்த சம்பவங்களை அம்பலப்படுத்துவோம் என்றும் கூறி இருந்தனர்.

    இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் இன்று திருநாவுக்கரசர் இதுதொடர்பாக பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-


    இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்று அடையாளம் தெரியாத யார் யாரோ சொல்லும் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேலை வெட்டி இல்லாமல் வீட்டுக்குள் இருந்துகொண்டு வெளியிடும் அறிக்கை பற்றி நான் கவலைப்பட போவதில்லை.

    எம்.ஜி.ஆர் இறந்த அன்று என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தால் சொல்ல வேண்டியதுதானே. இதுபற்றி மேலிடத்தில் கூறி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார். #Congress #Thirunavukkarasar #Elangovan
    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து ஒரு பயங்கரவாதியைப் போல் பேசி வருவதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #elangovan #hraja

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசாருடன் நடத்திய வாக்கு வாதத்தில் வெளியிட்ட கருத்துக்கள் கடும் எதிர்ப்புக்குள்ளாகி உள்ளன. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

    எச்.ராஜா தொடர்ந்து ஒரு பயங்கரவாதியைப் போல் பேசி வருகிறார். நீதிமன்றத்தையும், காவல் துறையையும் அருவெறுக்கத்தக்க கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவரது பேச்சுக்கள் பயங்கரவாதத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளன. எனவே அவரை உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    பெரியார் சிலை மீது செருப்பு வீசியதும் அவரது தூண்டுதலின் பேரில்தான் நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-


    எச்.ராஜா தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது இது முதன் முறையல்ல. எல்லோரையும் தரக்குறைவாக பேசுவதற்கு பெயர்தான் எச்.ராஜா என்பது. இது வரையில் பலமுறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும், அரசும் சும்மா இருந்ததன் விளைவு அவர் இன்று நீதிமன்றத்தையும், தரக்குறைவாக பேசியிருக்கிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விட்டோம் என்பது மட்டும் பயன் அளிக்காது.

    நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு எல்லாவற்றையும் தாண்டி மக்கள் மன்றம் அதற்கான தண்டனையை வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #elangovan #hraja

    முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் சிறைக்கு செல்ல இருப்பதால் புழல் ஜெயிலில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Congress #Elangovan
    ஈரோடு:

    ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், பேரணியும் இன்று நடந்தது.

    அதன்படி ஈரோடு காங்கிரஸ் சார்பில் சம்பத் நகர்-நசியனூர் ரோடு பிரிவில் பேரணி தொடங்கி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு கலெக்டர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தார்.

    இதில் பங்கேற்ற மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ரபேல் போர் விமானம் காங்கிரஸ் ஆட்சியின் போது வெறும் 520 கோடி ரூபாயில் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த போர் விமானங்களை 1500 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. அந்த பணத்தை லஞ்சமாக பெற வாய்ப்புள்ளது.

    இது குறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த போர் விமானங்கள் விலை பற்றி கேட்டால் மழுப்பி வருகிறார். ராணுவம் ரகசியம். இதை வெளியே சொல்ல முடியாது என்கிறார்.

    விலையை கூறுவதில் தவறு ஏதும் இல்லை. என்ன ஆயுதம்? என்ன குண்டு தயாரிக்கிறார்கள்? என்று கேட்டால்தான் ராணுவ ரகசியம்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை பொறுத்த வரை சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஏற்கனவே அவர்களை மன்னித்து விட்டனர். இனிமேல் தமிழக அரசு தான் அதில் முடிவு எடுக்க வேண்டும்.


    புழல் சிறையில் கைதிகளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்தது போல படங்கள் வெளியானது. அது ஏன் என்றால்? மிக விரைவில் முதல்வரும், துணை முதல்வரும் சிறைக்கு செல்ல இருப்பதால் இது போன்ற சலுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி சொல்லி வருகிறார். நேற்று கூட ஈரோட்டில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கிராமப்புறங்களில் 4 முதல் 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan #EdappadiPalaniswami #OPanneerSelvam #PuzhalJail
    ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தமிழக அரசின் கையில்தான் உள்ளது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். #RajivGandhimurdercase #Elangovan

    அவனியாபுரம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குறித்து ஏற்கனவே சோனியா காந்தி ‘‘மறப்போம், மன்னிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.

    எனவே 7 பேர்களையும் விடுதலை செய்வது தமிழக அரசின் கையில்தான் உள்ளது.

    பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் விலை உயர்ந்து வருகிறது. இது விரைவில் ரூ.100-ஐ எட்டிவிடும்.


    நாளை நடைபெறும் பந்த்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கின்றன.

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது உரிமையாகும். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என்று கூறுகிறார். ஆனால் இதுவரை வர வில்லை.

    தற்போது நடிகை கோவை சரளாவும் கட்சி ஆரம்பிக்க உள்ளார். மக்கள் செல்வாக்கு உள்ளதா என்று நடிகர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivGandhimurdercase #Elangovan

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். கலைஞர் இடத்தை நிச்சயம் அவர் நிரப்புவார் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். #mkstalin #elangovan #karunanidhi

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பொருளாளர் துரை முருகனையும் வாழ்த்தினார்.

    பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதசார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக பாடுபட வேண்டும் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். கலைஞர் இடத்தை நிச்சயம் அவர் நிரப்புவார்.

    மின்னணு வாக்கு எந்திரம் மூலம் தேர்தல் நடத்தினால் எந்திரத்தை ரிமோட் மூலம் மோடி மோசடி செய்வார். இதில் மோடி வல்லவர். எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #elangovan #karunanidhi

    திருநாவுக்கரசர் பா.ஜ.க.வுக்கு சென்றால் காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று திருச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். #elangovan #thirunavukkarasar #bjp

    திருச்சி:

    திருச்சி சமயபுரத்தில் இன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2,3 நாட்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் வார பத்திரிக்கை ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இன்னும் இருக்கிற திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சியை பற்றியும், வாஜ்பாய் பற்றியும் சிறப்பாக பேசியிருந்தார். வாஜ்பாய் எவ்வளவு உயர்ந்த மனிதர், பி.ஜே.பி எவ்வளவு உயர்ந்த கட்சி என்று மிக சிறப்பாக பேசியிருந்தார். அதை படித்த பின்னர் தான் எனக்கே வாஜ்பாய் பற்றி அதிகம் தெரியவந்தது. இவ்வளவு நல்லவரான வாஜ்பாயை விட்டு திருநாவுக்கரசர் வெளியே வந்தது தவறு. மீண்டும் அவர் வாஜ்பாய் இருந்த பா.ஜ.க. கட்சிக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நல்ல கட்சியை விட்டு ஏன் வந்தார் என்பது தெரியவில்லை. இன்னும் கூட காலதாமதம் ஆக வில்லை. மீண்டும் அவர் அக்கட்சிக்கு சென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.


    எனக்கு பாலம் உடைகிறது, தகர்க்கப்படுகிறது என்பதை பற்றி ஒரு சந்தேகம் உள்ளது. புதிய பாலம் கட்டி கமி‌ஷன் பார்ப்பதற்காக ஆளும் கட்சி அமைச்சர்களே இதனை செய்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. இப்போது தான் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை ஆரம்பித்து உள்ளது.

    வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் இன்னும் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #elangovan #thirunavukkarasar #bjp

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை நீதிபதி ஹேமலதா ரத்து செய்து உத்தரவிட்டார்.
    சென்னை:

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 2013ம் ஆண்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஊழலைப் பற்றி ஜெயலலிதா பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.

    இது தொடர்பாக அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா சார்பில் செங்கல்பட்டு கோர்ட்டில் மாவட்ட அரசு வக்கீல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மனுவை ஏற்று அவதூறு வழக்கை ரத்து செய்தார்.

    ×