search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நஷ்டஈடு"

    • வெளியுறவுத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 12 மீனவர்கள் கடந்த 11-ந்தேதியன்று மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டின் இழுவை கப்பல் மீன வர்களின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படகு மற்றும் அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடலில் முழ்கின. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தை நான் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டேன். மீனவர்கள் தாயகம் திரும்பி வரவும் நடவடிக்கை எடுத்தேன். பின்னர் ஊர் திரும்பிய மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிகை் கையை கேட்டறிந்தேன். அப்போது சேதம் அடைந்த படகு உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நான் நேற்று டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தேன். அப்போது மாலத்தீவு கப்பல் மோதி படகு விபத்துக் குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனு அளித்தேன்.

    இதுதொடர்பாக மாலத்தீவு அரசை தொடர்பு கொண்டு நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கால் பாதத்தின் முன்பகுதி செயல்படாமல் காலை இழுத்து நடக்க வேண்டிய நிலை உருவானது.
    • வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இதில் தீர்ப்பு கூறப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறமுகம். அவரது மனைவி அமுதா (வயது 53). இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு வலது கால் முட்டியின் பின்புறம் நீர்க்கட்டி ஏற்பட்டது.

    இதனை சரி செய்ய இவர், புதுவை புஸ்சி வீதியில் தனியார் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

    தொடர்ந்து அவரை கடந்த 6-9-2006 அன்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து நீர்க்கட்டியை நீக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். ஆனால் அவரது வலது கால் பாதத்தின் முன்பகுதி செயல்படாமல் காலை இழுத்து நடக்க வேண்டிய நிலை உருவானது.

    இதனால் அதிர்ச்சிய டைந்த அமுதா 2007-ம் ஆண்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    தனியார் டாக்டரின் கவனக்குறைவு மற்றும் சேவை குறைபாடு காரணமாக தனக்கு பல்வேறு கஷ்டங்கள் மற்றும் மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறி புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தவழக்கு விசாரணை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இதில் தீர்ப்பு கூறப்பட்டது. மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைபாடு உள்ளதாக கருதி அமுதாவுக்கு ரூ.2 லட்சத்துக்கு 50 ஆயிரமும், மன உளைச்சல் மற்றும் பாதிப்புக்கு ரூ.1 லட்சமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. தீர்ப்பின் நகலை பெற்ற 45 நாட்களுக்குள் அமுதாவுக்கு நஷ்டஈடு வழங்கா விட்டால் தீர்ப்பு தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பொய்யான தகவல்களைக் கூறி வாடிக்கையாளரை ஏமாற்றிய எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம் ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு
    • காப்பீடு கட்டாயம் என்று கூறி அவரிடமிருந்து ரூ.63,911 யை பெற்றுக்கொண்டு காப்பீடு வழங்கியுள்ளது

    அரியலூர் 

    அரியலூர் அருகே பொய்யான தகவல்களைக் கூறி வாடிக்கையாளரை ஏமாற்றிய எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம் ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

    ஆண்டிமடம் அருகேயுள்ள அணிக்கு றிச்சான் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுதாகர் மனைவி ராசாத்தி(வயது33). கடந்த ஆண்டு நம்பர் மாதம் திருச்சியிலுள்ள எல்.ஐ.சி. வீட்டுக் கடன் நிறுவனத்தை அணுகி ரூ.8 லட்சம் வீட்டுக் கடன் கேட்டு விண்ண ப்பித்திருந்தார். அதற்கு அந்த நிறுவனம், கடன் பெற வேண்டும் என்றால் காப்பீடு கட்டாயம் என்று கூறி அவரிடமிருந்து ரூ.63,911 யை பெற்றுக்கொண்டு காப்பீடு வழங்கியுள்ளது.

    மேலும் இந்நிறுவனம், ராசாத்திக்கு ரூ.8 லட்சம் கடன் கொடுத்தது போல், அவரது பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை தங்களது பெயரில் அடமானம் பதிவுக் செய்துக் கொண்டது.

    ஆனால் ஒப்பந்தப்படி அந்நிறுவனம், வீட்டுக் கடனை வழங்காமல் இருந்து வந்தது. இது குறித்து ராசாத்தி அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தார். இதனை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் கொண்ட குழுவினர்,

    பொய்யான தகவல்களைக் கூறி ஏமாற்ற நினைத்த எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம், ராசாத்திக்கு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும், பதிவு செய்த அடமானத்தை நிறுவனத்தின் செலவிலேயே ரத்து செய்து அசல் பத்திரத்தைத் திருப்பித்தரவும், பத்திரப் பதிவு கட்டணம் ரூ.10,210 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.63,911 ஐ வட்டியுடன் ஒரு மாதத்துக்கு தர வேண்டுமெனவும், வழக்கு செலவுக்காக ரூ.10,000 வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தனர்.

    • ராஜாராமன் ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
    • ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    கடலூர்:

    புவனகிரி குரியமங்கலம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு கீழ்மணகுடியைச் சேர்ந்த வீரப்பன் மகன் ராஜாராமன் (வயது 45) என்பவர் மது பாட்டில் வாங்க சென்றார். அப்பொழுது திடீரென்று பலத்த மழை பெய்ய தொடங்கியது அதனால் அவர் அந்த கடையின் ஓரம் ஒதுங்கி அங்குள்ள ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டியும், அந்த மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டியும், ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டியும் சுமார் 500-க்கும் மேற்ப்பட்டோர் புவனகிரி போலீஸ் நிலையத்தில் குவிந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    • மகனின் இறப்புக்கு நஷ்டஈடு கோரி பா.ஜ.க. நிர்வாகி மனு கொடுத்தார்.
    • மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியைச் சேர்ந்தவர் முனியாண்டி. பா.ஜ.க. கிளைச்செயலாளராக உள்ளார். இவரது மகன் தினேஷ்குமார் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர்.

    அவர் மேல்நிலைத்தொட்டி கட்டுமான பணிக்காக கடந்த 2021-ம் ஆண்டு வெளியூர் சென்றார் . அப்போது அவர் பாம்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மகனின் இறப்புக்கு நிவாரணம் கோரி முனியாண்டி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனிடம் மனு கொடுத்தார். அந்தமனு விசாரிக்கப்பட்டு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கும் படி பரிந்துரைக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போது வரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிவாரணம் பெற்றுத்தருமாறு கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனில் முனியாண்டி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • சேவை குறைபாடு எதிரொலி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் புல்லுவிளையை சேர்ந்தவர் செல்வகீதா. இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1000 வீதம் 64 மாதங்கள் கட்டினால் முடிவில் ரூ.94 ஆயிரம் கிடைக்கும் என்ற திட்டத்தில் சேர்ந்திருந்தார்.

    அவர் தவணை தொகையை முழுவதும் செலுத்தி விட்டு முதிர்வு தொகையான ரூ.94 ஆயிரத்தை நிறுவனத்திடம் கேட்டார். உடனடியாக அந்த நிறுவனத்தினர் ரூ.94 ஆயிரத்திற்கு காசோலை வழங்கி உள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாததால் இந்த காசோலை மூலம் அவரால் பணம் பெற முடியவில்லை.

    இதனால் பாதிப்படைந்த செல்வகீதா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனினும் முறையான உரிய பதில் கிடைக்காததால் அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் மற்றும் முதிர்வு தொகை ரூ.94 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு
    • சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் வடகரையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் சென்னை ஆவடியிலுள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 14 பேர் அடங்கிய ஒரு குழுவாக அந்தமான் செல்ல பணம் செலுத்தியிருந்தார்.

    சுற்றுலா நிறுவனமும் இந்த 14 பேருக்கு விமான டிக்கெட் பதிவு செய்து அனுப்பியிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பயணம் செல்ல இயலவில்லை. இதனால் தாங்கள் செலுத்தியிருந்த பணத்தை திரும்பதர வேண்டுமென சுற்றுலா மற்றும் விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டனர்.

    அதற்கு விமான நிறுவனம் டிக்கெட்டுக்கான கட்டணத்தை சுற்றுலா நிறுவனத்திடம் திருப்பி கொடுத்து விட்டதாக மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளனர். உடனடியாக மீண்டும் சுற்றுலா நிறுவனத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமான கட்டணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். சுற்றுலா நிறுவனம் ஒரு காசோலையை வழங்கியுள்ளது. ஆனால் பணமில்லாமல் இந்த காசோலை திரும்பி விட்டது.

    இதனால் பாதிப்படைந்த அவர்கள் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு பயணம் செய்யாத விமான கட்டணமான ரூ.1 லட்சத்து 65 ஆயிரம், நஷ்ட ஈடு ரூ.35 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்தை 1 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • கொரியரில் உடைந்த டி.வி.க்கு விற்பனை நிறுவனம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
    • நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    மண்டபம் மறவர் தெருவை சேர்ந்தவர் வசந்த். இவர் கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந்தேதி கோவை இசூசா எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் இரண்டு எல்.இ.டி. டி.வி.கள் வாங்கியுள்ளார். அவை கொரியரில் வந்த போது ஒரு டி.வி. உடைந்திருந்தது. இது குறித்து விற்பனை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வசந்த் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். அவர்களது வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் குட்வின் சாலமன் ராஜ், நமச்சிவாயம் ஆகியோர் விற்பனை நிறுவனம் உடைந்த டி.வி.க்கான தொகை ரூபாய் 14 ஆயிரத்து 700 மற்றும் 6 சதவீதம் வட்டியுடன் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவு ரூ, 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.

    • புகாரை வாங்காமல் அலைக்கழித்ததாகவும், புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், மாநில மனித உரிமை அணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • மாநில மனித உரிமை ஆணையம் சம்பவம் நடந்தபோது கள்ளிமந்தயம் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சரவணன் என்பவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெருமாள்கோவில் வலசை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி செல்லாத்தாள். மகன் குப்புசாமி. இவர்களிடம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த பைனான்சியர்கள் செல்வன், மணி ஆகியோர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். இது குறித்து குப்புசாமி கள்ளிமந்தயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஆனால் புகாரை வாங்காமல் அலைக்கழித்ததாகவும், புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், மாநில மனித உரிமை அணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த ஆணையம் சம்பவம் நடந்தபோது கள்ளிமந்தயம் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சரவணன் என்பவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. அதனை மனுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
    • பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் விபத்து ஏற்படுத்தி விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வணங்காமல் போக்குவரத்து துறை காலதாமதம் செய்து வந்துள்ளது. அவ்வாறு நீண்ட நாளா நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புள்ள அரசு பஸ்களை ஜப்தி செய்ய திருப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர். ஜப்தி செய்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு பஸ் ஏறி இறங்கியதில் கலை வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • ரூ .82 லட்சம் வழங்கக்கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது .

    கடலூர்:

    கடலூர் ஆல்பேட்டை கன்னியகோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் மனைவி கலை வாணி ( வயது 37 ). இவர் புதுச்சத்திரம் அருகே தீர்த்தனகிரி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் செவி லியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8.11.2015 அன்று வேலை முடிந்து தீர்த்தனகிரியில் இருந்து மேட்டுப்பா ளையம் மெயின்ரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார் . அப்போது பின்னால் வந்த அரசு பஸ் அவர் சென்ற மோட் டார் சைக்கிள் மீது மோதியது . இதில் நிலைதடுமாறி சாலை யில் விழுந்த அவர் மீது அரசு பஸ் ஏறி இறங்கியதில் கலை வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இந்த விபத்தில் நஷ்டஈடு கேட்டு மோகன், அவரது மகன்கள் கடலூர் மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன் , சந்திரசேகரன் மூலம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ .53 லட்சத்து 98 ஆயிரத்து 400 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது . ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதையடுத்து ரூ .82 லட்சம் வழங்கக்கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது . அந்த தொகையும் வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது . அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • பெரியகங்கணாங்குப்பம் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ், கார் மீது மோதியது.
    • வக்கீல்கள் ராம.ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அருகே வடக்குத்து காந்திநகர் விரிவு அண்ணாராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் அஜய்குமார் (வயது 20). இவர் கடந்த 13.12.2013 அன்று கடலூர் வழியாக புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவர் பெரியகங்கணாங்குப்பம் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ், கார் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து புதுச்சேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அஜய்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த விபத்து வழக்கில் நஷ்டஈடு கேட்டு அவரது தாய் விஜயா கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராம.ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், அஜய்குமார் தாயாருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து ரூ.14 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதையடுத்து மீண்டும் ரூ.20 லட்சத்து 97 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்–பட்டது. அந்த தொகையும் வழங்கப்படாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் நேற்று கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். 

    ×