search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்த"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
    • தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் பால்வ ளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.

    தற்போது 45 லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக லிட்டராக உயர்த்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும், அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் ஆவின் போல கேரளா, கர்நாடாவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படு கின்றன. தற்போது பால் உற்பத்தி பகுதி மீறல் வந்து விட கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

    எனவே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம். தமிழகத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு தான் இன்சூ ரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாடுகளையும் இன்சூரன்ஸ் செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது.

    செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அது செயல்படாததற்கான காரணத்தை அறிந்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அச்சப்பட வேண்டாம். பாதிப்பு ஏற்ப டும் என பயப்பட வேண் டாம்.

    பால் உற்பத்தி நிறுவ னங்கள் கூட்டுறவு சட்டப் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பால் உற்பத்தி பகுதியில் விதி மீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல் போல தெரிகிறது. எனவே தான் 2 விஷயங்களை கூறி முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது. பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளன.

    ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் பொருட்களின் எண்ணிக்கை அதிகாரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ளது. மேய்ச்சல் நிலத்தை கண்டறிந்து மேம்படுத்தி பச்சை புல் தயாரிக்கும் திட்டம் கெண்டு வர ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை.

    பொதுவாக ஒரு மாநி லத்தில் செயல்படுகிற சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை.

    அமுல் நிறுவனம் கொள் முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆவின் சார்பில் இன்ஸ்சூரன்ஸ் உள்பட பல்வேறு விஷயங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் பால் உற்பத்தி யாளர்களின் கோரிக்கை களை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பால்வளத்துறை மூலம் மாடுகள் இனச்சேர்க் கைக்கு உயர்ரக மாடுகளின் விந்துவை சேகரித்து விந்து உறைவைப்பு நிலையம் முறையாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. நாட்டு இன மாடுகளில் தரமான மாடுகளை கண்டறிந்து அபிவிருத்தி செய்து இனப் பெருக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஓரிரு வாரங்களில் அனைத்து ஆவின் எந்தி ரங்களின் செயல்பாடுகளை ஆராய வேலை நடக்கிறது. அது முடிந்ததும் எந்த எந்திரங்களை மேம்படுத்த முடியும், மாற்றி அமைக்க முடியும் என்பது ஆராயப் படும். ஆவினில் பால் வாங்குவது பாதுகாப்பானது. ஆவின் தரத்துக்கு போட்டி யாக எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனை மேற் கொண்டார். இதை தொடர்ந்து அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நெல்லை சரகத்தில் உள்ள மாவட்டங் களில் சுமார் 10 வருடங்க ளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட நிலுவை யில் இருந்த 65 ஆயிரம் வழக்குகள் புலன் விசாரணை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை 554 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. 919 பேர் மீது பிணையில் வெளியே வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. குமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 63 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அவர்களிடமிருந்து 13½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    27 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 6 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் 161 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 வழக்குகளில் புலன் விசாரணையின் மூலமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்து 738 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் செல்போன்களில் குறுஞ் செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • வன அதிகாரி இளையராஜா தகவல்
    • கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 3 கட்ட மாக பறவைகள் கணக் கெடுக்கப்படுகிறது.முதல் கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்திலும் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 50 வன ஊழியர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம், தேரூர் சுசீந்திரம், வேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது.

    கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .இதனை வனத்துறை ஊழியர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட னர். கணக்கெடுப்பு பணியினை புத்தளம் மற்றும் தேரூர் பகுதியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை பறவைகள் வரத்து அதிகமாக காணப்படும்.புத்தளம், சாமிதோப்பு, தேரூர், வேம்பனூர், ராஜாக்கமங்கலம், புத்தளம் பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது. பறவை ஆர்வலர்கள், வன அதிகாரிகள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புத்தளம் பகுதியில் வழக்கத்தை விட குறைவான பறவைகள் தென்பட்டது. அங்கு பூநாரை பறவைகள் அதிக அளவு உள்ளது. சுசீந்திரம் பகுதியில் கூலகடா மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் தென்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து பறவைகள் தற்போது இடம்பெற தொடங்கி உள்ளன. ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளன. தற்போது நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    அடுத்த கட்டமாக மார்ச் மாதம் வனப் பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நகர் பகுதியில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். மொத்தம் 3 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 159 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை கஞ்சா விற்பனை தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ.89,720 கைப்பற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கடந்த மே மாதம் மட்டும் நடந்த 41 குற்ற வழக்குகளில் 21 வழங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.32 லட்சத்து 97 ஆயிரத்து 920 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

    ×