search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டு"

    • மருத்துவமனையின் தலைமை டாக்டரும், முக சிறப்பு நிபுணருமான தினக்ஸ்குமார் வரவேற்று பேசினார்.
    • முன்னாள் பேராசிரியர் நேசமணிதலைமை தாங்கி கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மற்றும் முகசீர மைப்பு மருத்துவமனையில் 16-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவில் கற்கோவில் ஆலய போதகர்கள் விக்டர் ஞானராஜ், ராஜ ஜெய்சிங், ஜெரோம் ஆகியோர் ஜெபம் செய்தனர். மருத்துவமனையின் தலைமை டாக்டரும், முக சிறப்பு நிபுணருமான தினக்ஸ்குமார் வரவேற்று பேசினார்.

    குழந்தைகள் நல டாக்டர் மனேஷ்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் பேராசிரியர் நேசமணிதலைமை தாங்கி கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் டாக்டர் ஸ்டெலின் தினக்ஸ் நன்றி கூறினார்.

    • திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா ஹாா்வி குமாரசாமி திருமண மண்டத்தில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா ஹாா்வி குமாரசாமி திருமண மண்டத்தில் வருகிற 6-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு திருப்பூா் கம்பன் கழகத்தலைவா்- ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் வரவேற்புரையாற்றுகிறாா். இதைத்தொடா்ந்து, கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் தலைமையில் கம்பன் காவியத்தில் கற்போா் நெஞ்சைப் பெரிதும் நெகிழச் செய்பவர் அயோத்தி பரதனே, கிஷ்கிந்தை வாலியே, இலங்கை கும்பகா்ணனே என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெறுகிறது.

    இதில், 'அயோத்தி பரதனே' என்ற தலைப்பில் சென்னை கோ.சரவணன், ஈரோடு வளா்மதி ஆகியோரும், 'கிஷ்கிந்தை வாலியே' என்ற தலைப்பில் திருச்சி விஜயசுந்தரி, ராஜபாளையம் உமாசங்கா் ஆகியோரும், 'இலங்கை கும்பகா்ணனே' என்ற தலைப்பில் பெருந்துறை ரவிகுமாா், திருப்பூா் பட்டயக்கணக்காளா் ஜெய்வநாயகி ஆகியோரும் பேசுகின்றனா்.

    மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான போட்டிகள், கருத்தரங்கமும் நடைபெறுகின்றன.

    முடிவில் கம்பன் கழக துணைச் செயலாளா் கெளசல்யா வேலுசாமி நன்றி கூறுகிறார். 

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
    • தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் பால்வ ளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.

    தற்போது 45 லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக லிட்டராக உயர்த்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும், அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் ஆவின் போல கேரளா, கர்நாடாவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படு கின்றன. தற்போது பால் உற்பத்தி பகுதி மீறல் வந்து விட கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

    எனவே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம். தமிழகத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு தான் இன்சூ ரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாடுகளையும் இன்சூரன்ஸ் செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது.

    செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அது செயல்படாததற்கான காரணத்தை அறிந்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அச்சப்பட வேண்டாம். பாதிப்பு ஏற்ப டும் என பயப்பட வேண் டாம்.

    பால் உற்பத்தி நிறுவ னங்கள் கூட்டுறவு சட்டப் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பால் உற்பத்தி பகுதியில் விதி மீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல் போல தெரிகிறது. எனவே தான் 2 விஷயங்களை கூறி முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது. பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளன.

    ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் பொருட்களின் எண்ணிக்கை அதிகாரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ளது. மேய்ச்சல் நிலத்தை கண்டறிந்து மேம்படுத்தி பச்சை புல் தயாரிக்கும் திட்டம் கெண்டு வர ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை.

    பொதுவாக ஒரு மாநி லத்தில் செயல்படுகிற சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை.

    அமுல் நிறுவனம் கொள் முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆவின் சார்பில் இன்ஸ்சூரன்ஸ் உள்பட பல்வேறு விஷயங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் பால் உற்பத்தி யாளர்களின் கோரிக்கை களை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பால்வளத்துறை மூலம் மாடுகள் இனச்சேர்க் கைக்கு உயர்ரக மாடுகளின் விந்துவை சேகரித்து விந்து உறைவைப்பு நிலையம் முறையாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. நாட்டு இன மாடுகளில் தரமான மாடுகளை கண்டறிந்து அபிவிருத்தி செய்து இனப் பெருக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஓரிரு வாரங்களில் அனைத்து ஆவின் எந்தி ரங்களின் செயல்பாடுகளை ஆராய வேலை நடக்கிறது. அது முடிந்ததும் எந்த எந்திரங்களை மேம்படுத்த முடியும், மாற்றி அமைக்க முடியும் என்பது ஆராயப் படும். ஆவினில் பால் வாங்குவது பாதுகாப்பானது. ஆவின் தரத்துக்கு போட்டி யாக எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனை மேற் கொண்டார். இதை தொடர்ந்து அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நெல்லை சரகத்தில் உள்ள மாவட்டங் களில் சுமார் 10 வருடங்க ளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட நிலுவை யில் இருந்த 65 ஆயிரம் வழக்குகள் புலன் விசாரணை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை 554 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. 919 பேர் மீது பிணையில் வெளியே வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. குமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 63 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அவர்களிடமிருந்து 13½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    27 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 6 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் 161 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 வழக்குகளில் புலன் விசாரணையின் மூலமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்து 738 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் செல்போன்களில் குறுஞ் செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மேயர் மகேஷ் தாக்கல் செய்தார்
    • 2023- 24-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மற்றும் கவுன்சில் கூட்டமும் இன்று நடந்தது.

    நாகர்கோவில், மார்ச்.31-

    நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகத்தில் 2023- 24-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மற்றும் கவுன்சில் கூட்டமும் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அகஸ்டினாகோகிலவாணி, ஜவகர், முத்துராமன் ,செல்வகுமார் கவுன்சிலர்கள் டி. ஆர். செல்வம், ஸ்ரீலிஜா, அனிதா சுகுமாரன், மீனாதேவ் ,நவீன் குமார், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொறியாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ராம் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2023 -24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு ஆணையர் ஆனந்தமோகன் மேயர் மகேஷிடம் வழங்கினார்.அதனை மேயர் மகேஷ் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்தார். கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    மாநகராட்சியில் அனைத்து பகுதி மக்களுக்கும் அத்தியாவசிய வசதிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சாலை வசதி, தெரு விளக்கு, கழிவு நீர் ஓடை கட்டுதல், குடிநீர் வினியோகம் ஆகியவற்றிற்கு அனைத்து வார்டுகளுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம், பூங்கா சீரமைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து வரி உயர்வு, புதிய கட்டிடங்களுக்கான சொத்து வரி மூலமாக கூடுதல் வருவாய் கிடைக்கும். சாலைகள் மேம்பாட்டிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ரூ.30 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

    அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 93 சதவீத பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.இதையடுத்து பஸ் நிலையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். வடசேரிபஸ்நிலையம் அண்ணாபஸ்நிலையம் ஆம்னி பஸ்நிலையங்கள் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 52 வார்டுகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 685 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சபையார் குளம், சுப்பையார்குளம், நீராடி குளம், செம்மங்குளம் ஆகிய வற்றை தூய்மைப்படுத்தி நீர் ஆதாரங்களை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் நகர மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே மாநகராட்சி செயல்படுகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் மற்றும் மூலதன நிதியாக இந்த ஆண்டுரூ. 234.98 லட்சம் வருவாய் கிடைக்கிறது. குடிநீர் மற்றும் வடிகால் நிதி மூலமாகரூ. 17 கோடியை 67 லட்சம் நிதி கிடைக்கிறது. இந்த 2023-24-ம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.252.64 லட்சம் நிதி கிடைக்கும். வருவாய் மற்றும் மூலதன செலவாக ரூ.239 கோடியே 57 லட்சமும் குடிநீர் மற்றும் வடிகால் செலவாக ரூ.15 கோடியை 91 லட்சம் செலவாகிறது.மொத்தம்ரூ. 255 கோடியே 48 லட்சம் செலவு ஆகிறது. இந்த ஆண்டு ரூ.2 கோடியே 84 லட்சம் பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வன அதிகாரி இளையராஜா தகவல்
    • கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 3 கட்ட மாக பறவைகள் கணக் கெடுக்கப்படுகிறது.முதல் கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்திலும் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 50 வன ஊழியர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம், தேரூர் சுசீந்திரம், வேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது.

    கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .இதனை வனத்துறை ஊழியர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட னர். கணக்கெடுப்பு பணியினை புத்தளம் மற்றும் தேரூர் பகுதியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை பறவைகள் வரத்து அதிகமாக காணப்படும்.புத்தளம், சாமிதோப்பு, தேரூர், வேம்பனூர், ராஜாக்கமங்கலம், புத்தளம் பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது. பறவை ஆர்வலர்கள், வன அதிகாரிகள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புத்தளம் பகுதியில் வழக்கத்தை விட குறைவான பறவைகள் தென்பட்டது. அங்கு பூநாரை பறவைகள் அதிக அளவு உள்ளது. சுசீந்திரம் பகுதியில் கூலகடா மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் தென்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து பறவைகள் தற்போது இடம்பெற தொடங்கி உள்ளன. ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளன. தற்போது நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    அடுத்த கட்டமாக மார்ச் மாதம் வனப் பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நகர் பகுதியில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். மொத்தம் 3 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.1¾ கோடி பொருட்கள் பாதுகாக்கப்பட்டன
    • தீயணைப்பு துறையினர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நாகர் கோவில், கன்னியா குமரி, திங்கள்சந்தை, தக்கலை, குளச்சல், குழித்துறை, குலசேகரம் மற்றும் கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இங்கு வேலை பார்த்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் தீ விபத்து நடந்தால் தகவல் கிடைத்த உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் குளங்கள் மற்றும் ஓடைகளில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை மீட்பதிலும் தீயணைப்பு வீரர்களின் பங்கு முக்கிய மாக உள்ளது.

    குமரி மாவட்ட தீய ணைப்பு நிலையங்களுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 344 தீ விபத்து அழைப்புகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீயை அணைத்ததின் மூலமாக ரூ.1.78 கோடி மதிப்பிலான பொருட்கள் பாதுகாக்கப்பட்டன. அதே நேரம் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

    இதே போல கிணற்றில் தவறி விழுந்தது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது, குளத்தில் மூழ்கியது உள்ளிட்டவை தொடர்பாக 860 மீட்பு அழைப்புகள் வந்தன. அதில் உடனுக்குடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதில் 111 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    • 75 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    • 142 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய 206 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 142 பேரின் வங்கிக் கணக்கு களை போலீசார் முடக்கி உள்ளனர்.கைது செய்யப்பட்ட 142 பேரில் 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்க ளையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள்.இந்த ஆண்டு 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அடிதடி வழக்கில் 28 பேரும் பாலியல் வழக்கில் 7 பேரும் திருட்டு வழக்கில் 9 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் என மொத்தம் 75 பேர்குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர்.

    102 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருட்டு வழக்குகளை பொருத்தமட்டில் மாவட்டம் முழுவதும் 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 352 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ. 2 கோடியே 54 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் காணாமல் போன செல் போன்களை கண்டு பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதான் அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டில் 722 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.86 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் மீதும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் 1325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 27 லட்சத்து 42 ஆயிரத்து 696 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 2 லட்சத்து 17ஆயிரத்து 307 ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடந்துள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்புகள் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. 1030 விபத்துக்கள் நடந்ததில் 1462 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 270 பேர் பலியாகி உள்ளனர்.

    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தகவல்
    • கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து செல்வது வழக்கம்.

    கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 24 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதம் 73 ஆயிரத்து 700 பேரும், மார்ச் மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேரும், மே மாதம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஜூன் மாதம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேரும், ஜூலை மாதம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேரும், ஆகஸ்ட் மாதம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேரும், செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், அக்டோபர் மாதம் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரும், நவம்பர் மாதம் 2 லட்சத்து 9 ஆயிரம் பேரும், கடந்த டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர். மொத்தத்தில் கடந்த ஆண்டில் 17 லட்சம் பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்தனர்.

    இதில் கடந்த ஆண்டில் டிசம்பர் மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 53 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 159 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை கஞ்சா விற்பனை தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ.89,720 கைப்பற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கடந்த மே மாதம் மட்டும் நடந்த 41 குற்ற வழக்குகளில் 21 வழங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.32 லட்சத்து 97 ஆயிரத்து 920 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

    • எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    இதில் எக்ஸல் கல்வி நிறுவன தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதன் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    எக்ஸல் பொறி யியல் கல்லூரி முதல்வர் பொம்ம ண்ண ராஜா, எக்ஸல் காலேஜ் ஆப் ஆர்கி டெக்சர் ரூபிளானிங் முதல்வர் பாலமுருகன், எக்ஸல் கல்வியியல் கல்லூரி முதல்வர் சைமன் அருண் பாரத்குமார் மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் கலை மகள் ஆகியோர் ஆண்ட றிக்கை வாசித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சவுகட்டசென் பேசும் போது, மாணவர்கள் கல்லூரி படிப்பினை வெற்றி கரமாக முடித்து வேலை வாய்ப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனைகள வழங்கினார்.

    தெடர்ந்து நடிகர் சதிஷ் பேசும் போது சகஜமாகவும், யதார்த்தமாகவும் மாணவர்களுக்கு நற்பண்புகள், நற்கருத்துக்களையும், வாழ்வில் வெற்றி பெற சிறந்த அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து அவர் விடா முயற்சி நேர்மறையாக சிந்திக்க வும் கட்டாயம் பழகிக்கொள்ளவேண்டும் என்று பேசினார்.

    தொடர்ந்து 2022-ம் ஆண்டில் பல்வேறு பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள், விளையாட்டு துறையில் வெற்றி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் வரிசையில் முன்னிலை வகித்தவர்களுக்கான சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு வழங்கி னர்.

    அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் எக்ஸல் பொறியியல் கல்லூரி அட்மினிஸ்ட ரேஷன் இயக்குனர் (பொறுப்பு) அன்பு கருப்புசாமி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், கல்வியியல் கல்லூரி, கந்தசாமி கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் எக்ஸல் கல்வி குழும அலுவலர்கள் செய்தி ருந்தனர்.

    ×