search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான செஸ் போட்டி
    X

    மாவட்ட அளவிலான செஸ் போட்டி

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி வருகிற 25,26-ந் தேதிகளில் நடக்கிறது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் எனப்படும் பிரமாண்டமான 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1800-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெற இருக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க போட்டி என்பதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்குட்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிசிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற ஜூன் 25,26 தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியை சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், காளீஸ்வரி கல்லூரியின் செயலாளர் ஏ.பி. செல்வராஜன் ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    இதில் முதலிடம் பெறும் மாணவர் மற்றும் மாணவியரை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியை நேரில் கண்டுகளிக்க தமிழக அரசு மற்றும் அணைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 25 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் 8வயது, 11 வயதிற்குட்பட்ட 3 சிறுவர், சிறுமியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3 வெகு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் பங்குபெற நுழைவு கட்டணம் இல்லை. அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பில் பதிவு செய்திருந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். பதிவு செய்ய இன்று (22-ந் தேதி) கடைசி நாள் ஆகும். போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் கணேஷ்பாண்டி (98437 57767), இன்பராஜலிங்கம் (70106 56213) ஆகியோரது கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×