search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puzhal jail prisoners"

    சென்னை புழல் சிறையில் போலீசார் மீண்டும் நடத்திய சோதனையில் பிரியாணி சமைக்கும் அண்டா, ஆஸ்பத்திரியில் பயன்படுத்தும் கட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். #PuzhalJail
    சென்னை:

    புழல் ஜெயிலில் கைதிகள் சிலர் ஆடம்பரமாக இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியானது.

    இதையடுத்து கடந்த 2 வாரத்துக்கு முன்பு புழல் ஜெயிலில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் நவீன செல்போன்கள், டி.வி.க்கள், ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சில அதிகாரிகள் புழல் ஜெயிலில் இருந்து மாற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள ஜெயில்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புழல் ஜெயிலில் இதுவரை 4 முறை சோதனைகள் நடைபெற்றது.

    இந்த நிலையில் புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை கைதிகள் சிறையின் புதிய கண்காணிப்பாளராக செந்தில்குமார் பொறுப்பேற்றார்.

    இதையடுத்து சிறைத்துறையின் சென்னை சரக டி.ஐ.ஜி. முருகேசன், கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் நேற்று மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கோப்புப்படம்

    நேற்று மாலை 5.45 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9.45 மணி வரை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

    இந்த சோதனையின் போது புழல் சிறையில் இருந்து 29 டி.வி.க்கள், 18 கட்டில்கள், 27 எப்.எம். ரேடியோக்கள், 4 குக்கர்கள், பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்படும் பெரிய அண்டா, கடப்பாரை கம்பி, 200 கிலோ பாசுமதி அரிசி, 100 கிலோ பொன்னி அரிசி, 80 கிலோ மைதாமாவு, 60 லிட்டர் சமையல் எண்ணை, 50 கிலோ பருப்பு வகைகள், சீரகம், கடுகு, ஜாம்பாட்டில், சோம்பு, நூடுல்ஸ், காய்கறிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதில் பிரியாணி அண்டா சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் சிறை அறையில் பறிமுதல் செய்யப்பட்ட 18 கட்டில்களும் ஜெயிலில் உள்ள மருத்துவமனைக்கு சொந்தமானவை ஆகும்.

    இந்த கட்டில்களை சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்வாக்கு மிக்க கைதிகளுக்கு வழங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 18 கட்டில்களையும் மீண்டும் சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிறைத்துறை உயர் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    சிறை வளாகத்தில் கைதிகள் அறையில் இருந்து பொருட்கள் தொடர்ந்து கைப்பற்றப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  #PuzhalJail
    அமைச்சருக்கு பணம் கொடுத்துவிட்டு சிறையில் கைதிகள் உல்லாசமாக இருக்க அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #PuzhalJail
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பேச்சு மற்றும் கருத்துரிமையை பறித்து வருகிறது. தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் எடுத்து வருகிறது. நேற்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் மீது உடனடியாக காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மின்சார தட்டுப்பாடே இல்லை என்று கூறுவது நகைப்புக்கு உரியது. நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகையின் கருத்து என்பது அவர்கள் விடுதலையை காலதாமதப்படுத்தும் முயற்சியாகும்.

    டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகிறது. எனவே டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து போதிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    சிறைத்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு, நாங்கள் மாதம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஆகையால் கைதிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு உல்லாசமாக இருங்கள் என்று கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் ஊழல் செய்து வருகின்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவருக்கு கட்சியின் உயர் பதவி அளித்து இருப்பது ஊழல் செய்தால் அவருக்கு பதவி என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அவர் மீது கை வைத்தால் அவர் மற்றவர்கள் தலையில் கை வைத்து விடுவார் என்று தான், அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இலங்கையின் இறுதி போரின் போது மத்திய அரசு உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு உதவி செய்தது என்று ராஜபக்சே கூறியிருப்பது அகம்பாவத்தின் உச்சகட்டம். போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் பின்பற்றிய டெண்டர் முறை தான் தற்போதும் பின்பற்றபடுகிறது என்றும் மேலும் சிங்கிள் டெண்டர் முறை தி.மு.க. ஆட்சியில் தான் இருந்தது என்றும் அதனால் தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார். அப்படி தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்தது என்றால் ஏன்? இதுநாள் வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போதைய தமிழக அரசில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளதால் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இனி ஒரு நொடியும் இந்த ஆட்சி தமிழகத்தில் நீடிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #PuzhalJail
    முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் சிறைக்கு செல்ல இருப்பதால் புழல் ஜெயிலில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Congress #Elangovan
    ஈரோடு:

    ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், பேரணியும் இன்று நடந்தது.

    அதன்படி ஈரோடு காங்கிரஸ் சார்பில் சம்பத் நகர்-நசியனூர் ரோடு பிரிவில் பேரணி தொடங்கி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு கலெக்டர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தார்.

    இதில் பங்கேற்ற மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ரபேல் போர் விமானம் காங்கிரஸ் ஆட்சியின் போது வெறும் 520 கோடி ரூபாயில் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த போர் விமானங்களை 1500 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. அந்த பணத்தை லஞ்சமாக பெற வாய்ப்புள்ளது.

    இது குறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த போர் விமானங்கள் விலை பற்றி கேட்டால் மழுப்பி வருகிறார். ராணுவம் ரகசியம். இதை வெளியே சொல்ல முடியாது என்கிறார்.

    விலையை கூறுவதில் தவறு ஏதும் இல்லை. என்ன ஆயுதம்? என்ன குண்டு தயாரிக்கிறார்கள்? என்று கேட்டால்தான் ராணுவ ரகசியம்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை பொறுத்த வரை சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஏற்கனவே அவர்களை மன்னித்து விட்டனர். இனிமேல் தமிழக அரசு தான் அதில் முடிவு எடுக்க வேண்டும்.


    புழல் சிறையில் கைதிகளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்தது போல படங்கள் வெளியானது. அது ஏன் என்றால்? மிக விரைவில் முதல்வரும், துணை முதல்வரும் சிறைக்கு செல்ல இருப்பதால் இது போன்ற சலுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி சொல்லி வருகிறார். நேற்று கூட ஈரோட்டில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கிராமப்புறங்களில் 4 முதல் 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan #EdappadiPalaniswami #OPanneerSelvam #PuzhalJail
    புழல் சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. #PuzhalJail #Puzhal
    சென்னை:

    தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இதுபோன்ற பொருட்களை சட்ட விரோதமாக ஜெயிலுக்குள் அதிகாரிகளே கடத்தி சென்று கொடுப்பதாகவும் புகார் எழுந்தது.

    இதற்காக கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஜாமீனில் வெளியில் செல்வதற்கு ரூ.25 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கைதிகளின் உறவினர்கள் புகார் கூறி இருந்தனர்.

    இதேபோல கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

    இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியானது. அதில் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கும் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்கிற பட்டியலும் வெளியாகி இருந்தது.

    இதைத் தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. அதில், “சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.

    சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், “உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு உள்ளன.

    அறைக்குள் கட்டில் போடப்பட்டு அதில் சொகுசு மெத்தையும் போடப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த தலையணைகளும் காணப்படுகின்றன.

    இதையெல்லாம் பார்க்கும்போது சிறையில் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்டதெல்லாம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    புழல் சிறையில் கைதிகள் உற்சாகமாக இருக்கும் காட்சிகள்.

    உல்லாசமாக சுற்றுலா பயணம் மேற்கொள்வது போல டிப்-டாப்பாக உடைகளை அணிந்து கைதிகள் காணப்படுகிறார்கள். விலை உயர்ந்த ஷூக்களையும் கைதிகள் அணிந்துள்ளனர். டி-சர்ட், அரைக்கால் சட்டை ஆகியவற்றுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடியும் கைதிகள் சிறைக்குள் போஸ் கொடுத்துள்ளனர்.

    செல்போன் மூலம் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.

    சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதி ஒருவர் உற்சாகமாக அமர்ந்து போஸ் கொடுக்கிறார். இன்னொருவர் சிறை வளாகத்தில் “ஹாயாக” நடந்து செல்கிறார். ஒரு கைதி ஜிப்பா உடை அணிந்தபடி இரண்டு கைகளையும் நீட்டி போஸ் கொடுக்கிறார். அந்த படமும் வெளியாகி இருக்கிறது.

    இதேபோல அலுவலகங்களுக்கு மதிய உணவு எடுத்து செல்பவர்கள் பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் சிறைச் சாலைகளுக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    அதில் விதவிதமான உணவு வகைகளும் உள்ளன. ஜெயிலுக்குள்ளேயே இந்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எலக்ட்ரிக் குக்கர்களும் படத்தில் உள்ளன.

    இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்களது செல்போன்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள கடத்தல் கும்பலுடன் பேசியுள்ளனர். இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சிறையில் இருக்கும் ரவுடிகள் அங்கிருந்தபடியே கொலைக்கு சதி திட்டம் தீட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வெளிநாடுகளுக்கும் கைதிகள் போன் செய்து பேசி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புழல் சிறையில் இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

    இதன் முடிவில் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.  #PuzhalJail #Puzhal
    ×