search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தானம்"

    • தாலிப் பொட்டு, மூக்குத்தி போன்றவைகளை தற்காலத்தில் தங்கத்தில் வாங்கி போடுவது என்பது சிரமம்.
    • தாலி பொட்டு, மெட்டி போன்றவைகளுக்கு சுமாரான தட்சணையை முறத்தில் போட்டு கொடுக்கலாம்.

    பெண்களுக்கு முறத்தில் தாலிப்பொட்டு, மூக்குத்தி மற்றும் பொருட்களை முறத்தில் போட்டு கொடுப்பதற்கு முறவாயண தானம் என்று பெயர்.

    மொத்தம் 12 பவுர்ணமிகள் கொடுக்க வேண்டும்.

    கௌரீ முறத்திற்கு போடக்கூடிய சாமான்களை தவிர மூக்கு பொட்டு, தாலிப்பொட்டு, மெட்டி, சவுரி எல்லாம் போட்டு புடவை, ரவிக்கை கொடுத்து முறவாயணம் கொடுக்க வேண்டும்.

    தாலிப் பொட்டு, மூக்குத்தி போன்றவைகளை தற்காலத்தில் தங்கத்தில் வாங்கி போடுவது என்பது சிரமம்.

    ஆகையால் புடவை, ரவிக்கை கொடுத்து முறத்திற்குப் போடும் வழக்கமான சாமான்களை போட்டு மூக்குத்தி,

    தாலி பொட்டு, மெட்டி போன்றவைகளுக்கு சுமாரான தட்சணையை முறத்தில் போட்டு கொடுக்கலாம்.

    • நிர்மலமான மனதினால் நாம் பக்தி செய்தால் முக்தி பெற தகுதி உடையவர்கள் ஆவோம்.
    • நமது பெரியவர் காட்டிய நல்வழியில் செல்வது என்பது நமக்கு நல்லதை கொடுக்கும்.

    ஆடி மாத பவுர்ணமியில் இருந்து ஜேஷ்ட மாத பவுர்ணமி வரை கொடுக்க வேண்டும்.

    வெற்றிலை, பாக்கில் தட்சணை, துளசி தானம் வைத்து அபிஷேகம் செய்வதற்கு உபயோகிக்கும் சங்கு வைத்து கொடுப்பது நல்லது.

    மகாலட்சிமியின் ஸாந்நித்யம் நிறைந்த சங்கு தானமாக கொடுப்பதினால் நமக்கு லட்சுமி கடாட்சம் இருக்கும் மற்றும் வெற்றி முழக்கம் செய்வது சங்கு என்பதால் அதனால் நமக்கு காரிய வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த தானமும் சாதுர் மாத துவாதசிகளில் ஆரம்பித்து 24 துவாதசியும் அல்லது சாதுர்மாத துவாதசிகளில் மட்டும் கொடுக்கலாம்.

    பூஜைக்கு உபபோகப் படுத்தும் எந்த பொருளை தானம் கொடுத்தாலும், அதன் பலன் நமக்கு எப்பிறவிகளிலும் கிடைக்கும்.

    பூஜை செய்யும் பாக்கியமும், அதற்கு தேவையான பகுதி, பொருள் வசதி, ஆரோக்கியம் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    நிர்மலமான மனதினால் நாம் பக்தி செய்தால் முக்தி பெற தகுதி உடையவர்கள் ஆவோம்.

    இந்த முக்கியமான கருத்தை மனதில் கொண்டு தான், நம் பெரியவர்கள் தானங்களும், தருமங்களும், நமக்கு உண்டான நியமங்களும், விரத ஆசரணைகளும், பூஜைகளும் தவறாமல் செய்து வந்தார்கள்.

    நமது பெரியவர் காட்டிய நல்வழியில் செல்வது என்பது நமக்கு நல்லதை கொடுக்கும்.

    ஆகையால் கூடுமானவவை நம்மால் முடிந்த அளவுக்கு தான தருமங்கள், நியதிகள், விரத ஆசரணைகள், பூஜைகள் முதலியவற்றை செய்வது நல்லது. 

    விருப்பமும் வசதியும் உள்ளவர்கள், 13வது பவுர்ணமிக்கு நிறைவாக கொடுத்து முடிக்கலாம்.

    ஆடி மாதம் சுக்ல பவுர்ணமியிலிருந்து இன்னொரு ஆடி பவுர்ணமி வரை சாதுர் மாத துவாதசிகளில் தேனும் நெய்யும் கொடுப்பது மிகவும் சிறப்பான தானமாகும்.

    தானம் கொடுக்கும் முறை ஒன்று தான்.

    துவாதசிகளில் கொடுப்பதை பவுர்ணமி அன்று கொடுப்பது.

    மொத்தம் 12 பவுர்ணமி நாட்களில் இந்த தானத்தை கொடுத்து முடிக்கலாம்.

    விருப்பமும் வசதியும் உள்ளவர்கள், 13வது பவுர்ணமிக்கு நிறைவாக கொடுத்து முடிக்கலாம்.

    • தானத்தில் பல வகை உள்ளது. எந்த தானத்தை எப்போது செய்ய வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது.
    • ஓராண்டில் வரும் 12 பவுர்ணமிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுக்க வேண்டும்.

    கண்ணாடி தானம்

    பவுர்ணமி தினம் மிக, மிக சக்திவாய்ந்தது என்பதால் தான் அன்று விரதம் இருக்கவும், சிறப்பு பூஜைகள் செய்யவும் பெரும்பாலானவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்ககள்.

    ஆனால் பவுர்ணமியன்று பூஜை, வழிபாடுகளுடன் தானம் செய்தால் தான் 100 சதவீத புண்ணியம் கிடைக்கும்.

    தானத்தில் பல வகை உள்ளது. எந்த தானத்தை எப்போது செய்ய வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது.

    அந்த வகையில் பவுர்ணமி நாட்களில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுப்பது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.

    ஏதோ ஒரு பவுர்ணமிக்கு மட்டும் கொடுத்தால் போதாது.

    ஓராண்டில் வரும் 12 பவுர்ணமிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுக்க வேண்டும்.

    ஆடி அல்லது மாசி மாதம் கண்ணாடி தானம் கொடுப்பதை தொடங்கலாம்.

    இந்த தானத்தை வெற்றிலை, பாக்கு, பழம், தட்சணை, துளசி தனம் வைத்து தானம் கொடுக்க வேண்டும்.

    இந்த தானம் கொடுப்பதின் நோக்கம், கண்ணாடியில் நமது முகம் தெரியும்.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

    கண்ணாடியில் தெரியும் நமது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நமது அகத்தை அதாவது மனதை அழகாக வைத்து கொள்ள வேண்டும்.

    இப்படியாக அகத்தின் அழகை முகத்தில் காட்டும் கண்ணாடியை தானம் கொடுப்பவர்களும், தானம் வாங்குபவர்களும், மனதை நிர்மலமாகவும், அதாவது தூய்மையாகவும், அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி கொடுத்து வருகிறார்கள்.

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    • தானம் என்பது ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வது ஆகும்.
    • தர்மம் என்பது எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்வது ஆகும்.

    உலகில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உள்ள முக்கியமான இரண்டு கடமைகள் தானம் மற்றும் தர்மம் ஆகியவையாகும். தானம் என்பது ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வது ஆகும். தர்மம் என்பது எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்வது ஆகும். அவரவருக்கு உரிய வகையில் இவற்றை கடைப்பிடித்தால், உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்ற வாழ்க்கை நியதியில், மகிழ்ச்சி கொண்ட மனதுடன் இந்த உலகை விட்டுச் செல்ல இயலும்.

    மரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் எமதர்மன் ஆவார். அவருக்கு `தர்மராஜன்' என்ற பெயரும், காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் `காலன்' என்ற பெயரும் உண்டு. பேராசையில் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நினைத்தபடியே வாழ்பவர்கள்தான் மரணத்துக்கு பயப்படுவார்கள். சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதி, நேர்மையுடன் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அஷ்டதிக்கு பாலகர்களில் தெற்கு திசையின் அதிபதியான எமதர்மன், மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் வந்தவர். அதாவது, மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றிய பிரம்மா, அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரீசி, காஸ்யபர், சூரியன் ஆகியோர் சூரியனிடம் இருந்து தோன்றியவரே எமதர்மன் ஆவார்.

    விஸ்வகர்மாவின் மகள் சம்ப்ஜனாவை சூரியன் மணம் புரிந்ததில், அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு மகன்கள் மற்றும் யமுனா என்ற மகளும் பிறந்தனர். எமன் நீதி, நேர்மை தவறாத சத்தியத்தின் பிரதிநிதி. தனது சித்தி சாயாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சூரியனின் ஆணைப்படி சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடமிருந்து தென் திசை அதிபதி என்ற பட்டத்துடன், எமலோகத்துக்கும் அதிபதி ஆனார்.

    சிவபெருமான், தனது ரிஷபத்துக்கு சமமான தோற்றம்கொண்ட, கரிய எருமை மாடு ஒன்றை உருவாக்கி, விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு வாகனமாக அருளியதுடன், ஜீவன்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார்.

    இரண்டு கூரிய சிகரங்களுக்கு நடுவில் உள்ள பாதாளத்தில் ஓடும் அக்னி ஆற்றுக்கு மேலே, சிகரங்களை இணைத்துக் கட்டிய ஒரு தலைமுடியில் கட்டித் தொங்கவிடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து எமதர்மன் நீதி வழங்குவதாக ஐதீகம். அவரது நீதி சிறிது பிசகினாலும், சிம்மாசனத்துடன் எமன், அக்னி ஆற்றில் விழ நேரிடும் என்ற நிலையில், சரியான நியாயம் வழங்குவதாகவும் புராணக்கதை வழக்குகள் உள்ளன. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக எமதர்மன் குறிப்பிடப்படுகிறார்.

    • இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள்.
    • இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.

    நாளை மறுநாள் காலை எழுந்து, அருகில்இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.
    • மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப் படுகிறது. நாளை கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை....

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    இந்த மூன்றையும் நாளை மறுநாள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்புமிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்று படுத்தியதன் மூலம் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே நாளை நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

    அடுத்து, தானம்...

    நாளை மறுநாள் உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை செய்யுங்கள். நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் சக்திக்கு ஏற்பட அவர்களுக்கு உதவலாம்.

    ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை & எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சி யையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

    இதையடுத்து தர்ப்பணம்...

    நாளை மறுநாள் நாம் ஒவ்வொ ருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் நாளை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினிப் போடாலாமா? அது எவ்வளவு பெரிய பாவம்?

    இந்த பாவ மூட்டைகளை நீக்க நாளை மறுநாள் மறக்காமல் தர்ப்பணம் கொடுங்கள்.

    • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
    • தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.

    `கற்பகநாதர் குளம்' விநாயக தீர்த்தத்திற்கு `கடிக்குளம்' என்ற பெயரும் உண்டு. எனவே, இத்தலத்திற்கு `கடிக்குளம்' என்று பெயர். தீர்த்தத்தின் பெயரே ஊரின் பெயராக இருப்பது தனிச்சிறப்பாகும். கடிக்குளம் என்பதே தற்போது மக்களால், `கற்பகநாதர் குளம்'என்றும், `கற்பகனார் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து இறைவன் பெயர், `கற்பக நாதர், கற்பகேஸ்வரர்' என்றும், அம்பாள் பெயர், `சௌந்தரநாயகி, பால சௌந்தரி'என்றும் அழைக்கப்படுகிறது.

    மூலவர், சிறிய மூர்த்தியாக, எட்டுப் படைகளுடன், எழிலாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. விநாயகர் இறைவனை வழிபட்டு, மாங்கனி பெற்ற தலம், இது. இத்தலத்து சிறப்புமிக்க தீர்த்தமாகிய `விநாயக தீர்த்தம்' (கடிக்குளம்) இந்த ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

    ஒருவர் தமது முன்னோரிமன் எலும்புகளை, ஒரு கலத்தினுள் வைத்து தீர்த்த யாத்திரையாக இந்த தீர்த்தத்தை வந்து அடைந்த போது, அந்தக் கலயத்தில் இருந்த எலும்புத் துண்டுகள் தாமரைப்பூவாக மலர்ந்ததாம். அப்போது தான் தெரிந்தது.

    இந்த தலமும், தீர்த்தமும் முக்தி கரும் இடம் என்று அன்று முதல் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி செய்வது வழக்கமாக உள்ளது.

    திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டிய காடு செல்லும் பேருந்தில் சென்றால், இத்தலத்தை அடையலாம்.

    புனித நீராடல், தானம், தர்ப்பணம்

    ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்ததையும் ஒன்றுபடுத்தியதன் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே நாளை நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

    • கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

    கோவை,

    உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று நிறைவு விழா நடைபெற்றது.

    இதுகுறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எம்.பி.பி.எஸ் மாணவர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட கோவையில் உள்ள 5 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தாய்ப்பால் குறித்த வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

    போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்கு சென்று தாய்ப்பால் குறித்து குழந்தைகள் நல துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியவத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நாடகம் நடித்து காண்பித்தனர். கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு புரியும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், ஸ்லோகன் எழுதுதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 484 பேர் மொத்தம் 1,280 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து தாய்ப்பால் அளித்த தாய்மார்கள் கவுரவிக்க ப்பட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நலத்துறை தலைவர் லட்சுமணசாமி, பச்சிளங் குழந்தைகள் பிரிவு நோடல் அதிகாரி சசிகுமார் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு நிபுணர்கள் செந்தில்குமார், சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தர்மம் என்றால் நல்லொழுக்கம்
    • நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம்.

    நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். உதாரணமாக நல்ல காரியங்களுக்கு நாம் தருவதை 'தானம்' என்று சொல்லலாம். நம்மைவிட வசதி குறைந்தவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நாம் தருவதை 'தர்மம்' என்று சொல்லலாம்.

    நெருப்பின் தர்மம் சுடுவது, நீரின் தர்மம் பள்ளத்தை நோக்கிப் பாய்வது என்று சொல்லும்போது, இங்கு 'இயல்பு' என்ற பொருளிலேயே தர்மம் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். 'தானம்' என்ற சொல் பொதுவாகவே நாம் பிறருக்குச் செய்யும் பொருளுதவியைக் குறிக்கவே உபயோகிக்கப்படுகிறது.

    தர்மம் என்றால் நல்லொழுக்கம், ஆன்மிக வழியைப் பின்பற்றுதல், பெரியோர் காட்டிய நல்வழியில் வாழ்தல், நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல்; தானம் தர்மத்தில் அடங்கும் என்றும் கொள்ளலாம்.

    பாரதப் போரில் மிகப் பெரிய கொடையாளி கர்ணனின் உயிர் பிரியாமல் காத்தது அவர் செய்த தான தர்மங்கள், ஆனால் விதிப்படி உயிர் பிரிந்தால்தான் அவரின் தேகம் சாந்தியடைந்து அவரின் உயிர் இறைவனை சரணடையும் என்பதால் அவரின் உயிரை போக்க கண்ணனே அந்தனர் வேடத்தில் வந்து கர்ணன் செய்த புண்ணியங்களை தானம் பெற்றார்.

    கண்ணன் அருளால் கர்ணன் மோட்சத்தை அடைந்தார். இதுகுறித்து சூரியதேவன் கண்ணனிடம் தானம் தர்மம் இவற்றிற்கு உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு வேண்டிக் கொண்டதன் பேரில் கண்ணன் கூறிய தான தர்ம உரைதான் கீழே உள்ளது. தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.

    புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.... ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம்.

    அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ? என்றார் கண்ணன்.

    • கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
    • கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.

    இறந்த நபர், மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டுமானால், கண் தானத்தைத் தவிர சிறந்த வழி வேறு ஏது?

    கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

    கண்தான வங்கியில் இருந்து டாக்டர்கள் வரும்வரை இறந்தவரின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும்.

    இறந்தவர் உடல் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

    நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களின் கண்களை கூட தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் கண்களையும் தானம் செய்யலாம்.

    புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது. எனவே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.

    ×