search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்டம்"

    • ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
    • ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி கள் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு நடத்தப் பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக வருகிற 14-ந்தேதி காலை 8 மணிக்கு புத்தேரி-அப்டா மார்க்கெட் அணுகு சாலை யில் நடைபெற உள்ளது.

    13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவி களுக்கு 10 கிலோ மீட்டரும், 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும், 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 20 கிலோ மீட்டரும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    போட்டியில் வெற்றி| பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 என்றும் பரிசு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    போட்டிகளின் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளுக்கு விளை யாட்டு அலுவலகம் பொறுப் பேற்காது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும்.

    சொந்த சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும். போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்க னைகளுக்கு பரிசு தொகை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ மட்டுமே வழங்கப் படும். எனவே போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களுடைய வங்கி புத்தக நகலினையும், ஆதார் நகலினையும் கொண்டு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விருப்ப முள்ள மாணவ-மாணவி கள் விதி களை பின்பற்றி புத்தேரி அப்டா அணுகு சாலையில் 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடக்கிறது.
    • https//naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    உலக திறன் போட்டிகள் 1950-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 77 நாடுகள் பங்குபெறும் 47-வது உலகத்திறன் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் அடுத்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த 748 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து முதற்கட்டமாக போட்டியாளர்களின் திறன்களை சோதித்தறியும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடக்கிறது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் நுழைவுச்சீட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் https//naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04652-264463, 94435 79558 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வயல் உழவு பணி, நாற்றுப் பாவும் பணிகள் நடை பெற்று வந்தது.
    • மாவட்டம் முழுவதும் விதை நெல்கள் தங்கு தடை இன்றி வழங்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிபூ, கும்பபூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    தற்பொழுது கும்பபூ சாகுபடி பணிகள் நிறைவடைந்த நிலையில் கன்னிபூ சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டினார்கள். வயல் உழவு பணி, நாற்றுப் பாவும் பணிகள் நடை பெற்று வந்தது.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக ஒரு சில பாசன குளங்களும் நிரம்பியுள்ளது. அணை களிலும் நீர்மட்டம் அதிக ரித்து உள்ளதையடுத்து சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    பூதப்பாண்டி, அரும நல்லூர், தக்கலை பகுதி களில் வயல் உழவு பணி நடைபெற்று வருகிறது. சுசீந்திரம் பகுதியில் ஏற்கனவே விவசாயிகள் நாற்றுபாவி இருந்தனர். தற்பொழுது மழை பெய்ததையடுத்து வயல்களில் உழவு பணிகளை மேற்கொண்டனர். நடவு பணியும் தொடங்கி நடந்து வருகிறது. பெண்கள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் விதை நெல்கள் தங்கு தடை இன்றி வழங்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதைகளை விதைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 6500 ஹெக்டோரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீரில் உள்ள தால் விவசாயிகள் சாகுபடி பணியில் ஆர்வம் காட்டி உள்ளனர். பேச்சிப் பாறை அணை நீர்மட்டத்தை பொறுத்தமட்டில் இன்று காலை 37.46 அடியாக உள்ளது. அணைக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. அணைக்கு 197 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப் படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 8.53 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 8.63 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 13.50 அடியாகவும், மாம்பழத்து றையாறு அணை நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் நூலகம் செயல்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    • ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நடமாடும் நூலகம் வாகனம் மூலம் கிராமப் பகுதிகளுக்கு நாளை முதல் (2-ந் தேதி) முதல் செல்ல உள்ளன.

    இதன் மூலம் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக புத்தகங்கள் படிப்பதற்கும் மேலும் மாணவ, மாணவிகள் பொது அறிவுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், தொழில் துறை தொடர்பான வழிகாட்டி கையேடுகளை படித்து தெரிந்து கொள்ள வும் முடியும்

    பழம்பெருமையையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புகளை தெரிந்து கொள்ளவும், பெண்களின் சுய முன் னேற்றத்திற்கு தன்னம்பிக்கை வளர்க்கவும், தேவையான நூல்களைப் படித்து அறிந்து கொள்ளவும் மற்றும் கவிதை தொகுப்புகள் கவிதை கட்டுரைகள் போன்ற சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் இந்த நடமாடும் நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் நடமாடும் நூலகம் செல்லும் பகுதிகளில் மாணவ, மாணவிகள் வாகனத்தி லேயே அமர்ந்து படிக்கும் வகையிலும் குழுவாக மாணவ, மாணவிகள் கருந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தில் 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நூலகம் உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்தவும் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தவும் பயனுள்ள வகையில் ஒவ்வொருவரும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ரெயில்வே துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    • விஜய்வசந்த் எம்.பி. தலைமையில் திரளானோர் பங்கேற்பு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும், ஐதராபாத் சார்மினார் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும், ரெயில்வே துறையை தனியாருக்கு விற்க கூடாது, கோட்டார் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும், தாம்பரம்- நாகர்கோவில் தினசரி ரெயில் இயக்க வேண்டும், ரெயில்வே மேம்பாலங்களை கட்ட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கன்னியா குமரி மாவட்டத்தை ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும் குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம் (கிழக்கு) மற்றும் பினுலால் சிங் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், நாகர் கோவில் மாநகர தலைவர் நவீன் குமார், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் செல்வகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி பேசுகையில், காங்கிரஸ் கட்சி எழுச்சி அடையும் நாள் வந்துவிட்டது. குமரி மாவட்ட வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. சென்னை- நாகர்கோவில் தினசரி ெரயில் இயக்க வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே சம்பந்தமாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தொடர்ந்து மத்திய அரசிடம் மனு அளித்து வருகிறேன். ஆனால் அதன் மீது மத்திய அரசு அலச்சியம் காட்டி வருகிறது என்றார்.

    தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் (விஜய் வசந்த்) மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறேன். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்.

    சென்னை- நாகர் கோவில் தினசரி ரெயில் இயக்க வேண்டும், புதிய மேம்பாலங்கள் அமைக்கவும் மற்றும் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை மத்திய அரசு அளித்துள்ளேன்.

    ஆனால் இன்றளவிலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. காங்கிரஸ் கட்சி எம்.பி என்பதால் எனது கோரிக்கைகள் மத்திய அரசால் புறக் கணிக்கப்படுகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மீண்டும் மத்திய அரசிடம் ரெயில்வே வளர்ச்சி பணிகள் குறித்து மனுக்கள் அளிப்பேன். அதிலும் எந்த வித முன்னேற்றம் இல்லை என்றால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    நாகர்கோவில்:

    உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    காதலர் தினத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில்,காதலை வெளிப்படுத்தும் கொண்டாட்டத்திற்கு பலரும் தயாராகி வரு கின்றனர். தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசு வழங்க பொருட்களை தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளதால், காதலர் தினத்தை கொண்டாட அங்கு ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை பீச், குளச்சல் பீச், வட்டவிளை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நாைள கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் காதலர் தின நாளில் சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. யாராவது அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பாரதிய ஜனதா கூட்டத்தில் கண்டனம்
    • மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங்களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானம்

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலசங்கரன்குழியில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலசங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன் தீர்மானங்களை முன் மொழிந்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் ஸ்ரீகலா, ராமநாதன், பொதுச் செயலாளர் ஜெக நாதன், மாவட்ட துணை பொதுச்செயலாளர் வினோத், செயலாளர் சுடர்க்கின மனோகரகுமார், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார், விளையாட்டு மேம்பாட்டு மாநில தலைவர் அமர் பிரசாத்ரெட்டி, ஒன்றிய பொருளாளர் சுகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் உட்பட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் பல மகளிர் பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை யின் இந்த நடவடிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா தேசிய தலைவராக பொறுப்பேற்ற ஜே.பி. நட்டா பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசுக்கும், கட்சிக்கும் அயராது உழைத்த பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டது. மாவட்டத்தில் அச்சமின்றி தேர்வு எழுதும் வழியில் பரிக்ஷா பெ சர்ச்சா நிகழ்ச்சிகளை கன்னியாகுமரி மாவட்டத் தில் சிறப்பாக நடத்திய கல்வியாளர் பிரிவு பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது. மாவட்டத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங் களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல இச்செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை, 4 வழி சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் தேவையான மணல் ஜல்லி கட்டுமான பொருட்கள் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு டன் தொடர்பு கொண்டு இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி முடிக்க அயராது பாடுபட்டு வரும் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ண னுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஒன்றிய தலைவர் பொன். சுரேஷ் நன்றி கூறினார்.

    • வன அதிகாரி இளையராஜா தகவல்
    • கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 3 கட்ட மாக பறவைகள் கணக் கெடுக்கப்படுகிறது.முதல் கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்திலும் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 50 வன ஊழியர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம், தேரூர் சுசீந்திரம், வேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது.

    கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .இதனை வனத்துறை ஊழியர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட னர். கணக்கெடுப்பு பணியினை புத்தளம் மற்றும் தேரூர் பகுதியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை பறவைகள் வரத்து அதிகமாக காணப்படும்.புத்தளம், சாமிதோப்பு, தேரூர், வேம்பனூர், ராஜாக்கமங்கலம், புத்தளம் பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது. பறவை ஆர்வலர்கள், வன அதிகாரிகள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புத்தளம் பகுதியில் வழக்கத்தை விட குறைவான பறவைகள் தென்பட்டது. அங்கு பூநாரை பறவைகள் அதிக அளவு உள்ளது. சுசீந்திரம் பகுதியில் கூலகடா மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் தென்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து பறவைகள் தற்போது இடம்பெற தொடங்கி உள்ளன. ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளன. தற்போது நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    அடுத்த கட்டமாக மார்ச் மாதம் வனப் பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நகர் பகுதியில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். மொத்தம் 3 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
    • மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. நேற்று இரவு கடுமையான பனிபொழிவு இருந்த நிலையில் அது இன்று காலை வரை நீடித்தது. அதிகாலை 8 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்ல தயாரான பொதுமக்கள் சிரமப்பட்டனர்.அரசு பஸ்களில் டிரைவர்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனம் ஒட்டி சென்றனர். எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கினர். குறிப்பாக கிராமப்புறங்களில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது.

    வயல்வெளி பகுதி களிலும் பனிபடர்ந்து இருந்தது. தேரூர், அரும நல்லூர், பூதப்பாண்டி, சுசீந்திரம், பொற்றையடி, அஞ்சுகிராமம் பகுதிகளில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு குளிர் காற்று வீசியது. அதிகாலையில் பனிபொழிவு ஒருபுறம் இருக்க மதியம் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

    இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி தொல்லையின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சளி தொல்லை அதிகமாக இருப்பதால் வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட புறநோயாளிகளின் வருகை அதிகமாக உள்ளது .மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    • ஏ.டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அறிவுரை
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் போலீஸ் அதிகாரிகளு டன் ஆலோ சனை மேற்கொண் டார்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனையின்போது, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றப்பட வேண்டும். வெளி மாநிலங்க ளில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கினார்.

    அதோடு கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இளை ஞர்கள், மாண வர்களை மீட்கும் வகையில் காவல்துறையினர் விழிப்பு ணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்றும் கூறினார். மேலும் மாவட்டத்தில் போதை மீட்பு சிகிச்சை மையங்களுடன் காவல்துறையினர் இணைந்து செயலாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

    இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்த வேண்டும். மேலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் போட்டோ பாயின்ட் ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ பாயிண்ட், பல்வேறு முக்கிய இடங்களில் வைக்கவும், பள்ளி, கல்லூரிகளில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். மேலும் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் பறிமுதல் செய்த கஞ்சா வைக்கப்பட்டுள்ள குடோனையும் ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டார்.

    • கிழங்குகள், மஞ்சள் குலைகள் விற்பனை அமோகம்
    • கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடு

    நாகர்கோவில்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டா டப்படுகிறது.பொங்கல் பண்டிகையொட்டி புதுமண தம்பதியினருக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது ஐதீகம். அதன்படி குமரி மாவட்டத்தில் புதுமணத் தம்பதியினருக்கு சீர்வரிசை பொருள்களை பெற்றோர் வழங்கி வருகிறார்கள். சீர்வரிசை பொருள்களாக பொங்கல் பானை,கரும்பு புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கடை வீதிகளில் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோட்டார் மார்க்கெட் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். தங்களுக்கு தேவையான பானைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். வட சேரி மார்க்கெட் அப்டா மார்க்கெட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கனவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் கிழங்கு வகை களின் விலையும் அதிகமாக இருந்தது.

    கட்டபொம்மன் சந்திப்பு வடசேரி பகுதிகளில் சாலையோரங்களில் கிழங்கு வகைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது.மேலும் பொங்கல் தயார் செய்ய பயன்படுத்தப்படும் பனை ஓலைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மஞ்சள் குலைகள், கிழங்கு வகைகளையும் பொது மக்கள் வாங்கி சென்றனர்.

    நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மார்த்தாண்டம் தக்கலை இரணியல் அஞ்சு கிராமம் பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. துணிக்கடைகளில் புத்தா டைகள் எடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.

    நாளை 15-ந் தேதி காலையில் வீடுகள் முன்பும் கோவில்கள் முன்பும் பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்ய உள்ளனர்.பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் ஆகும். 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.எனவே சுற்றுலா தளங்களில் பாதுகாப்பை அதிகரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, சொத்த விளை குளச்சல் வட்டக் கோட்டை பீச் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திற்பரப்பு அருவியிலும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்துள்ளனர். மாத்தூர் தொட்டில் பாலம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

    • சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்படுத்தப்படும்.
    • குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு காவல்துறை சார்பில் 4 தலைப்புகளில் ஓவியப்போட்டி கடந்த ஆண்டு நடந்தது. அப்போது சுமார் 3 ஆயிரம் ஓவியங்கள் கிடைக்க பெற்று 12-7-2022 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல இந்த ஆண்டும் போட்டிகள் நடக்கின்றன.

    கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல மற்றவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதும் ஆகும். சமூகமும், உலகமும் தற்போது இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். எனவே காவல்துறை தொடர்பான பல்வேறு அம்சங்களை பொறுத்து மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு வரைதல், ஓவியம், சுவரொட்டி ஆகிய போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    "போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமக்கள்-நமது பொக்கிஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள், காவல்துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை" ஆகிய தலைப்புகளில் போட்டியானது நடக்கும். 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒரு மாணவர் அதிகபட்சம் 3 தலைப்புகளில் பங்கேற்கலாம்.

    மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொ ருள்களில் பங்கேற்கலாம். மாணவர்களின் படைப்பு களை பெறுவதற்கான கடைசி தேதி வருகிற 20-ந்தேதி ஆகும். மாணவர்களின் படைப்புகளை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் அனைத்து ஓவியங்களையும் சேகரித்து அதனை ஒரு கவர் கடிதத்துடன் அனுப்ப வேண்டும். நேரடி யாகவோ அல்லது தபால் மூலமாகவோ நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு அனுப்ப வேண்டும். 3 உறுப்பி னர்களை கொண்ட குழு மாண வர்களிடம் பெறப்பட்ட அனைத்து படைப்பு களையும் ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும்.

    முடிவுகள் 25-ந்தேதி அறிவிக்கப்படும். சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.லும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 94981 03903 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×