என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Olympiad Chess"
- ஆகஸ்ட் 10-ந் செஸ் போட்டி நடக்கிறது
- பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை கலெக்டர் பார்வையிட்டார்.
திருப்பத்தூர்:
கோவையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா வரவேற்றார் மாமல்லபுரத்தில் வரும் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி கோவையிலிருந்து நேற்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா பெற்றுக்கொண்ட பின்னர் ஜோதியை ஏந்தியபடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி வந்தார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகவை திட்ட இயக்குனர் கு. செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, கலெக்டர் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் ஆகியேர் இருந்தனர்.
முன்னதாக திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உட்பட கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்டத்தில் இருந்து போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.
- இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.
நெல்லை:
44-வது ஒலிம்பியாட் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் 180 நாட்டை சேர்ந்த சுமார் 1,800 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த போட்டியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக 15 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு தனி தனியாக போட்டிகள் நடத்தி அதில் முதல் இடம் பெறும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போட்டியை கண்டு களிக்கவும் மற்றும் அங்கு வீரர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது .
அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அனைத்து இந்திய சதுரங்க பெடரேஷன் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் அனுமதியோடு நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர். நாளையும் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும். நுழைவு கட்டணம் கிடையாது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்