search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு.
    X

     வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் வழங்கினார்.

    கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு.

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • பல்லடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன.

    பல்லடம்:

    பல்லடம் அருகே தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது .இந்த போட்டியில் பல்லடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன. அதில் இறுதி போட்டியில் கரைப்புதூர் சி.ஆர்.அணி வெற்றி பெற்றது. இதன் பரிசளிப்பு விழாவில்,கிழக்கு ஒன்றிய கழக இளைஞரணி அமைப்பாளரும் பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு கருணாநிதி பிறந்த நாள் நினைவு கோப்பையை திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இல.பத்மநாபன் வழங்கினார். சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகையை பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×