search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளங்கோவன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை- திருநாவுக்கரசர்
    X

    இளங்கோவன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை- திருநாவுக்கரசர்

    இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்று அடையாளம் தெரியாதவர்கள் கூறிய கருத்துக்கள் குறித்து மேலிடத்தில் கூறி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #Elangovan
    சென்னை:

    தமிழக காங்கிரசில் நிலவி வரும் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு நீடித்து வருகிறது.

    திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் மேலும் சில தலைவர்களும் டெல்லி மேலிடத்தில் வலியுறுத்தி உள்ளனர். நுங்கம்பாக்கத்தில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கோஷ்டி மோதல் வெளிப்படையாகவே தெரிந்தது.

    இதேபோல கடந்த 9-ந்தேதி நடைபெற்ற போராட்டத்திலும் திருநாவுக்கரசருக்கு எதிராக காங்கிரசார் பங்கேற்கவில்லை. அவர்கள் வேறு வேறு மாவட்டங்களில் சென்று பங்கேற்றனர்.

    இந்தநிலையில் நேற்று இளங்கோவன் ஆதரவாளர்கள் திருநாவுக்கரசரை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

    அதில் திருநாவுக்கரசர் ‘‘தன்மானத்தை இழந்த பொம்மை தலைவர்’’ என்றும் இளங்கோவனை தொடர்ந்து விமர்சித்தால் எம்.ஜி.ஆர் இறந்த அன்று நடந்த சம்பவங்களை அம்பலப்படுத்துவோம் என்றும் கூறி இருந்தனர்.

    இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் இன்று திருநாவுக்கரசர் இதுதொடர்பாக பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-


    இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்று அடையாளம் தெரியாத யார் யாரோ சொல்லும் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேலை வெட்டி இல்லாமல் வீட்டுக்குள் இருந்துகொண்டு வெளியிடும் அறிக்கை பற்றி நான் கவலைப்பட போவதில்லை.

    எம்.ஜி.ஆர் இறந்த அன்று என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தால் சொல்ல வேண்டியதுதானே. இதுபற்றி மேலிடத்தில் கூறி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார். #Congress #Thirunavukkarasar #Elangovan
    Next Story
    ×