என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவில் சதுரங்க போட்டி
    X

    மாவட்ட அளவில் சதுரங்க போட்டி

    • மாவட்ட அளவில் சதுரங்க போட்டி நடந்தது
    • தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரி வளாகத்தில்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா சதுரங்க கழகம் துவக்க விழா தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    சதுரங்க கழக தலைவர் டி.கே. அமிர்தாசந்திரசேகர் தலைமை வகித்தார். செயலாளர் புவனேஸ்வரி தனபால். இணைச்செயலாளர் தொட்டியம் ஸ்ரீ சபரி வித்யாலயா வக்கீல் ஜி. பிரசாந்த், பாலசமுத்திரம் விஜயலட்சுமி மெட்டல் . முத்துக்குமார், பொறியாளர் மாரியப்பன் நிர்வாக குழு உறுப்பினர்கள் நாகப்பா, மருதை கார்த்திகைபட்டி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரவி, எம். புத்தூர் தீபன்ராஜ், ஓவிய ஆசிரியர் செந்தில் குமார், சந்திரகுமார், பார்கவி, முருகானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்க கௌரவ பொறுப்பாளர்கள் தொட்டியம் வட்ட அனைத்து வணியர்கள் சங்க தலைவர் பிரபு, நிர்மலா, ஆட்டோ மொபைல்ஸ் பூபதி, ஆசிரியர்முகமதுஃபரூக், உள்பட சதுரங்க கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பின்பு நடந்த நான்காவது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தொட்டியம் வெற்றி விநாயகர் கல்லூரி சேர்மன் ஜி.சேகர், கல்லூரி முதல்வர்கள் அருள்குமார், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தையன் வழங்கினார் .

    Next Story
    ×