search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரியரில் உடைந்த டி.வி.க்கு விற்பனை நிறுவனம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
    X

    கொரியரில் உடைந்த டி.வி.க்கு விற்பனை நிறுவனம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

    • கொரியரில் உடைந்த டி.வி.க்கு விற்பனை நிறுவனம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
    • நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    மண்டபம் மறவர் தெருவை சேர்ந்தவர் வசந்த். இவர் கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந்தேதி கோவை இசூசா எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் இரண்டு எல்.இ.டி. டி.வி.கள் வாங்கியுள்ளார். அவை கொரியரில் வந்த போது ஒரு டி.வி. உடைந்திருந்தது. இது குறித்து விற்பனை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வசந்த் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். அவர்களது வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் குட்வின் சாலமன் ராஜ், நமச்சிவாயம் ஆகியோர் விற்பனை நிறுவனம் உடைந்த டி.வி.க்கான தொகை ரூபாய் 14 ஆயிரத்து 700 மற்றும் 6 சதவீதம் வட்டியுடன் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவு ரூ, 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.

    Next Story
    ×