என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் தொடர் மழை
- ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு
- பல நிலைகளில் தோட்டங்களில் பணி புரிந்த தொழிலாளிகள் வேலையின்றி தவிப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பொழியும் தொடர்மழை யால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு அடைந்துள்ளதால் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவிக் கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதா ரமாக விளங்குவது ரப்பர் பால் வெட்டி வடிக்கும் தொழிலாகும். இந்த மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தோட்டங்கள் ஆரல் வாய்மொழி, பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, பாலமோர், அருமநல்லூர், சுரு ளோடு, சித்திரங்கோடு, பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, கோதையார், வேளிமலை பகுதிகள், முட்டைக்காடு, அருமனை, மருந்துகோட்டை, குமாரகோயில், வட்டம், கல்குறிச்சி, இரணியல், புதுக்கடை, பாலமோர், காஞ்சாம் புரம் மற்றும் பல ஊர் பகுதிகளிலும் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தோட்டங்களில் பல நிலைகளில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை காக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால் ரப்பர் பால் வெட்டி வடிக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால் பல நிலைகளில் தோட்டங்களில் பணி புரிந்த தொழிலாளிகள் வேலையின்றி தவிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்