search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tournament"

    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழியனுப்பி வைத்தார்
    • 3 அணியை சேர்ந்த 30 விளையாட்டு வீரர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    36-வது அகில இந்திய அளவிலான சீனியர், ஜூனியர் மற்றும் ஆடவர் மகளிர் கயிறு இழுக்கும் போட்டி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 9-ந்தேதி வரை மகாராஷ்டிரா மாநிலம் பால்காரில் நடைபெற உள்ளது.

    போட்டியில் புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக 3 அணியை சேர்ந்த 30 விளையாட்டு வீரர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்களை தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் புதுவை ரெயில் நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பாரதி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் அகிலன், முருகன், சேட்டு என்ற வேல்முருகன், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டி

    அரியலூர்,  

    அரியலூரில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெறுகிறது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் மேரீஸ் பள்ளி ஆகிய பள்ளிகளில் போட்டி நடைபெற்று வருகிறது.

    போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம், 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற் றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வும் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை, நாடகம் என்பன உள்ளிட்ட தலைப்பு களில் இன்றுவரை நடை பெறும் இப்போட்டி களில் 50 பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டி னர்.

    போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாகூர் பாலச்சந்தர், செந்தில் வேல், பிரவின் குமார் உட்பட 25பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கின்றனர்.
    • கூடோ சங்க தலைவர் வளவன் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    புதுச்சேரி:

    குஜராத் மாநிலம் சூரத்தில் தேசிய அளவிலான கூடோ தற்காப்பு கலை போட்டி நாளை (புதன்கிழமை) தொடங்கி 29-ந் தேதிவரை நடைபெறுகிறது.

    இப்போட்டியில் புதுவை மாநில அணி சார்பில் புதுவை கூடோ சங்க பொதுச்செயலாளர் சந்தோஷ் குமார் தலைமையில் காலாப்பட்டு செல்வம், பாகூர் பாலச்சந்தர், செந்தில் வேல், பிரவின் குமார் உட்பட 25பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கின்றனர். இவர்களை வழிய அணுப்பும் விழா புதுவை பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி மாநில கூடோ சங்க தலைவர் வளவன் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ராஜ், மூத்த பயிற்சியாளர்கள் ஆறுமுகம், அசோக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன

    • போட்டிக்கான ஏற்பாடுகளை பாக்ஸிங் சங்க பொதுச்செயலாளர் கோபு செய்து வருகின்றார்.
    • மாநில விளையாட்டு சங்க தலைவர் கராத்தே வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பாக்ஸிங் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிகள் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில்   தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    பாக்ஸிங் சங்கத் தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் திரைப்பட நடிகர் தினா துணைத் தலைவர் முத்து கேசவலு ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் நடந்து வருகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை பாக்ஸிங் சங்க பொதுச்செயலாளர் கோபு செய்து வருகின்றார்.

    இந்தப் போட்டிகளில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட பாக்ஸிங் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    போட்டிகளை புதுவை மாநில விளையாட்டு சங்க தலைவர் கராத்தே வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    • குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப்போட்டிகள் அனைத்திலும் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.
    • உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக்குமார், பாபின் டிசூசா, ராமு ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கடற்கரை கையுந்துபந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

    உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர். இறகு பந்து மூத்தோர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை பெற்றனர். சதுரங்கப்போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக இளையோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர்.

    குறுமைய அளவில் நடைபெற்ற குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப்போட்டிகள் அனைத்திலும் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டு போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    தொடர்ந்து 9 வருடங்களாக ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் குறுமைய அளவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக்குமார், பாபின் டிசூசா, ராமு ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • கிராம நிர்வாகி அலுவலர்களின் கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் வட்ட கிராமநிர்வாகஅலுவலர் அணிகள் தேர்வு செய்து அந்த அணிகளுக்கு கிரிகெட்போட்டி வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ராஜாமணி வரவேற்றார். மாநில தலைவர் ராஜன் சேதுபதி போட்டியை தொடக்கி வைத்தார். இதில் திருமங்கலம் அணி வெற்றி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரராக திருமங்கலம் சர்வேயர் மணி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு திருமங்கலம் தாசில்தார் பார்த்திபன் பரிசுகள் வழங்கினார். முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

    • மணப்பாறையில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி
    • பல்வேறு துறைகளை சார்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

    மணப்பாறை

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவில்பட்டி சாலையில் உள்ள பிரமாண்ட திடலில் மணப்பாறை ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் நேற்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த போட்டியில் ஹரியானா, டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மும்பை, கர்நாடகா, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60 க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளது. இதே போல்பல்வேறு துறைகளை சார்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

    ஆண், பெண் என அணிகளுக்கு தனி தனியாக நடைபெறும் கபடி போட்டியின் தொடக்கமாக நேற்று முதல் போட்டியை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார். ஆனால் போட்டி தொடங்கியதுமே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. இன்றிலிருந்து தொடர்ந்து நடைபெறும் போட்டியின் நிறைவாக இறுதி போட்டி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது.

    இந்த போட்டியை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைப்பதோடு பரிசுகள் வழங்குகின்றனர். இதில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 1.50 லட்சமும்,

    இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ஒரு லட்சமும், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரத்து ஒரு ரூபாயும், 4ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படஉள்ளது. இதே

    போல் பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 1.25 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 75 ஆயிரமும், 3 ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரத்து ஒரு ரூபாயும், 4ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படஉள்ளது. போ ட்டியை பார்வையாளர்கள்

    கண்டுகளிக்கும் வகையில் பிரமாண்ட கேலரிகள் அமைக்க ப்பட்டுள்ளது.

    • அரியலூரில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கோகோ போட்டி
    • போட்டிகளில் 15 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில், குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் ஆக.2 ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில், அரியலூர் குறுவட்டத்துக்கான கோகோ போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியினை மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடக்கி வைத்தார். இதில் 14,17,19 வயது என 3 பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் 15 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    போட்டிகளுக்கு நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், இளவரசன், செல்வம், தினேஷ்குமார், கலையரசி, ஜோஸ்பின் மேரி உள்ளிட்டோர் பணியாற்றினர்.

    • மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூரில் இந்திரன் கிரிக்கெட் கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான 4-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. 10 ஓவர் கொண்ட போட்டி நாக் அவுட் முறையில் போட்டி நடந்தது.

    இதில் 45 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்ட னர். முதல் பரிசை ராஜபாளையம் ஆக்டிவ் சோலைசேரி அணி 83 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று பரிசுக்கான தொகை ரூ.9,011, வெற்றி கோப்பை யும் தட்டி சென்றது.

    2-ம் பரிசை தெற்கு வெங்காநல்லூர் இந்திரன் அணி 64 புள்ளிகள் பெற்று ரூ.6,011 வெற்றி கோப்பையை யும் வென்றது. முதல் மற்றும் 2-ம் பரிசுகள் எம்.பி. தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக வழங்கப்பட்டது. பரிசுகளை ரவிராஜா, பேராசிரியர் கந்தசாமி வழங்கி பாராட்டி பேசினர்.

    3-ம் பரிசை தென்மலை 11 ஸ்டார் அணியும், 4-ம் பரிசை மீனாட்சிபுரம் 11 ஸ்டார் அணியும், 5-ம் பரிசை ராஜபாளையம் எங்ஸ்டார் அணியும் பெற்ற னர்.

    ராஜபாளையம் வட் டார அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிக்கு கரூர் வீரர்கள் 71 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர்
    • கலெக்டர் பிரபு சங்கர் வாழ்த்து தெரிவித்தார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு 71 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள், வீராங்னைகளுக்கு டி-சர்ட் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு டி-சர்ட் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்று தொடக்கம் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி அடுத்த மாதம் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.கரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் மாவட்ட அளவில் பல்வேறு அணிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பள்ளி பிரிவு, கல்லூரி பிரிவுகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் கையுந்துபந்து, கபடி மற்றும் சிலம்பம் போன்ற விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 71 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

    மாவட்ட அளவில் பல்வேறு அணிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கரூர் மாவட்ட சார்பில் கலந்து கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.விளையாட்டு வீரர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் இந்த பயணத்தை மகிழ்ச்சியாகவும் சிறப்பாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற உங்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் உமாசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியை சர்வதேச நடுவர் பகவத்சிங் தொகுத்து வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான தேக்வோண்டோ போட்டிகள் லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    சப் ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் என 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை புதுச்சேரி தேக்வோண்டோ மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளியும், 2-ம் இடத்தை மேஜிக்லெக் தேக்வோண்டோ மார்ஷல் ஆர்ட்ஸ் கிளப்பும், 3-ம் இடத்தை புத்தா சாம்பியன் தேக்வோண்டோ கிளப்பும் பெற்றனர்.

    இப்போட்டியை பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத் தலைவரும் வேளாண் துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் மற்றும் துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் தொழில் அதிபரும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகருமான புவனா என்கிற புவனேஸ்வரன் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தார். சங்க நிறுவனத் தலைவர் ஸ்டாலின், ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகரன் மற்றும் சி.இ.ஓ. முத்துகேசவலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீயணைப்புத்துறை அதிகாரி ரித்தோஷ்சந்திரா, கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

    நிகழ்ச்சியில் சங்க செயலாளர் மஞ்சுநாதன் வரவேற்புரை ஆற்றினார், பொருளாளர் அரவிந்த் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை சர்வதேச நடுவர் பகவத்சிங் தொகுத்து வழங்கினார், பிரேவ் ஹார்ட் தேக்வோண்டோ பயிற்சி பள்ளியின் செயலாளர் நந்தகுமார் விழா ஏற்பாடு களை செய்திருந்தார்.

    வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்கின்றனர்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகுபந்து போட்டியில் வள்ளியூர் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
    வள்ளியூர்:

    திருவனந்தபுரத்தில் கேரளா இறகுபந்து அகாடமி சார்பில் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான 4-ம் ஆண்டு அகில இந்திய பெண்கள் இறகுபந்து போட்டி நடைபெற்றது.

    இப் போட்டியில் தேசிய அளவிலான அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.
    இரட்டையர் பிரிவினருக்கான இறுதி போட்டியில் வள்ளியூர் எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியும் அசாம் மாநில அணியும் மோதியது. எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியில் அதன் கோச்சர் பிரியா கவின்வேந்தன் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த போன்ஷியா ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆடினர்.

    இந்த அணி அசாம் அணியை தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.  மேலும் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரியா கவின்வேந்தன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

     வெற்றி பெற்ற வீராங்கனைகளை வள்ளியூர் வணிகர் நலச்சங்க தலைவர் எட்வின் ஜோஸ், இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சங்கரவெங்கடேசன், அரசு மருத்துவர் கவிதா சங்கரவெங்கடேசன், வழக்குரைஞர்கள் கல்யாணகுமார், ராஜஜெகன், தெட்சணமாறநாடார் சங்க கல்லூரி பேராசிரியர்கள் பாலமுருகன், புஷ்பராஜ், மேக்ரோ ஐ.டி.இ. தாளாளர் பொன்தங்கதுரை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
    ×