search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா"

    • ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் பிரபல ரவுடிகளும் அடங்குவார்கள். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள், தங்களின் வழக்கு செலவு, குடும்ப செலவுக்கு சிறைக்குள் இருந்தபடி, செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாத, மாதம் மாமூல் வசூலித்து வருகின்றனர்.

    இந்த வசூல் பணிகளை 2-ம் கட்ட ரவுடிகள் வசூலித்து ரவுடியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர்.

    இதனை தடுப்பதற்காக ஜெயிலில் அடிக்கடி ரவுடிகள் அறைகள் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பார்சல் கிடந்தது. அதனை எடுத்து ஜெயில் வார்டன்கள் பிரித்து பார்த்தபோது, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அதனை பறிமுதல் செய்து காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

    ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது என தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
    • தாய்லாந்தில் போதைப் பொருள் சட்டங்கள் கடந்த சில ஆண்டாக தாராளமயம் ஆக்கப்பட்டிருந்தது.

    பாங்காங்:

    தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப் பொருள் சட்டங்கள் கடந்த சில ஆண்டாக தாராளமயம் ஆக்கப்பட்டிருந்தது.

    கஞ்சா வைத்திருந்தால் அபராதமும், சிறைவாசமும் விதிக்கப்படலாம். தனிநபர்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மருத்துவத்துக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை சட்டப்படி அங்கீகரித்த முதல் ஆசிய நாடு தாய்லாந்துதான். இதற்கான அனுமதி கடந்த 2018ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தாய்லாந்தின் புதிய அரசாங்கம் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சாவை தடை செய்ய அழுத்தம் கொடுக்கிறது; ஆனாலும், மருத்துவ நோக்கங்களுக்காக அதனைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது

    தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பட்டியலில் இருந்து தாய்லாந்து சில ஆண்டுக்கு முன் கஞ்சாவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    • போலீசாரை கண்டதும் காரில் இருந்த 5 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது.
    • பிடிபட்ட 5 பேர் கும்பலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து காணப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரிக்கு அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவண குமார் மேற்பார்வையில் பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து பாண்டி, தலைமை காவலர் சேகர், ஆனந்த், அல்டஸ் பிவின் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் பேட்டை கண்டியப்பேரி குளத்து கரை பகுதியில் சிலர் சந்தேகப்படும்படியாக நிற்பதாகவும், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் அடிக்கடி சென்று வருவதாகவும் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மீண்டும் வந்த அதே காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    உடனே போலீசாரை கண்டதும் காரில் இருந்த 5 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது. ஆனால் போலீசார் அந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் வந்த காரை சோதனை செய்த போது அதில் 2 மூட்டைகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது ஏராளமான பண்டல்களில் சுமார் 25 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட 5 பேர் கும்பலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த கும்பல் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை வடக்கு காலனி தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பேச்சிமுத்து (வயது 27), தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கொம்பையா என்பவரது மகன் மதன் செல்வம் (22), தச்சநல்லூர் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த துரை என்பவரது மகன் முருகன் (20), அதே பகுதியை சேர்ந்த இசக்கி என்பவரது மகன் இசக்கி ராஜா (23), பேட்டை கண்டியபேரியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் அஜித்குமார் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? எங்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர்? இதுவரை யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிச்சா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.
    • உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் திருவள்ளுவர் காலனி 63-வது தெருவில் வசித்து வருபவர் சதீஷ். இவரது வீட்டில் நேற்று இரவு 2 மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்டுள்ளது. இதில் பால்கனி பகுதி தீப்பிடித்து எரிந்தது.

    இது தொடர்பாக கே.கே. நகர் போலீசில் சதீஷ் புகார் அளித்தார். அதில் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்பீடு ஹரீஸ் என்பவர் தனக்கு இன்ஸ்டாகிராமில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவர்தான் மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மது பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி வீட்டின் பால்கனியில் வீசி சென்ற ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சதீஷ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    சதீசும், ஹரீசும் நண்பர்களாக இருந்து பிரிந்துள்ளனர். இருவருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    முதலில் நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் பிரிந்துள்ளனர். சதீசின் கூட்டாளியான கிச்சா என்பவர் கடந்த ஜூன் மாதம் ஹரீசை தாக்கி காயப்படுத்தி உள்ளார். பின்னர் கிச்சா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.

    இதன் பிறகு ஹரீஸ், சதீசை அழைத்து நீ சொல்லித்தான் கிச்சா என்னை தாக்கினார். தற்போது உன்னுடன் யாரும் இல்லை. உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்து மண்ணெண்ணெய் பாட்டில்களும் ஹரீஸ் வீசி இருப்பது தெரிய வந்துள்ளது.

    18 வயதே ஆகும் ஹரீஸ் மீது கொலை மிரட்டல் வழக்கு இருக்கும் நிலையில் 19 வயது சதீஷ் மீது 3 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்திலேயே கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக தேனி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியை ஓட்டி அமைந்துள்ள இங்கு பெரும்பாலான வனப்பகு தியையொட்டி கஞ்சா பயிரிடப்பட்டு வந்தது.
    • பழக்கத்திற்கு பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் அடிமையாகி வருகின்றனர். இதனால் படிக்கும் காலத்தி லேயே தங்கள் வாழ்வை இழந்து போதைக்கு அடிமையாகி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

    வருசநாடு:

    தமிழகத்திலேயே கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக தேனி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியை ஓட்டி அமைந்துள்ள இங்கு பெரும்பாலான வனப்பகு தியையொட்டி கஞ்சா பயிரிடப்பட்டு வந்தது. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் தற்போது கஞ்சா செடிகள் இல்லாத நிலை உள்ளது.

    இருந்தபோதும் ஆந்திரா போன்ற வெளி மாநில ங்களில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு தமிழக த்தின் பல மாவட்டங்களு க்கும், கேரளாவுக்கும் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க ஆபரேசன் திட்டத்தின்மூலம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இச்செயலில் ஈடுபட்டவர்களின் சொத்து க்கள் பறிமுதல் செய்ய ப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    அதன்பிறகு சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடமலைக்குண்டு மயிலை ஒன்றியத்தி ற்குட்பட்ட கிராமங்களில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. சிறை ப்பாறை, கடமலை க்குண்டு, வருசநாடு, குமணன்தொழு ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது.

    இந்த பழக்கத்திற்கு பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் அடிமையாகி வருகின்றனர். இதனால் படிக்கும் காலத்தி லேயே தங்கள் வாழ்வை இழந்து போதைக்கு அடிமையாகி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். போதையில் மாணவர்கள் பிடிபட்டால் அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகின்றனர். ஆனால் கஞ்சா விற்பனை செய்பவ ர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்ப தில்லை.

    மேலும் கடமலைக்குண்டு, வருசநாடு, மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில் 24 மணி நேரமும் தடை யில்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கூடுதல் விலை கொடுத்தும் மதுபான ங்களை வாங்கி குடித்து வருகின்றனர்.

    காலையில் வேலைக்கு செல்லும் ெதாழிலா ள ர்களும் மதுபானம் குடித்து உடல்நலத்தை கெடுத்து வருகின்றனர். மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு மாண வர்கள் அடிமையா வதால் அவர்களை எவ்வாறு திருத்துவது என பெற்றோர்களும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

    போதைக்காக திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவ ங்களிலும் மாணவர்கள் ஈடுபடும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. எனவே கிராமங்களில் கஞ்சா மற்றும் மது விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
    • போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு தேனி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதுடன் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கடத்திச்செல்லப்படுகிறது.

    இதனைதடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மேலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு எஸ்.பி தனிப்படை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள்தேவி தலைமையிலான போலீசார் மறவபட்டி செல்லும் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மணியகாரன்பட்டி கிழக்குதெருவை சேர்ந்த முருகன்(54), அதே ஊரை சேர்ந்த செல்லபாண்டி(35), அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த 4.200 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டிற்குள் 12 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், 31 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 சாதா வகை செல்போன்கள், 2 டேப்லட் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையில் வைத்திருந்த ரூ.42 ஆயிரம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    இந்த வாகனங்களை கஞ்சா வியாபாரிகள் அடகில் வாங்கி வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த வாகனங்கள் அனைத்தும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் ஒரு லாரியில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    கைதான 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் தயார் படுத்தி வருகின்றனர்.

    • நன்னிலம்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அங்கு சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர்.

    திருவாரூர்:

    நன்னிலம் சுற்றுவட்டார பகுதியில் நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருக்கண்டீஸ்வரம் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், நன்னிலம் பகுதியை சேர்ந்த கோவிந்தவேல் (வயது 23) என்பதும், அவர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தவேலை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • திருப்பாதிரிப்புலியூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசாருக்கு கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற் பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீ சார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த வாலி பர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் கே.என். பேட்டை யை சேர்ந்த சிவாஜிகணேசன் (வயது 19) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாஜி கணேசனை கைது செய்தனர்.

    • இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.
    • 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா கடத்தி வந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (32), லிங்கேஷ் (28), சந்தானம் (30) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ரெயில் மூலம் வேலூருக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து சேலம் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்ல இருந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள கஞ்சா
    • பிரபல கஞ்சா வியாபாரி கைது


    திருச்சி


    மணிகண்டம் கள்ளிக்குடி மார்க்கெட் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர் யுவராஜா ஆகியோர் ரோந்து சென்று பார்த்தனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் போலீஸ் வருவதை பார்த்து தான் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை சாக்கு பையில் ஏதோ கட்டிவைத்திருந்ததை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார்.


    உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து அந்த வெள்ளை பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை எடுத்து போலீசார் எடை போட்டு பாத்த போது சுமார் 28.500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு பிடிபட்ட மர்ம ஆசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கண்தீனதயாளன்நகரை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 50) என்பது தெரியவந்தது.


    பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் சுமார் 46 கஞ்சா வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து தனிப்படை போலீசார் நைனா முகமதை கைது செய்தனர்.


    பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு 2 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். மேலும் கஞ்சா விற்று வைத்திருந்த ரூ5,750 பணம் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.




    • திருச்சி ஜங்ஷனில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் சிக்கினார்
    • மேலும் கேட்பாரற்று கிடந்த பையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

    திருச்சி,

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சட்ட விரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரெயில்வே ஜங்ஷனில் உள்ள 2-வது நடை மேடை சுரங்க பாதையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.பின்னர் அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்த போது 4 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 80 ஆயிரம். பின்னர் 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் நாயக் (26) என்பவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.மேலும் ரெயில் நிலையத்தில் நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில்14 கிலோ எடையுள்ள 4 மூட்டை கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனை கடத்தி வந்த நபர் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இந்த கஞ்சா பொட்டலங்கள் கவுரா எக்ஸ்பிரஸ் மூலம் ஒடிசா திருச்சிக்கு கடத்தி பெறப்பட்டதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

    • திருச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது

    திருச்சி.

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பிரியா (வயது 48) மற்றும் கேசவன் மனைவி முத்துமதி ( 60 ) ஆகிய 2 பெண்களை கைது செய்துள்ளனர்.

    மேலும் திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீரங்கம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை உறையூர் போலீசார் கைது செய்து காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    இதேபோன்று உறையூர் விக்டோரியா ரோடு பெட்ரோல் பங்க் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஒரு சிறுவன் பிடிபட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சம் ஆகும். இது தொடர்பாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் ரெயில்வே ஜங்ஷன் போர்டிகோ பகுதியில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஒரு வாலிபர் சிக்கினார். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜாகபந்து நாயக் (32) என்பது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் எடமலைப்பட்டி புதூர் மற்றும் கோட்டை காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் கஞ்சா வழக்குகளில் 2 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ×