search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "district"

    • மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆறுகளை பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் இன்று ஏ .ஐ. டி. யூ .சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்டத் தலைவர் சேவையா, மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்கத்தலைவர் முத்து உத்திராபதி நன்றி கூறினார்.

    • நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் ஒரத்தூர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒரத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 25 நாட்களான பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு முட்டை டி ஏ பி, அரை மூட்டை யூரியா கலந்து கொடுக்க வேண்டும். ஆனால் நாகை தாலுக்கா பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய டிஏபி மற்றும் யூரியாக்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தால் வழங்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாரிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறுவை தொகுப்பு திட்டம் வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மூலம் விலைக்கு வழங்க வேண்டும் எனவும் வருங்காலங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு–4, நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர் பஞ்சாயத்து வார்டு எண்–10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்–4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்–11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1, புளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்–3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண்–2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இது தவிர அம்மாபேட்டை யூனியன் சிங்கம்பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2ல் இருவர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்–3 ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் இருவர், கோபி யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து, வார்டு எண்–1ல் இருவர், மொடக்குறிச்சி யூனியன் 46புதூர் பஞ்சாயத்து வார்டு எண்–1ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் மூவர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்–2ல் மூவர் என, 7 பதவிக்கு அ.தி.மு.க, தி.மு.க. சுயேட்சை என 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    இந்த 7 பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சிங்கம்பேட்டை ஊராட்சி யில் ஒரு வாக்குச்சாவடி மையம், பெரிய புலியூரில் ஒரு வாக்குச்சாவடி மையம், தொப்பம்பாளையத்தில் ஒரு வாக்கு சாவடி மையம், கோட்டு புள்ளாபாளையத்தில் ஒரு வாக்குச்சாவடி மையம், 46 புதூரில் இரண்டு வாக்குச்சாவடி மையம், அத்தாணி பேரூராட்சியில் ஒரு வாக்கு சாவடி மையம், அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடி மையம் என 8 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர். காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

    பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்து வாக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தார்கள். அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

    இதேபோல் வாக்குப்பதிவு நுழைவு வாயிலில் சானிடைசர்கள் கையில் தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வெயில் காரணமாக சாமியான பந்தலும் போடப்பட்டிருந்தது. குடிநீர் வசதி கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. பூத் சிலிப் வழங்கப்பட்டது. முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 ஊராட்சிகளில் வாக்கு சீட்டு முறையில் பொதுமக்கள் வாக்களித்தனர்.

    அத்தாணி, அம்மா–பேட்டை பேரூராட்சிகளில் மின்னணு வாக்கு பதிவு பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

    தேர்தலை ஒட்டி ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள 24 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் வசதியாக இந்த பகுதியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், அரசு அரசு சார்ந்த நிறுவ–னங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

    • நாளை காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
    • இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களிலிருந்து முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி வருகிற 25,26-ந் தேதிகளில் நடக்கிறது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் எனப்படும் பிரமாண்டமான 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1800-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெற இருக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க போட்டி என்பதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்குட்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிசிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற ஜூன் 25,26 தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியை சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், காளீஸ்வரி கல்லூரியின் செயலாளர் ஏ.பி. செல்வராஜன் ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    இதில் முதலிடம் பெறும் மாணவர் மற்றும் மாணவியரை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியை நேரில் கண்டுகளிக்க தமிழக அரசு மற்றும் அணைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 25 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் 8வயது, 11 வயதிற்குட்பட்ட 3 சிறுவர், சிறுமியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3 வெகு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் பங்குபெற நுழைவு கட்டணம் இல்லை. அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பில் பதிவு செய்திருந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். பதிவு செய்ய இன்று (22-ந் தேதி) கடைசி நாள் ஆகும். போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் கணேஷ்பாண்டி (98437 57767), இன்பராஜலிங்கம் (70106 56213) ஆகியோரது கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 159 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை கஞ்சா விற்பனை தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ.89,720 கைப்பற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கடந்த மே மாதம் மட்டும் நடந்த 41 குற்ற வழக்குகளில் 21 வழங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.32 லட்சத்து 97 ஆயிரத்து 920 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் செய்து முடிக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகிவிடும். எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுமா என்று குழப்பம் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. #gajacyclone #byelection

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே நிலவுகிறது. திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வதற்காக திருப்போரூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் ‘பூத்’ வாரியாக வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

    வாக்காளர் பட்டியலில் உள்ளபடி வாக்காளர்கள் உள்ளார்களா? அல்லது முகவரி மாறி சென்று விட்டார்களா? என்று சரி பார்த்து வருகின்றனர். ஆனால், கஜா புயல் பாதித்த தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் எந்த கட்சியினரும் ஈடுபட வில்லை.

    எனவே இடைத்தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி தேர்தல் கமி‌ஷன் அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    அரசியல் சாசனப்படி காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    அப்படி தேர்தல் நடத்தும் போது அந்த மாநிலத்தில் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டிருந்தால் தேர்தல் நடத்தும் உகந்த சூழல் உள்ளதா? என்று மாநில அரசிடம் கருத்து கேட்பது வழக்கம்.

    ஏனென்றால் அவர்கள் தான் கிராமம் கிராமமாக வாக்குச்சாவடியை அமைத்து தர வேண்டும். அரசு ஊழியர்களை ஒதுக்க வேண்டும்.

    இப்போதைய சூழ்நிலையில் 12 மாவட்டங்களில் தேர்தல் அதிகாரியாக உள்ள மாவட்ட கலெக்டர்கள் புயல் நிவாரண பணிகளில் தான் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு ஊழியர்களும் அந்த பணியில் தான் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் திடீரென இடைத்தேர்தல் தேதியை அறிவித்தால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் கிடைக்காமல் போய்விடும். எனவே அந்த தவறை தேர்தல் கமி‌ஷன் செய்யாது.

    இடைத்தேர்தல் என்றாலே மாநில அரசிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தான் தேர்தல் தேதியை அறிவிக்க முடியும். அந்த வகையில் நாங்கள் தமிழக அரசுக்கு விரைவில் கடிதம் எழுதி கேட்க உள்ளோம். அவர்கள் தரும் பதிலை பொறுத்து தேர்தல் கமி‌ஷன் முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளை செய்து முடிக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகிவிடும். அதன்பிறகு தான் அந்த பணிகளில் இருந்து ஓரளவு விடுபட முடியும்.

    இப்போது டெல்டா மாவட்டங்கள் போர்க்களம் போல் சிதைந்து சின்னா பின்னமாகி கிடக்கிறது. இந்த சூழலில் தேர்தலை நடத்தலாம் என்று நாங்கள் அனுமதித்தால் அனைத்து பணிகளும் முடங்கிவிடும்.


    எனவே இப்போது தேர்தல் வேண்டாம். பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு விரைவில் கடிதம் எழுத இருக்கிறோம்.

    அதன் அடிப்படையில் தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி. தினகரன் கட்சியை தவிர மற்ற கட்சிகள் தற்போதைய சூழலில் இடைத்தேர்தலை விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ஏனென்றால் ஒரு தொகுதிக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை செலவு செய்ய வேண்டி வரும்.

    பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிக்கு தேர்தல் வந்தால் அலைச்சல், செலவு மிச்சமாகும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட ஆரம்பித்துள்ளனர். #gajacyclone #byelection

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் அபராதம் இன்றி 30-ந்தேதி வரை செலுத்தலாம் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். #GajaCyclone
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்கள் கஜா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் இந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய பொது மக்கள் அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த 30-ந் தேதி வரை செலுத்தலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone
    ×