என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
- நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.
சட்டசபையில் இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,
* நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.
* நீட் தேர்வை ரத்து செய்தீர்களா?
* நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
- ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது.
- 7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள்.
சட்டசபையில் 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அவையில் கே.பி.முனுசாமி பேசுகையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது என்று கூறினார்.
தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உங்களுடைய இடத்திற்கு செல்லுங்கள் இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நடவடிக்கை எடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் உண்மைக்கு புறம்பான கருத்தை அமைச்சர் சொல்கிறார்.
7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், அமைச்சர் தவறான கருத்தை பதிவு செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
- மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து, வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான
சி.பி.ஐ.எம். தமிழ்நாடு மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று, மு.க.ஸ்டாலினின் அரசு அனைத்து விதமான "கோரிக்கைக் குரல்களை" ஒடுக்க நினைப்பதுதான் திமுக-வினுடைய Fascist mentality-க்கான Proof!
ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து, அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- தி.மு.க., அ.தி.மு.க.விடம் பா.ம.க. தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
- தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டாலும், மேலும் சில கட்சிகளை உள்ளே இழுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
ராமதாஸ் தரப்பு பா.ம.க., தே.மு.தி.க. இரண்டு கட்சிகளும் இன்னமும் தங்களுடைய கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருக்கின்றனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இருவருக்கும் இடையில் சில மாதங்களாகவே மோதல் இருந்து வருகிறது. மோதலையடுத்து கட்சியில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கினார். ஆனாலும் பா.ம.க. தலைவர் நான்தான். என்னை கட்சியை விட்டு நீக்க முடியாது அன்புமணி என்று கூறி வந்தார்.
இதனையடுத்து தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார். அதே நேரம் ராமதாஸ் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார்.
தி.மு.க., அ.தி.மு.க.விடம் அவரது தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
பா.ம.க. ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இன்னமும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், தற்போது அவரது தரப்பு எம்.எல்.ஏ. அருள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாசின் பா.ம.க. தரப்பை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தன்னை சந்தித்த போதும் கூட்டணி குறித்து பேச இ.பி.எஸ். மறுப்பு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அன்புமணி தரப்பு ஏற்கனவே கூட்டணியில் இணைந்து விட்டதாலும், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் இணைத்தால் அன்புமணி தரப்பை சமாதானப்படுத்த வேண்டிய நிலை வரும். அன்புமணி தரப்பு ஒருவேளை சமாதானமடைந்தாலும், தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்படும் என்று இ.பி.எஸ். தரப்பு மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார்.
- அதிமுக, பாஜக தரப்பில் இருந்து அழைப்புகள் வந்தநிலையில் திமுகவில் சேர விருப்பம் காட்டியுள்ளார் மன்னன்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டிவருகின்றனர். ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடக்க, மறுபக்கம் அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் வேறுகட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
அந்த வகையில் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளரான மன்னன் இன்று திமுகவில் இணைந்துள்ளார். கட்சியில் இருந்த காலக்கட்டத்தில் மதுரை திமுக என்றாலே அழகிரியின் கோட்டை எனக்கூறிவந்தார்கள். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து அந்த சாம்ராஜ்யம் சரிந்தது. ஆனால் அப்போதிலிருந்து அவரின் வலது கரமாக இருந்தவர் தான் பி.எம்.மன்னன்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார். அப்போதும் அவருடன் இருந்தவர் மன்னன். இந்நிலையில் கடந்தவாரம் முதல் இவர் அதிமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து இன்று பி.எம்.மன்னன் அவரது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
நீண்ட நாட்களாக அதிமுக, பாஜக தரப்பில் இருந்து அழைப்புகள் வந்தநிலையில் திமுகவில் சேர விருப்பம் காட்டியுள்ளார் மன்னன். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடமும் தெரிவித்துள்ளார். ஆனால் திமுகவில் தரப்பில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காத நிலையில் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
- மக்கள் மீது வரிச்சுமை அதிகமானதை தவிர வேறு எந்த சாதனையும் இல்லை.
- நிதி பற்றாக்குறை அதிகரித்தால் மக்களின் தலையில் வரிச்சுமை கூடும்.
சென்னை :
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 5 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டிவதைத்த ஏமாற்று மாடல் திமுக அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
* திமுக அரசு எந்த அளவிற்கு தமிழக மக்களுக்கு காது குத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவே பத்திரிகை வெளியிட்டோம்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்காமல் திமுக அரசு ஏமாற்றி உள்ளது.
* பல்வேறு துறைகளில் உள்ள அலுவலர்களுக்கு திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
* வாய்ஜாலம் நிறைந்த மேனாமினிக்கி உரை போல் தான் இடைக்கால பட்ஜெட் உரை உள்ளது.
* திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது.
* சுமார் ரூ.26,000 கோடி அளவுக்கு மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது.
* மாநில சொந்தவரி வருவாய் குறைந்தது குறித்து சட்டசபையில் இன்று எந்த விளக்கத்தையும் நிதியமைச்சர் கூறவில்லை.
* நிதி நிர்வாக திறனற்ற திமுக அரசால் மக்கள் மீது மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது.
* நிதி பற்றாக்குறையை குறைக்க மக்கள் மீது வரி சுமையை ஏத்துவதும் கடன் வாங்குவதும் நல்லதல்ல.
* மக்கள் மீது வரிச்சுமை அதிகமானதை தவிர வேறு எந்த சாதனையும் இல்லை.
* நிதி பற்றாக்குறை அதிகரித்தால் மக்களின் தலையில் வரிச்சுமை கூடும்.
* அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும், புட்டு பார்த்தால் சொத்தையாக இருக்கும் அதுதான் இன்றைய பட்ஜெட்.
* ஆண்டுக்கு 100 நாள் சட்டசபை நடக்கும் என்று கூறினார்கள் மொத்தமாகவே 140 நாள் தான் நடத்தினார்கள்.
* வேளாண்துறையில் நீர்வளத்துறையை சேர்த்தது ஏன்? வேளாண் பட்ஜெட் ஒரு ஏமாற்று பட்ஜெட்.
* கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றார்.
- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார்.
- கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா.
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அ.தி.மு.க. நூதன முறையில் விமர்சனம் செய்துள்ளனர்.
பட்ஜெட் என்ற பெயரில் 'மாபெரும் காது குத்தும் விழா' நடைபெற உள்ளது என பத்திரிகை அடித்து அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார். கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா. விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும்.
பின்குறிப்பு: சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல முறைகளில் மொய் வைக்கலாம் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
- கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
- கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்தார்.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் சமீப காலமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார்.
த.வெ.க.வில் இணைந்துள்ள மனோகரன் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். அதனை தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்த மனோகரன் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
அதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் த.வெ.க.வில் இணைந்தார். இவர் 2006- 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
வரும் தேர்தலில் த.வெ.க. சார்பில் இவர்கள் அவரவர்கள் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
- முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.
ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயாளர் இபிஎஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பரப்புரை வாகனத்தில் வருகை தந்த இபிஎஸ்-க்கு வழிநெடுகிலும் திரண்டு நின்ற மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பாஜகவின் களை கழக் அதிமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
காங்கிரசுக்கு திமுக கட்சி அடிமை. அதிமுக தன்மானம் உள்ள கட்சி.
முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.
அதிமுக ஆட்சி காலத்தின் விவசாயம் செழித்து இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குறைகள் என சுட்டிக்காட்ட முடியுமா?
ஜெயலலிதாவின் மறைவுக்குபின் பல பிரச்சனைகளை அதிமுக சந்தித்தது. தொண்டர்களின் ஆதரவால கட்சியை காப்பாற்றினோம்.
சட்டமன்றத்தில் நான் பெரும்பான்மையை நிரூபித்தபின் சட்டையை கிழித்துகொண்டு வீதியில் சென்றார் மு.க.ஸ்டாலின்.
சட்டமன்றத்தில்நான் பெரும்பான்மை நிரூபித்ததை முதலமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியேடு சீர்கெட்டு விட்டது. தமிழ்நாட்டில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலர்களுக் பாதுகாப்பு இல்லை.
ஸ்டாலின் நாட்டு மக்களை பற்றி சிந்திக்க மாட்டார். அவரது வீட்டு மக்களை பற்றி மட்டும்தான் சிந்திப்பார்.
நிர்வாக திறமையின்மை காரணமாக அரசு காலி பணியிட்கள் அப்படியே இருக்கிறது.
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வரி உயர்வு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
- ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த ‘விடியல் பயண திட்டம்’.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இன்றைக்கு இந்த பட்டுக்கோட்டை நகரத்திலே இந்த அற்புதமான வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே தஞ்சை செங்கிப்பட்டியிலே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கின்ற வாய்ப்பையும் பெற்றேன்.
தஞ்சை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த டெல்டா பகுதி கருணாநிதி மனசுக்கும் சரி, அண்ணாவுடைய மனசுக்கும் மிகுந்த நெருக்கமான ஒரு பகுதி. நம்முடைய முதலமைச்சர் 'நானும் ஒரு டெல்டாக்காரன்' தான் என்று அடிக்கடி பெருமையாக சொல்வார். டெல்டா மாவட்டத்தில் கருணாநிதி செல்லாத இடங்களே இல்லை. திராவிட இயக்கத்துடைய போர்ப்படை தளபதியாக இருந்த பட்டுக்கோட்டை அழகிரியை தந்த மண் இந்த பட்டுக்கோட்டை மண். பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சுகளையெல்லாம் கேட்டு திராவிட இயக்கத்திற்கு வந்தவர் தான் கருணாநிதி. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அந்த பட்டப் பெயரை கொடுத்ததே. பட்டுக்கோட்டை அழகிரி தான்.
அண்ணா, கருணாநிதி சிலைகளை தமிழ்நாடு முழுவதும் நாம் திறக்கிறோம் என்றால் அவர்களுடைய கொள்கைகளை, லட்சியங்களை தமிழ்நாடு முழுக்க கொண்டு போய் சேர்க்கிறோம் என்று அர்த்தம்.
இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த 'விடியல் பயண திட்டம்'. இதன் மூலம் தினமும் ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மடிக்கணினி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிர் மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதலமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியையும் சேர்த்து ரூ.5,000 ஆயிரம் வழங்கி உள்ளார். பொங்கல் பண்டிகைக்கும் ரூ.3,000 கொடுத்தார்.
மேலும் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,000 உயர்த்தி கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
இப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். இதனால் தான் நமது மாநிலம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றி எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசிடம் கேள்வி கேட்க மறுக்கிறார்.
அவர் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை.
எனவே 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் நமது கூட்டணி வென்று மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அதற்கு கட்சியினர் வீடு வீடாக சென்று நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். அடுத்து வருகிற 50 நாட்கள் நாம் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் அண்ணா, கருணாநிதி சிலைகள் முன்பு நின்று இன்று சபதம் ஏற்போம் என்பார்.
- சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.
- தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு அவர் விளக்கம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
அதேபோல் செங்கோட்டையனும் அரசியலுக்காக பேசி வருகிறார். அவர் அ.தி.மு.க.வில் இருந்த போது தனிப்பட்ட முறையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த போது பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்தார். தற்போது அவர் பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நயினார் நாகேந்திரன் குறித்தும் பேசி வருகிறார். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் சென்றால் வள்ளலார் ஆட்சி என்பார். தூத்துக்குடி சென்றால் வ.உ.சி. ஆட்சி என்பார். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.
தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது. தனது சொந்த செல்வாக்கில் ஜெயிக்க வேண்டும். மேலும் 30 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகிறார். ஆனால் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். அவர்கள் தி.மு.க.வில் எதுவும் அறுவடை செய்ய முடியுமா என்பதற்காக அங்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வெளியாக உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகிறார்கள்.
இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தி.மு.க. பம்பரமாக சுழன்று வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பல சிறிய கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தே.மு.தி.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தே.மு.தி.க.வை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழகத்தில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் ஒன்றாக மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாகவே பா.ஜனதா-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்திலேயே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதுபோன்ற சூழலில் தான் இன்னும் 2 வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அதற்குள் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்து தங்களது கூட்டணியில் அந்தக் கட்சி இருப்பதை எப்படியாவது உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தே.மு.தி.க. ஜனநாயக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று நம்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.






