search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "organ"

    • உடல் உறுப்பு தானம் வழங்கியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் முருகேசன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    பல்லடம் :

    பல்லடத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடல் உறுப்பு தானம் வழங்கியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் மிருதுளா நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் கெளசல்யாதேவி வேலுசாமி வரவேற்றார்.

    இலச்சினையை ஆனைகட்டி ஆதி கூட்டமைப்பு சுமதி வெளியிட அதனை சூழலியல் செயற்பாட்டாளர் கோவை சதாசிவம் பெற்றுக்கொண்டார். உடல் உறுப்பு தானம் வழங்கியோருக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் முருகேசன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.

    • ட்ரோன்களை பயன்படுத்துவது மூலம் போக்குவரத்து நேரத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து சிக்கலைத் தீர்க்க இது மிகவும் புதுமையான அணுகுமுறையாகும்.

    மருத்துவமனைகளில் விரைவான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் மனித உறுப்புகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் இந்தியாவின் முதல் முன்மாதிரி திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

    தற்போது விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக எடுத்துச் செல்லும் முறைக்கு மாறாக, விமான நிலையத்திலிருந்து பதப்படுத்தப்பட்ட மனித உறுப்புகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரோன்களை பயன்படுத்துவது மூலம் போக்குவரத்து நேரத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ட்ரோன் திட்டத்தை தொடங்கி வைத்து பிறகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:-

    வேகம் மற்றும் தடையற்ற போக்குவரத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், உறுப்புகளை எடுத்துச் செல்வதற்கான தளவாடங்களில் விரைவில் புதுமை தேவைப்படும். அதில் வரவேற்கத்தக்க பரிந்துரைகளில் ஒன்றுதான் ட்ரோன்களைப் பயன்படுத்துவது.

    போக்குவரத்து சிக்கலைத் தீர்க்க இது மிகவும் புதுமையான அணுகுமுறையாகும். இந்த திட்டத்தில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மருத்துவமனை ஒரு பகுதியாக இருப்பதை நான் பாராட்டுகிறேன்.

    இந்த சாதனை பெருமையை மட்டுமல்ல, சுகாதாரத் துறையில் ஒரு புதிய அளவுகோலை உருவாக்குகிறோம் என்ற திருப்தியையும் தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×