என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்- இளங்கோவன்
சென்னை:
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசாருடன் நடத்திய வாக்கு வாதத்தில் வெளியிட்ட கருத்துக்கள் கடும் எதிர்ப்புக்குள்ளாகி உள்ளன. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-
எச்.ராஜா தொடர்ந்து ஒரு பயங்கரவாதியைப் போல் பேசி வருகிறார். நீதிமன்றத்தையும், காவல் துறையையும் அருவெறுக்கத்தக்க கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவரது பேச்சுக்கள் பயங்கரவாதத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளன. எனவே அவரை உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
பெரியார் சிலை மீது செருப்பு வீசியதும் அவரது தூண்டுதலின் பேரில்தான் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-
எச்.ராஜா தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது இது முதன் முறையல்ல. எல்லோரையும் தரக்குறைவாக பேசுவதற்கு பெயர்தான் எச்.ராஜா என்பது. இது வரையில் பலமுறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும், அரசும் சும்மா இருந்ததன் விளைவு அவர் இன்று நீதிமன்றத்தையும், தரக்குறைவாக பேசியிருக்கிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விட்டோம் என்பது மட்டும் பயன் அளிக்காது.
நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு எல்லாவற்றையும் தாண்டி மக்கள் மன்றம் அதற்கான தண்டனையை வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #elangovan #hraja
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்