search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் மாநில அளவிலான  கோ-கோ விளையாட்டு போட்டி
    X

    வெற்றிபெற்ற அணியினரை படத்தில் காணலாம்.

    இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டி

    • ஆலங்குளம் அருகில் உள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் மாநில அளவிலான 2 நாள் கோ-கோ விளையாட்டு போட்டி நடந்தது.
    • போட்டியில் ஓசூர், ஈரோடு, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கோயம் புத்தூர், மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 65-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகில் உள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் சொக்கலிங்கம், ஞானப்பூ நினைவு சுழற்கோப்பைக்கான 2-ம் ஆண்டு மாநில அளவிலான 2 நாள்கோ-கோ விளையாட்டு போட்டி அப்பள்ளியின் மைதான த்தில் நடந்தது.

    இந்தப் போட்டியில் ஓசூர், ஈரோடு, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கோயம் புத்தூர், மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 65-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.வெற்றி பெற்ற அணியின ருக்கு பரிசளிக்கும் விழா நடந்தது.

    இந்த விழாவுக்கு பள்ளியின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.பள்ளியின் தாளாளர் புனிதா செல்வி முன்னிலை வகித்தார்.முதல்வர் பிரவீன்குமார் வரவேற்றார்.

    தமிழ் ஆசிரியர் ஜான்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை வனத்துறை சரக அலுவலர் சரவணகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினரை பாராட்டி சான்றிதழ்,பரிசு மற்றும் சுழற்கோப்பையினை வழங்கினார்.

    விளையாட்டு போட்டியினை உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமார், திலீப்குமார்,சுதா,நிர்வாக அலுவலர் சிவக்குமார், அலுவலக பணியாளர்கள் லட்சுமி,சாந்தி,நர்மதா, செவி லியர் மெர்சி ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழா முடிவில் தமிழ் ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.

    Next Story
    ×