search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disaster"

    ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலைய பக்கவாட்டு சுவரில் மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து விபத்து நடந்த பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. #TrainAccident #StThomas

    ஆலந்தூர்:

    கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள், பக்கவாட்டு சுவரில் மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து, இந்த பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் செல்வது நிறுத்தப்பட்டது. ஜூலை மாதம் 25-ந்தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் பரங்கிமலை ரெயில் நிலையம் வந்து அதிகாரிகளிடமும், பொது மக்களிடமும் கருத்து கேட்டார்.

    அதை தொடர்ந்து விபத்து நடந்த 4-வது பிளாட்பாரத்தை 2 அடி நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி ஆகஸ்டு மாதம் தொடங்கியது.

    இரவு பகலாக தண்டவாளத்தை மாற்றும் வேலை நடந்தது. அது இப்போது முடிவடைந்துள்ளது. இந்த பிளாட்பாரத்தின் வழியாக தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே செல்லுகின்றன. மின்சார ரெயில்கள் விடப்படவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் இன்று பரங்கிமலை ரெயில் நிலையம் வந்தார். அங்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள 4-வது பிளாட்பாரத்தை பார்வையிட்டார். அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    4-வது பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி சிறப்பாக நடந்துள்ளது. ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கருத்துக்களை கேட்ட பின்னர் இந்த பிளாட்பாரத்தின் தண்டவாளம் 2 அடி நகர்த்தப்பட்டுள்ளது. அதிகமான பயணிகள் தொங்கிக் கொண்டு சென்றதால்தான் பக்கவாட்டு சுவரில் அவர்கள் மோதி விழுந்துள்ளனர்.

    அடுத்து தானாக மூடும் கதவுகளை கொண்ட ரெயில் பெட்டிகளுடன் மின்சார ரெயில்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த பிளாட்பாரத்தில் மீண்டும் மின்சார ரெயில்களை விடுவது பற்றி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TrainAccident #StThomas

    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திண்டிவனம்:

    நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரையை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மீனாட்சிமுத்து (49), நெல்லையை சேர்ந்த மல்லிகா (60), தினேஷ்பாபு (27), சென்னையை சேர்ந்த சுசீலா (45), மேரிநிர்மலா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் (90), சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜகுமாரி (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை நடந்த சாலை விபத்தில் 370 பேர் பலியானதாக எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்தார். #accident

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை நடந்த சாலை விபத்தில் 370 பேர் பலியானதாக எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்தார்.

    சாலை விபத்துகளை குறைப்பது குறித்து விழிப்புணர்வு முகாம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் இன்று நடந்தது. எஸ்.பி. பிரவேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி.க்கள் அதிவீரபாண்டியன், ஆசைதம்பி, டி.எஸ்.பி.க்கள் ஸ்ரீதரன், அலெக்ஸ், பெண்கள் வன் கொடுமை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.க்கள் ஜெயசுப்பிரமணியன், ராதா கிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன் மற்றும் அசோகன் (தனிப்பிரிவு), மணி (வேலூர் போக்குவரத்து), சுந்தர மூர்த்தி (சத்துவாச்சாரி போக்குவரத்து) மற்றும் பள்ளி வாகன டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எஸ்.பி. பிரவேஷ்குமார் பேசியதாவது:- சாலைகளை அனைவரும் பயன்படுத்துகிறோம். வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 370 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விபத்தில் உயிர் இழப்புகள் குறைவு தான்.

    இந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தில் இறக்கின்றனர். சாலை விதிகளை மதித்து நடந்தாலே விபத்துகளை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும். குடித்து விட்டும், செல்போன் பேசிய படியும் வாகனங்களை ஓட்ட கூடாது.

    வாகனங்களை ஓட்டுபவர் தங்கள் குடும்ப நலனையும், எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகளன் குடும்ப நலனையும் மனதில் வைத்து ஓட்ட வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. அதி வீரபாண்டியன் பேசுகையில், பள்ளி வாகனங்களில் டிரைவர்களும், உதவியாளர்களும் மாணவ, மாணவிகளிடம் பாதுகாப்போடு கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். ‘குட் டச்... பேட் டச்’ தொடுதலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ஊனமுற்ற மாணவ, மாணவிகளை வாகனங்களில் ஏற்றும் போது மட்டுமே உதவி செய்ய வேண்டும். அதுவும் சரியாக பிடித்து தவறான தொடுதல் இல்லாமல் உதவ வேண்டும்.

    தவறான தொடுதல் உள்ளிட்ட பாலியல் புகார் வந்தால், போக்சோ சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும். 50 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளுக்கு போக்சோ சட்டப்பிரிவுகள் வழி வகுக்குகின்றன. கைதாகும் நபர்களின் குடும்பமே பாதிக்கப்படும் என்றார். #accident

    கேரளாவில் கார் விபத்தில் காயமடைந்த மாணவி ஹனான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பேஸ்புக்கில் நேரடி ஒளிப்பரப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். #Hanan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹனான், கல்லூரி மாணவி. படிப்பு செலவிற்காக மாணவி ஹனான் தெருக்களில் மீன் விற்று பணம் திரட்டினார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து மாணவி ஹனான் பிரபலமானார்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இச்சம்பவத்திற்கு பிறகு மாணவி ஹனானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்தன. அவர், தனது செலவிற்கு கிடைத்த பணத்தில் சிறு தொகையை கேரள வெள்ள நிவாரண நிதிக்கும் அளித்தார்.

    மேலும் ஹனான் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நேற்று முன்தினம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் திரும்பினார். அப்போது ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கார் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியது. இதில் ஹனான் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ஹனானை மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவி ஹனான்னுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சியை பதிவு செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக பதிவிட்டார். மேலும் ஹனானுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சியை நான்தான் முதலில் பதிவிட்டுள்ளேன் என்றும் குறிப்பு அனுப்பினார்.

    வாலிபரின் செய்கையால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சிகிச்சை அறையில் இருந்து வெளியேறுமாறு கூறினர். ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நோயாளிகளும் வாலிபரின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர் இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    இதுபற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனுமதியின்றி ஹனானின் சிகிச்சை காட்சிகளை பதிவு செய்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவர், பேஸ்புக்கில் பதிவிட்ட காட்சிகள் அடிப்படையில் அவரை தேடி வருகிறார்கள். #Hanan
    மக்களின் வாழ்க்கை பயணத்தை பேரழிவை நோக்கி இயக்கும் திறமையற்ற ரெயில் டிரைவராக மோடி திகழ்கிறார் என்று ராகுல்காந்தி கடுமையாக தாக்கினார். #Modi #RahulGandhi #TrainDriver
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

    நல்ல நாட்கள் வரும் என்று பா.ஜனதா அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆளும் கட்சிக்கு எதிராக மக்களின் கோப அலை வீசுகிறது. மோடி அரசுக்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்த நமது எம்.பி.க்கள் கடுமையாக உழைக்கவேண்டும். காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மோடி அரசை வீழ்த்தும் மாற்று சக்தியாக நம்மை மக்கள் பார்க்கின்றனர்.



    எனவே மக்களின் பிரச்சினைகளை நாம் புரிந்து கொண்டு வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், நாட்டில் நிலவும் சமத்துவமற்ற நிலை போன்றவற்றுக்கு தீர்வு காணவேண்டும். இதைச் செய்யவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.

    இது ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை பாதுகாக்கும் சக்திகளுக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் மிகப்பெரிய போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்றாகவேண்டியது மிக அவசியம்.

    வெறுப்பு அரசியல், மக்களிடையே பிளவை ஏற்படுத்துதல், வன்முறை, அரசியல் சாசனத்தை இஷ்டம்போல் வளைக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் செயல்படுவதை மக்களிடம் உறுதி செய்து, பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவேண்டும்.

    ஏனென்றால் மோடியின் ஆட்சியில், ஆட்சி நிர்வாகம் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மத்திய அரசு திறன் அற்றதாக உள்ளது. ஊழல் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டுள்ளது. மக்களை சமூக ரீதியாக பிளவு படுத்துவதும் வேகமாக பரவி வருகிறது.

    நாட்டு மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழ்மை உழலும் குடும்பத்தினரிடையே நமது எம்.பி.க்கள் நம்பிக்கையை உருவாக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் கடன் சுமை காரணமாக மக்களின் வாழ்க்கை நசுக்கப்பட்டு விட்டது. இதற்கு நிவாரணம் கிடைக்கும் விதமாக நாம் செயல்படவேண்டும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பும், தலித்துகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

    நான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று மோடி கூறினார். ஆனால் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரூ.1.3 லட்சம் கோடி அளவிற்கு மக்களின் பணம் சுருட்டப்பட்டு உள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு பெரும் தொழில் அதிபரை காப்பாற்றுவதற்காக இந்த ஊழலில் மோடி அரசு ஈடுபட்டு இருக்கிறது.

    விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையில் இருந்து 150 சதவீத லாபம் கிடைக்கச் செய்வோம் என்று மோடி உறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

    கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி, எனக்கு வாக்களியுங்கள் உங்களது சாதாரண வாழ்க்கைப் பயண ரெயிலை, மந்திர ரெயிலாக மாற்றி உங்கள் பயணம் சுகமாகவும், சிறப்பாகவும் அமைய பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் 4 ஆண்டுகளாகியும் இது நடக்கவில்லை. மாறாக ஒரு சர்வாதிகாரி போல் மாறி பேரழிவை நோக்கி இயக்கும் திறமையற்ற டிரைவராக மோடி திகழ்கிறார்.

    தனது மந்திர ரெயிலில் பயணம் செய்யும் மக்கள் மீது தனக்கு பொறுப்பு இருப்பதை அவர் கொஞ்சமும் உணரவில்லை. எனவே இனியும் மக்களை மோடி முட்டாளாக்க முடியாது. மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் ஒவ்வொரு கட்டமைப்பும் குறி வைத்து தாக்கப்படுகிறது. அதை தடுக்கவேண்டும். நாட்டின் கட்டமைப்புகள் அனைத்தும் மக்களின் குரலாக இருக்கவேண்டும். அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Modi #RahulGandhi #TrainDriver #tamilnews 
    கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் 10 லட்சம் இழப்பீடு வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தல்.

    சேலம்:

    கட்டுமான தொழிலாளர்கள் வாழும் உரிமையை நிலைநாட்ட தமிழகம் தழுவிய தொழிலாளர் சந்திப்பு இயக்கத்தை ஜூலை 1-ந்தேதி முதல் 30-ந் தேதியான இன்று வரை நடத்தினர். இதையொட்டி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது-

    நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் விண்ணப்பித்து 30 நாட்களில் வழங்க வேண்டும், ஈமச்சடங்கு உதவி தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பாக வழங்க வேண்டும்,

    இயற்கை மரணத்திற்கு 5 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பதிவு ஆவணப்படி 60 வயதை அடைந்தால் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

    இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, பி.எப். வைப்பு திட்டங்களை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. #Tamilnews

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணம் செய்த போது சுவரில் மோதி பலியான நாசரேத் என்ஜினீயர் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    நாசரேத்:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள். இந்த விபத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் அதே இடத்தில் நடத்த விபத்தில் விக்னேஷ்(20), ஸ்டீபன் முத்துராஜ்(23) ஆகிய 2 பேர் பலியானார்கள்.

    விக்னேஷ் தாம்பரம் சேனடோரியத்தை சேர்ந்தவர் ஆவார். ஸ்டீபன் முத்துராஜ் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர். ஸ்டீபன் முத்துராஜின் தந்தை ஐசக் ஜோதிராஜ் நாசரேத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது தாய் பியூலாபுல்மணி மூக்குப்பீறியில் ஒரு பாலர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஸ்டீபன் முத்துராஜுக்கு சுரேஷ் ஆல்வின் பால் (20), பெவின் புஷ்பராஜ் (18) ஆகிய 2 சகோதரர்கள் உள்ளனர். ஐசக் ஜோதிராஜ் தனது குடும்பத்துடன் நாசரேத் பிரகாசபுரத்தில் குடியிருக்கிறார்.

    ஸ்டீபன் முத்துராஜ் என்ஜினீயரிங் படித்துள்ளார். அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இதனால் அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார். விக்னேசும், ஸ்டீபன் முத்துராஜ் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பணி புரிகிறார். இதனால் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

    அவர்கள் தினமும் ஒரே ரெயிலில் பணிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் வேறொரு நிறுவனத்தில் பணிக்கு சேர நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அவர்கள் இரவில் மின்சார ரெயிலில் திரும்பி வந்தனர். பரங்கிமலை அருகே வந்த போது விக்னேசின் தோளில் மாட்டியிருந்த பை, தடுப்பு சுவரில் சிக்கியதால் ரெயிலில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

    ஸ்டீபன் முத்துராஜ் இறந்த சம்பவம் நாசரேத் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னையில் இருந்து சொந்த ஊரான நாசரேத்துக்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டது. அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    மகன் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகும் முன்பே பலியாகிவிட்டானே என அவரது தாய் பியூலாபுல்மணி மற்றும் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது. ஸ்டீபன் முத்துராஜ் கல்லூரி படிக்கும் போது தனது தந்தை கடை வைத்து கஷ்டப்பட்டு வேலை செய்ததை பார்த்து, காலையில் வீடு வீடாக பேப்பர் போட்டுக்கொண்டே படித்தார் என்று அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியருக்கு கோர்ட் உத்தரவிட்டும் நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, நேதாஜிவீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவசுந்தரி.

    கடந்த 10.6.2005-ம் ஆண்டு ஜெயபிரகாஷ் தனது மோட்டார்சைக்கிளில் பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    வில்லரசம்பட்டி அருகே வந்தபோது ஜெயபிரகாசுக்கு பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபிரகாஷ் இறந்துவிட்டார்.

    இது தொடர்பாக ஜெயபிரகாஷ் குடும்பத்தினர் ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்க கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 5 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஆனால் இந்த தொகை போதாது என்று அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதி ரூ.16 லட்சம் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.

    ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் ஜெயபிரகாஷ் மனைவி தேவசுந்தரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் வட்டியுடன் ரூ.20 லட்சத்து 20 ஆயிரத்து 9 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து இன்று கோர்ட்டு ஊழியர்கள் ஈரோடு பஸ் நிலையத்துக்கு வந்து ஈரோடு-கோவை செல்லும் அரசு பஸ், கோவை-ஆத்தூர் செல்லும் அரசு பஸ் என 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
    பரமக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையாரி பலியானார்.
    ராமநாதபுரம்:

    பரமக்குடி மைக்கேல் பட்டணத்தை சேர்ந்தவர் வேதமுத்து (வயது55). இவர் கமுதி தாலுகா கள்ளிகுளம் தலையாரியாக இருந்தார்.

    நேற்று பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்வதற்காக வேதமுத்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது முன்னால் சென்ற சைக்கிளை சரியாக கவனிக்கவில்லை.

    அதன் மீது வேதமுத்து மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சைக்கிளில் சென்ற கணக்கனேந்தல் ராமச்சந்திரன் (36) காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து பரமக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபிஇசக்கி பிரகதம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்.
    விபத்தில் உயிரிழந்த சென்னை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நஷ்டஈடு வழங்க இன்சூரன்சு நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ஆர்.நாராயணன். இவரது மகன் மணிகண்டன் (20). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ‘சூப்பர்வைசர்’ ஆக பணிபுரிந்தார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் டேங்கர் லாரியில் அமர்ந்து பயணம் செய்தார். அவருடன் 2 ஊழியர்களும் இருந்தனர். அப்போது நடந்த விபத்தில் லாரி கவிழ்ந்து மரணம் அடைந்தார்.

    இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே விபத்தில் இறந்த மணிகண்டனின் தந்தை நாராயணன் சென்னையில் உள்ள மோட்டார் விபத்துகள் இழப்பீடு நடுவர்மன்ற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    எனது மகன் மணிகண்டன் வருமானத்தில்தான் குடும்பம் இயங்கி வந்தது. தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டியதால் விபத்த ஏற்பட்டுள்ளது. எனவே லாரி நிறுவனமும், தனியார் இன்சூரன்சு நிறுவனமும், ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் விசாரணையின் போது லாரி நிறுவனம் ஆஜராகவில்லை. தனியார் இன்சூரன்சு கம்பெனியும் குற்றச்சாட்டுகளை மறுத்தது.

    ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ரமேஷ் விபத்தில் மரணம் அடைந்த மணிகண்டன் குடும்பத்துக்கு தனியார் இன்சூரன்சு நிறுவனம் ரூ.16 லட்சத்து 42 ஆயிரம் நஷ்டஈடு தொகையை 2015-ம் ஆண்டு முதல் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார். டிரைவர் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். #Tamilnews

    பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணி கள் இருந்தனர்.

    அந்த பஸ் இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். அதற்குள் அந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பேருந்தின் இடிபாட்டில் சிக்கி ஜக தாம்பிகை என்ற பெண், முகேஷ் என்ற 5 வயது சிறுவன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிவா (30) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார்.

    மேலும் இந்த விபத்தில் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 13 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ் சாலையி நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே மேலும் ஒரு பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு பெரம்பலூரில் இருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ் சென்றது. அப்போது எதிரே திட்டக்குடி நோக்கி வந்த வந்த லாரி மீது எதிர்பாரதவிதமாக மோதியதில் பஸ் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பேருந்துகள் ஒரே பகுதியில் அடுத்தடுத்து கவிழ்ந்ததால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
    திருபுவனை:

    திருபுவனை பாலாஜி நகரை சேர்ந்தவர் ரகு (வயது55). இவர் திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குமுதசெல்வி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ரகு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று கொண்டு இருந்தார்.

    திருபுவனை ஏரிக்கரை அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரகு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு ரகு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை ரகு இறந்து போனதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×