search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric charge"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் அபராதம் இன்றி 30-ந்தேதி வரை செலுத்தலாம் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். #GajaCyclone
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்கள் கஜா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் இந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய பொது மக்கள் அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த 30-ந் தேதி வரை செலுத்தலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone
    ×