என் மலர்
நீங்கள் தேடியது "கர்ப்பப்பை"
- உணவிலும் நல்ல பாக்டீரியாவான புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது தேவையில்லாத கிருமி தொற்றுக்கள் வராது.
நமது உடலின் ஆரோக்கியத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி அழிக்கின்றன. இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றன. இதேபோல் பெண்களின் கர்ப்பப்பைக்குள் நுழைய முயலும் தொற்றுக்களை தடுக்கும் முக்கியமான வேலைகளையும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் செய்கின்றன.
ஆனால் நாம் சாப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்து அந்த நல்ல பாக்டீரியாவை அழித்துவிடுகிறது. எனவே எந்த ஒரு ஆன்டிபயாடிக்கும் இந்த புரோபயாடிக் பாக்டீரியாவை அழித்து விடாமல் இருக்க, நாம் ஒரு புரோபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.
மாதவிடாய் காலத்தில் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படலாம்:
பெண்களின் ஒவ்வொரு வாழ்க்கை தரத்திலும், குறிப்பாக மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும். எனவே அந்த காலகட்டத்தில் புரோபயாடிக் பாக்டீரியா அழிந்துவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும். அதாவது பெண்களுக்கு மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் அவர்களின் பி.எச். அளவு மாறுபடும். அதனால்தான் இந்த புரோபயாட்டிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும்.
மாதவிடாய் வருகிற காலத்தில் வரும் ரத்தமானது காரத்தன்மை (ஆல்கலைன்) கொண்ட பி.எச். ஆகும். இது அந்த குழாய் வழியாக வரும்போது அதனுடைய இயற்கையான அமிலத்தன்மை கொண்ட பி.எச். தன்மையில் இருந்து மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் வெள்ளைப்படுதல் ஏற்படும்போது பாதிக்கப்படலாம். வெள்ளைப்படுதல் என்பது ஒரு ஆல்கலைன் சுரப்பாகும். அது கர்ப்பப்பையில் இருந்து வரும். அதுவும் இந்த புரோபயாடிக்கை பழுதாக்கும்.
பல நேரங்களில் கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்திலும் இந்த யோனிப்பகுதியில் சீரான புரோபயாடிக் வருவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும். இந்த வகையில் புரோபயாட்டிக் பழுதாவது, மாதவிலக்கு வரும்போது வரலாம். எனவே இந்த புரோபயாட்டிக் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் தான் பல நேரங்களில் ஆன்டிபயாடிக் எடுக்கும் போது கூடவே லேக்டோபேசிலிஸ் (நல்ல பாக்டீரியா) மருந்து கொடுக்கிறோம். பல நேரங்களில் வயிற்றுப்போக்கு வந்தால் முதலில் கொடுப்பதே லாக்டோபேசிலிஸ் கொண்ட மருந்து தான். இவை உங்களுடைய நல்ல பாக்டீரியாவை மேம்படுத்தும் போது கிருமி தொற்றுக்கள் வராமல் தடுக்கவும் முடியும். ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கவும் முடியும்.
எளிதாக கிடைக்கும் நல்ல பாக்டீரியா நிறைந்த உணவு தயிர்:
சரி டாக்டர், இந்த புரோபயாடிக் நல்ல பாக்டீரியா என்பது எவ்வளவு காலமாக எல்லோருக்கும் தெரியும் என்று பலரும் கேட்பதுண்டு. கிட்டத்தட்ட 1945-ம் ஆண்டில் இருந்தே இந்த புரோபயாடிக் பாக்டீரியா பற்றி நிறைய விஷயங்கள் கண்டுபிடித்தார்கள்.
ஏனென்றால் பாக்டீரியாவை முதலில் மைக்ரோஸ்கோப்பில் பார்த்து கண்டுபிடித்த உடனேயே காற்று, தண்ணீரில் இருக்கிற எல்லா பாக்டீரியாக்களை பற்றியும் நிறைய ஆய்வுகள் கண்டுபிடித்தார்கள். அதிலும் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தி பலவிதமான நல்ல பாக்டீரியா நமது உடலில் இருப்பதையும் உறுதி செய்தனர்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசிலிசை கண்டுபிடித்தார்கள். புரோ என்றாலே நமது உடலுக்கு சாதகமானது என்று அர்த்தம். அதனால்தான் புரோபயாடிக் கண்டிப்பாக உணவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஆன்டிபயாடிக் எடுக்கும்போது கூடுதலாக புரோபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கும் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா நிறைந்த உணவு தயிர் ஆகும். தயிர் மற்றும் மோரில் நிறைய புரோபயாடிக் இருக்கிறது. புளிக்க வைத்த அல்லது நொதிக்க வைத்த அனைத்து உணவுப்பொருட்களிலும் புரோபயாடிக் இருக்கிறது. புளிக்க வைத்த பொருட்கள் என்றால் பாலை தயிராக மாற்றுகிறோம்.
இந்த தயிரில் இருப்பதுதான் சிறந்த புரோபயாடிக். அதனால் தான் ஒரு காலத்தில் தயிர் சாதமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நிறைய பேர் நன்றாக ஆரோக்கியமாக இருந்தார்கள்.
வயிற்றுப்போக்கு, பேதி வந்தால் தயிர் கொடுங்கள், தயிர் சாதம் கொடுங்கள் என்று சொல்கிறோம். வைரஸ் பாதிப்பால் வயிறு பிரச்சினை ஏற்பட்டால் தயிர் சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். இதில் இருக்கிற புரோபயாடிக் நமது குடல் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது. எந்த ஒரு வியாதிக்கும் இந்த புரோபயாடிக் கண்டிப்பாக ஒரு பாதுகாப்பை கொடுக்கிறது. அந்த வகையில் நாம் புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியமாகும்.
நல்ல பாக்டீரியா நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்:
நாம் அன்றாடம் சாப்பிடுகிற நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் எல்லாவற்றிலும் ரசாயன பொருட்கள் மற்றும் கிருமிகள் இருக்கிறது. இதில் இருந்து நமது உடலை பாதுகாப்பது இந்த புரோபயாடிக் தான். இதனால் தான் நமது உணவுகளில் எப்போதுமே புரோபயாடிக் நிறைந்த தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இருக்கின்ற புரோபயாடிக் குடலுக்கு பாதுகாப்பை கொடுக்கிறது.
பெண்களை பொருத்தவரைக்கும் கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் உள்ள யோனிப்பகுதியில் பூஞ்சை தொற்றுக்கள், அரிப்பு, எரிச்சல், திரிதிரியாக வருதல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றால் வரும் தொற்றுக்கள் மற்றும் சிறுநீர்க்குழாய் பகுதிகளில் ஏற்படுகிற தொற்றுக்கள் ஆகியவற்றை தடுக்க இந்த புரோபயாடிக் பாக்டீரியா கண்டிப்பாக தேவை. அதனால்தான் அந்த நேரங்களில் ஆன்டிபயாடிக் கொடுக்கும்போது புரோபயாடிக்கை சேர்த்து கொடுக்கிறோம்.
மேலும் உணவிலும் நல்ல பாக்டீரியாவான புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் கண்டிப்பாக புரோபயாடிக் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதனால் தான் பெண்களுக்கு அந்த நேரத்தில் கூடவே புரோபயாடிக் மருந்துகளை கொடுக்கிறோம்.
நமக்கு பாதுகாப்பு கொடுக்கிற இந்த புரோபயாடிக்கை என்னென்ன உணவு பழக்க வழக்கங்கள் மூலம் மேம்படுத்தலாம் என்று பார்த்தால், ஒன்று மாத்திரைகளாக சாப்பிடலாம். இரண்டாவதாக இந்த புரோபயாடிக்கை யோனியில் வைக்கலாம், இதன் மூலமாக இந்த புரோபயாடிக் மேம்படும். மூன்றாவதாக உணவு பழக்க முறைகளால் அதிகரிக்கலாம்.

திரும்ப திரும்ப வரும் தொற்றுக்களுக்கு தயிர் மூலம் தீர்வு:
தயிர், மோர், புளித்த பாலாடைக்கட்டி (சீஸ்), ஆகியவற்றில் புரோபயாடிக் உள்ளது. ஆனால் அது பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டியாக இருக்க வேண்டும். வீட்டில் தயாரிக்கும் பாலாடைக்கட்டி நல்ல ஒரு புரோபயாடிக்கை கொடுக்கிறது. சீனர்கள் சாப்பிடும் கிம்ச்சி என்ற உணவும் ஒருவகையான நொதித்த, புரோபயாடிக் நிறைந்த உணவுதான்.
நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஊறுகாய் கூட நொதித்தல் தன்மை கொண்ட உணவுதான். அதிலும் புரோபயாடிக் இருக்கிறது. அதனால் தான் நிறைய நேரங்களில் தயிர் சாதமும், ஊறுகாயும் சாப்பிடும்போது உடலுக்கு நல்லது என்று சொல்கிறோம். ஆனால் ஊறுகாயில் உப்பு அதிகம் இருக்கிறது. ஊறுகாயை உப்பு குறைவாக போட்டு நொதிக்க வைத்தால் அது ஒரு நல்ல உணவாக மாறும்.
இது தவிர முக்கியமாக நீங்கள் சாப்பிட வேண்டியது, புளித்த மாவில் செய்யும் இட்லி, தோசை போன்ற உணவாகும். புளித்த மாவில் நிறைய லாக்டோபேசிலிஸ் இருக்கிறது. கையில் திடீரென்று ஒரு புண் வந்தால், உதாரணத்துக்கு சூடுபட்டு காயம் உண்டானால், உடனடியாக நீங்கள் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக புளித்த தோசை மாவில் கையை வைக்க வேண்டும். அந்த லாக்டோபேசிலிஸ் உடனடியாக பாதுகாப்பு கொடுக்கும். அதன் மூலம் காயம் விரைவில் குணமாகும். இந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களிலும் நொதிக்கப்பட்ட உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உங்களுடைய யோனிப்பகுதி, கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு போதுமான பாதுகாப்பை கொடுக்கிறது. எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தயிர் கொடுங்கள், உணவுகளில் தயிரை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள், ஒவ்வொருவரும் ஒரு ஆன்டிபயாடிக் எடுக்கும்போது உங்களுடைய டாக்டரிடம் புரோபயாடிக் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.
பல நேரங்களில் உங்களுக்கு ஒரு தொற்றானது திரும்ப திரும்ப வந்தால் அது சிறுநீர் தொற்றுக்களாக இருக்கலாம், யோனிப்பகுதி மற்றும் கர்ப்பப்பையை பாதிக்கக்கூடிய தொற்றுக்களாக இருக்கலாம், அல்லது பேதி, வயிற்றுப்போக்காக இருக்கலாம்.
இப்படிப்பட்டவர்கள் உணவுகளில் கண்டிப்பாக தயிர் சேர்த்துக் கொள்வது மிக மிக முக்கியமாகும். குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது தேவையில்லாத கிருமி தொற்றுக்கள் வராது. தொற்றுக்களிடம் இருந்து பாதுகாப்பை ஏற்படுத்தும். நாம் ஆரோக்கியமாக வாழவும் வழி வகுக்கும்.
- நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுகள் ஜீரணமாகி, அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் தனியாக பிரிக்கப்படுகிறது.
- பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருக்குமே பொதுவாக பாக்டீரியாக்கள் என்பது குடல், வாய் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருக்கிறது.
நமது உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று நல்ல பாக்டீரியாக்கள். இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் நமது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை இந்த நல்ல பாக்டீரியாக்கள் கட்டுப்படுத்தி அழிக்கின்றன. நமது உடலானது இயற்கையான முறையில் இயங்குவதற்கும் நல்ல பாக்டீரியாக்கள் மிகவும் உதவுகின்றன.
உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் உணவு பழக்க வழக்கம்:
நம்முடைய அன்றாட வாழ்க்கையானது மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் காரணமாக அமைகின்றன. அதனால் தான் விஞ்ஞானிகள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளிலும், நமது குடலில் உள்ள பாக்டீரியாக்கள், நல்ல பாக்டீரியாக்களாக இருக்க வேண்டும், குடல் பாக்டீரியா தான் நமது ஆரோக்கியத்துக்கான அடிப்படை என்று ஏற்கனவே கண்டுபிடித்துள்ளார்கள்.
ஏனென்றால் நாம் தினமும் உட்கொள்கின்ற உணவுகள் தான் நமது உடலுக்கான ஆரோக்கியம் மற்றும் உடலின் நன்மை, தீமை ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.
இன்றைக்கு நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுகள் ஜீரணமாகி, அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் தனியாக பிரிக்கப்படுகிறது. அதில் இருக்கும் புரதம் தனியாக பிரிக்கப்படுகிறது. மேலும் அமினோ அமிலம் தனியாக பிரிக்கப்பட்டு உறிஞ்சப்படுகிறது. உணவில் உள்ள கொழுப்பும் தனியாக பிரிக்கப்படுகிறது.
இவ்வாறு நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், அமினோ அமிலம், கொழுப்பு ஆகியவை அதில் இருந்து பிரிக்கப்பட்டு அவை நமது உடலில் சேரும் வகையில் குடல் மூலம் உறிஞ்சப்படுவது தான் நமது உடலுக்கு மிகவும் தேவையான முக்கியமான செயலாகும். இந்த வகையில் நமது உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் முதல் முக்கியமான விஷயங்களாக, நம்முடைய உணவு பழக்க வழக்க முறைகளே அமைகிறது. நிறைய கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிட்டால் நீரிழிவு பாதிப்பு வருகிறது. உப்பு நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
அதேபோல் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட்டால் நமது உடலிலும் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது. இதெல்லாம் அடிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி என்றால் நமது உணவு பழக்க வழக்க முறைகளால் பலவிதமான பாதிப்புகளையும் நமது உடல் எதிர்நோக்குகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள்:
இப்படிப்பட்ட நிலையில் நமது குடலின் ஆரோக்கியம் ரொம்ப ரொம்ப முக்கியம் என்று மருத்துவர்கள் எதற்காக சொல்கிறார்கள் என்றால், இந்த குடல் பகுதியில் இருக்கின்ற சில கெட்ட பாக்டீரியாக்கள் தான் நமக்கு ஏற்படும் பலவிதமான வியாதிகளுக்கான அடிப்படையாக அமைகிறது. அதே நேரத்தில் இந்த குடல் பகுதியில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்கள் தான் பொதுவாக நமது உடலுக்கு பாதுகாப்பை கொடுக்கக்கூடியது ஆகும்.
நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும், குறிப்பாக வெளியில் தெரிகிற உறுப்புகள் எல்லாமே அன்றாட சூழ்நிலையில் பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்படி இருக்கும்போது நமது உடலை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகள் இயற்கையாகவே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு நமது உடலின் தோல் பகுதியை எடுத்துக் கொண்டால், அதில் தோல் பகுதியை பாதுகாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைய இருக்கிறது. இதில் நிறைய பாக்டீரியாக்கள் இழப்பு ஏற்படும் போது தான் நமக்கு நோய் தொற்றுக்கள் ஏற்படுகிறது. அதேபோல் தான் நமது குடல் பகுதியில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் பலவிதமான நோய் தடுப்பு முறைகளுக்கான அடிப்படையாக அமைகிறது.
நமது உடலில் மட்டுமல்ல, பெண்ணுறுப்புகளிலும் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முக்கியமான பல நோய் தடுப்புகளுக்கு வழிமுறையாக அமைகிறது. இதேபோல் நமது வாயில் உள்ள பாக்டீரியாக்களும் நோய்களை தடுக்க பயன்படுகிறது. இதேபோல் நமது உடலில் உள்ள எல்லா திறந்த வெளி உறுப்பு பகுதிகளிலும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
நமது உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் இருந்து உள் நுழைவு பகுதிகளாக இருக்கும் வாய், கண், மூக்கு, காது, யோனிப்பகுதி, சிறுநீர்க்குழாய் ஆகிய எல்லா பகுதிகளிலுமே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அந்த பாக்டீரியாக்கள் நமது உடலுக்கு ரொம்ப ரொம்ப தேவையானது.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பெண்களின் கர்ப்பப்பைக்குள் தொற்றுக்கள் செல்வதை தடுக்கும் பாக்டீரியாக்கள்:
ஏனென்றால் நமது உடலில் நோயை உருவாக்குகிற பல பாக்டீரியாக்கள் வெளியே இருக்கிறது. அந்த பாக்டீரியாக்கள் நமது உடலில் உள்ளே நுழைவதற்கு முதல் தடுப்பு புள்ளியே நமது உடல் உறுப்புகளின் நுழைவு பகுதிகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான். இந்த நல்ல பாக்டீரியாக்கள் அனைத்தும் நோய்க்கிருமிகளிடம் இருந்து நமது உடலுக்கு பாதுகாப்பை கொடுக்கின்றன.
பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருக்குமே பொதுவாக பாக்டீரியாக்கள் என்பது குடல், வாய் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதற்காகத்தான் எப்போதும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். நமது வாய் பகுதியில் ஆரோக்கியமற்ற கெட்ட பாக்டீரியா வரக்கூடாது என்பதற்காகத் தான் தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதேபோல் பெண்களின் பெண் உறுப்புகளில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் அவர்களின் ஆரோக்கியத்துக்கு ரொம்ப முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. அதாவது பெண்களின் கர்ப்பப்பைக்குள் செல்கிற எந்தவொரு தொற்றுக்களையும் உள்ளே செல்லாமல் தடுப்பதற்கு இந்த நல்ல பாக்டீரியாக்கள் முக்கியமான வேலைகளை செய்கிறது.
அது என்ன வேலைகளை செய்கிறது என்று பார்த்தால், பெண்ணுறுப்பில் உள்ள யோனி என்கிற குழாயில் தான் கர்ப்பப்பையின் வாய் திறக்கும். யோனிப்பகுதி குழாயின் மறுபுறமானது நமது உடலின் வெளிப்புற பகுதியில் திறக்கும். இந்த அமைப்புகள் இப்படி இருக்கும் நிலையில் கர்ப்பப்பை நேரடியாக உடலின் வெளிப்புற பகுதியில் திறப்பது கிடையாது.
யோனிப்பகுதியை பாதுகாக்கும் அமிலத் தன்மை நிறைந்த பாக்டீரியாக்கள்:
பெண்கள் நிறைய பேருக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படும். என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்கள் பலரும் இதை கேட்பார்கள். 'டாக்டர் கர்ப்பப்பையில் நோயை உருவாக்குகின்ற தொற்றுகள் கர்ப்பப்பைக்குள் தானாகவே போய்விடுமா?' என்பார்கள்.
கண்டிப்பாக அப்படி தொற்றுக்கள் கர்ப்பப்பைக்குள் செல்ல முடியாது. ஏனென்றால் யோனி குழாயில் உள்ள பாதுகாப்பு அம்சமானது, எந்தவித நோய் தொற்றுக்களுமே கர்ப்பப்பையின் உள்ளே செல்ல விடாமல் தடுக்கும். இந்த யோனி பகுதியில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்குகிற சில பாதுகாப்பு விஷயங்கள் தான் இந்த நோய் தாக்கும் கிருமிகள் நமது கர்ப்பப்பைக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க அந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் முக்கியம்.
அதனால் தான் யோனி பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் எப்போதுமே அமிலத்தன்மை பி.எச். நிறைந்த பாக்டீரியாக்களாக இருக்கும். அதன் அமிலத்தன்மையானது 4.5 என்ற அளவில் பராமரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த அமிலத்தன்மை பி.எச். அளவானது மாறுபட்டு காரத்தன்மை பி.எச். உருவானால் தொற்றுகள் பரவலாம்.
அதனால் தான் இந்த யோனிப்பகுதியில் உள்ள பாக்டீரியாவின் அமிலத்தன்மை பி.எச். அளவை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். நமது உடலில் எப்போதும் இயற்கையாகவே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இதனை லாக்டோபேசிலிஸ் என்று சொல்வோம். லாக்டோபேசிலிசில் கிரிஸ்பேக்டர்ஸ், கெசேரி, ஜென்சினி ஆகியவை மிகவும் பொதுவான லாக்டோபேசிலிஸ் ஆகும். இதனுடைய தன்மையே இந்த அமிலத்தன்மை பி.எச். அளவை 3.5 முதல் 4.5 ஆக வைத்துக் கொள்ளும். அப்படி இருந்தால் தான் எந்தவித தொற்றுக்களும் உள்ளே வர முடியாது.
நமது கர்ப்பப்பையின் பி.எச். ஆல்கலைன், இது கர்ப்ப வாயில் இருக்கும் பி.எச். ஆகும். இதன் அளவானது 7.4 ஆகும். நமது உடலில் உள்ள எல்லா திரவங்களும் 7.4 என்ற அளவில் தான் இருக்க வேண்டும். நமது உடலில் உள்ள ரத்தமே ஒரு ஆல்கலைன் தான். அதுவும் 7.4 என்ற அளவில் தான் இருக்கும். அதனால் தான் பல நேரங்களில் பல தொற்றுக்கள் வெளியில் இருந்து உள்ளே வராமல் தடுப்பதற்கு அமிலத்தன்மை அதிக மாக இருக்கின்ற பி.எச்., லாக்டோபேசிலிசில் உருவாகிறது. எனவே பெண்களை பொருத்த வரைக்கும் இந்த கர்ப்ப்பப்பை வாயில் இந்த பி.எச்.ஐ பராமரிப்பது இந்த லாக்டோபேசிலிஸ் தான். இதனால் கர்ப்பப்பையானது நோய் தொற்றுக்கள் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த நல்ல பாக்டீரியா பழுதானாலோ அல்லது அழிக்கப்பட்டாலோ அல்லது குறைவானாலோ நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும். அது பல்வேறு பிரச்சி னைகளையும் ஏற்படுத்தும். நமது உடலில் அந்த நல்ல பாக்டீரியாக்கள் அழிவதற்கான காரணங்கள் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.
- சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
- குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.
காஞ்சிபுரம்:
கர்ப்பப்பை பிரச்சினைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தும் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.
பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடியாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கி இருக்கிறார்கள்.
வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள்.
அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர்.
அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆபரேசன் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட நாளில் தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.
இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. அதை தவிர்க்க விலை உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும்.
அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும். பின்னர் ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும்.
இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.
- அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
- 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.
விழுப்புரம்:
வேலூர் மாவட்டம் வாழப்–பந்–தல் கிரா–மத்தை சேர்ந்–த–வர் மொழிச்–செல்–வம் மனைவி பரி–மளா(வயது 33). இவ–ருக்கு கடந்த ஜூலை மாதம் கடு–மை–யான வயிற்று வலி ஏற்–பட்டது. இதை–ய–டுத்து அவர் சிகிச்–சைக்–காக முண்–டி–யம்–பாக்–கத்–தில் உள்ள விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வக்–கல்–லூரி மருத்–து–வ–ம–னையில் அனு–ம–திக்–கப்–பட்டார். அவ–ருக்கு கர்ப்–பப்–பை–யில் 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.
அதைத் தொடர்ந்து கல்–லூரி முதல்–வர் கீதாஞ்–சலி தலை–மையில் மக–ளிர் மற்–றும் மகப்–பேறு துறை தலை–வர் ராஜேஸ்–வரி தலை–மை–யில் டாக்–டர்–கள் சங்–கீதா, இளை–ய–ராஜா, நித்–திய பிரி–ய–தர்–ஷினி, சிறு–நீ–ர–கத்–துறை நிபு–ணர்–கள் அரு–ண–கிரி, பாஸ்–கர், மயக்–க–வி–யல் நிபு–ணர் டாக்–டர்–கள் செந்–தில்–கு–மார், மகேந்–தி–ரன், திருச்–செல்–வம் உள்–ளிட்டோர் கொண்ட மருத்–துவ குழு–வி–னர் அறுவை சிகிச்சை செய்து, கட்–டியை அகற்றி சாதனை படைத்–த–னர்.
இது–கு–றித்து முதல்–வர் கீதாஞ்–சலி கூறு–கை–யில், இது போன்ற அறுவை சிகிச்–சையைதனி–யார் மருத்–து–வ–ம–னை–யில் செய்–தால் ரூ.2 லட்சம் வரை செல–வா–கும். ஆகவே ஏழை, எளிய மக்–கள் இது போன்ற அறுவை சிகிச்–சை–க–ளுக்கு அரசு மருத்–து–வ–மனையை பயன்–ப–டுத்–திக் கொள்ள வேண்–டும் என்–றார். அப்–போது மருத்–துவ துணை கண்–கா–ணிப்–பா–ளர் புக–ழேந்தி, நிலைய மருத்–துவ அலு–வ–லர் ரவிக்–கு–மார், உதவி நிலை மருத்–துவ அலு–வ–லர் நிஷாந்த், நிர்–வாக அலு–வ–லர் சக்–தி–வேல் மற்–றும் அறுவை சிகிச்சை செய்த டாக்–டர்–கள் குழு–வி–னர் உடன் இருந்தனர்.
- சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது.
- ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.
ரோஜா என்றாலே பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதில் மருத்துவ குணங்கள் இருக்கு என்றால் எல்லோருக்கும் பிடிக்காமல் போகுமா என்ன? ரோஜா இதழ்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கண்களை கவரும் வண்ணங்களிலும் இருக்கிறது. இதில் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம்.
ரோஜா பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையவை. ரோஜா இதழ்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து சமநிலைப்படுத்துகிறது. இது தவிர சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும். மேலும், உடல் எப்போதும் சோம்பேறியாகவும் மந்தமாகவும் இருக்கும். எனவே, அடிக்கடி காய்ச்சல் வரும் நபர்களுக்கு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ரோஜா இதழ்களை ஈட்டு பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை போக்குவதற்கு ரோஜா இதழ்கள் மருந்ததாக பயன்படுகிறது. எனவே, ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் இளமையாகவும் இருக்கும்.
ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
- கர்ப்பப்பையை நீக்குவது வயதைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும்.
பெண்களின் உடலமைப்பில் கர்ப்பப்பை என்பது ஒரு சிக்கலான இனப்பெருக்க உறுப்பு. உள்ளங்கை அளவேயுள்ள இந்தக் கர்ப்பப்பை முழு வளர்ச்சி பெற்றபின் 2,3 குழந்தைகளைக் கூடத் தாங்கும் அளவுக்கு விரிந்து கொடுக்கும் தன்மைப் பெற்றது. சில பெண்களுக்கு மாதவியின் போது பல்வேறு பிரச்னைகள் வருவதுண்டு. சிலருக்கு கர்ப்பப்பையில் கட்டிகள், புண்கள், சத்து குறைவு போன்ற பிரச்சனை வருவதும் உண்டு. மெனோபாஸ் நேரத்திலும் அதிகப்படியான ரத்தப்போக்கு இருப்பதுண்டு.
மெனோபாஸ் காலத்தில் எண்டோமெட்ரியத்தின் அடர்த்தியானது 4 மில்லிமீட்டர் அளவுதான் இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் அது 6 மில்லிமீட்டர்வரை இருக்கலாம். இதற்கு மேல் அடர்த்தியாக இருந்தால் ஹார்மோன்கள் கொடுத்துச் சரி செய்யலாம் அல்லது கர்ப்பப்பையின் உள்ளே உள்ள திக்கான எண்டோமெட்ரியத்தை `ஹிஸ்ட்ரோஸ்கோப் எண்டோமெட்ரியல் அப்ளேஷன் (Hysteroscopic Endometrial Ablation) முறையில் சுரண்டி எடுத்துவிடலாம்.
அதன்பிறகு ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும். கர்ப்பப்பையை நீக்குவது வயதைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை அறுவைசிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கை சாத்தியமில்லை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு அந்தக் காயம் ஆறும்வரை, அதாவது 3 மாதங்கள்வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தாம்பத்திய உறவில் முன்பிருந்த நாட்டம் இல்லை என உணர்வதெல்லாம் உண்மையல்ல, அது மனது சம்பந்தப்பட்டது மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் வலி, ரத்தப்போக்கின் காரணமாக முன்பு இனிக்காத தாம்பத்யம், அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக மாறுவதாகச் சொல்கிறார்கள் பலரும்.
கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரத்தப்போக்கு முற்றிலும் நின்றுவிடுவதால், மாதவிடாய் வராது. ஆனால், அவர்கள் மெனோபாஸ் அடைந்துவிட்டதை உடல் சில அறிகுறிகள் மூலம் உணர்த்தும். திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும். முடி உதிர்வு, சரும வறட்சி, அந்தரங்க உறுப்பில் வறட்சி, உறவில் நாட்டமின்மை போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம். தேவைப்பட்டால் மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எனப்படும் ஹெச்ஆர்டி சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
- ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கும் பெண்கள் எளிதாகவே இதை கண்டறிந்துவிட முடியும்.
- கர்ப்பப்பை இறக்கத்தை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியும் போது சிகிச்சை பெறுவதும் எளிதாக இருக்கும்.
கர்ப்பப்பை இயல்பாகவே நான்கு பக்கமும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதசைகளால் சூழப்பட்டவை. அதனால் தான் ஓர் அங்குல வயிற்றில் குழந்தை வளரும் போது அதற்கேற்ப தசைகள் விரிவடைவதும், பிறகு தனது இடத்துக்குள் சுருங்கி கொள்வதுமாய் இருக்கிறது.
இவை இருக்குமிடத்தில் இருந்து தள்ளி கீழிறிங்கி வருவது தான் கருப்பை இறக்கம் என்று அழைக்கப்படுகிறது. இவை எல்லோருக்கும் வருவதில்லை. 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கம் செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அதிக குழந்தைகள், பிரசவத்துக்கு பிறகு உடனடியாக அதிக எடைகளை தூக்குவது. அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது. உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து கர்ப்பப்பை இறக்கம் உண்டாகிறது.கர்ப்பப்பை இறக்கத்தை ஒரு சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும் போது தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது. அப்போது கர்ப்பப்பை அருகில் இருக்கும் குடல், சிறுநீரகப்பை. மலக்குடல் மூன்றின் அருகில் இருப்பதால் இவை அழுத்தும் போது சிறுநீர் பிரச்சனை உண்டாகிறது.
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் கழிக்கும் உணர்வு இருப்பது, சிறுநீர் கழிக்கும் போது வலி உண்டாவது. வேகமாக சிரிக்கும் போதும், தும்மும் போதும் சிறுநீர் வெளியேறுவது, மலச்சிக்கல் ஏற்படுவது போன்றவை கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக பெண்கள் நினைக்கலாம்.
கர்ப்பப்பை இறங்கும் போது அவை சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை சேர்த்து இழுப்பதால் இடுப்பில் வலி உணர்வு அதிகரிக்கும். இயல்பாக வரும் இடுப்புவலியை போன்று இல்லாமல் இடுப்பில் சற்று அழுத்தமாக கைவைத்து நின்றாலே வலி உணர்வு குறையும். பிறகு மீண்டும் வலி உண்டாகக்கூடும்.
ஒவ்வொரு முறை இடுப்பு வலி உண்டாகும் போதெல்லாம் இடுப்பில் கை வைத்து ஊன்றி இருந்தால் வலி குறைவாக இருக்கும். சாதாரனமாக இடுப்பு வலி இருக்கும் போது இப்படி இருக்காது. தொடர்ந்து வலி இருக்கும் போது உங்கள் கைகளை ஊன்றி வைத்து பாருங்கள். ஒரு வேளை கர்ப்பப்பை இறக்கமாக இருந்தால் வித்தியாசத்தை நன்றாக உணர்வீர்கள்.

வெள்ளைப்படுதல் இயல்பானது. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு முந்தைய நாட்களில் வெள்ளைப்போக்கு இருக்கும். சிலருக்கு அதற்கு பின்பு இருக்கும் இவை சாதாரணமானது தான் ஆனால் எல்லா நேரங்களிலும் எப்போதும் வெள்ளைபோக்கு இருந்தால் அது கர்ப்பப்பை இறக்க அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
வெள்ளைபோக்கு துர்நாற்றத்துடன், வெளிறிய நிறத்தில் இருப்பது கருப்பை பிரச்சனைகளை குறிக்கும்.ஆனால் கர்ப்ப்பை இறக்கத்தால் உண்டாகும் வெள்ளைபோக்கு சாதாரணமாக இருக்கும். தொடர்ந்து இருக்கும் என்பதால் இதை பல பெண்களும் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.
பொதுவாக பெண்கள் குழந்தைபேறுக்கு பிறகு நடுத்தர வயதுக்கு மேல் தான் கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள். ஆனால் பலரும் இது மெனோபாஸ் காலத்தில் பெண் உறுப்பில் உண்டாகும் வறட்சி என்று நினைக்கிறார்கள்.
சிலருக்கு கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறியாக பெண் உறுப்பில் உலர்வுத்தன்மை, அந்த இடத்தில் அரிப்பு, சொரிந்து புண் இவை தொடர்ந்து ஏற்படும்.
35 வயதுக்கு மேல் மெனோபாஸ் வருவது அதிகரித்துள்ளது என்றாலும் கூட உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியும் சீராக இருந்தால் அது கர்ப்பபை இறக்கமாக இருக்க அதிக வாய்ப்புண்டு.
உடலுறவு கொள்ளும் போது யோனி பகுதி அருகில் கர்ப்பப்பை வாய் இறங்கியிருந்தால் அவை அதிக அசெளகரியத்தை உண்டு செய்யும். உடலுறவில் திருப்தியின்மை, உறவு கொள்வதில் சிக்கல், உறவுக்கு பின் ரத்தபோக்கு போன்ற அறிகுறிகள் கூட இதன் காரணமாக இருக்கலாம். இதை தொடர்ந்து தான் படிப்படியாக சிறுநீர்ப்பை, மலச்சிக்கல் பிரச்சனை உருவாகக்கூடும்.

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கும் பெண்கள் எளிதாகவே இதை கண்டறிந்துவிட முடியும். திடீரென வரும் தும்மல், தொடர்ச்சியான இருமல் போன்ற காலகட்டங்களில் வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு போன்று கருப்பை இறங்குவது போன்ற உணர்வு ஏற்படும். சதைப்பகுதி கீழ்ப்பாகத்தில் உரசுவது போன்று இருக்கும். வேகமாக நடக்கும் போது சிரமமாக இருக்கும்.
கர்ப்பப்பை இறக்கத்தை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியும் போது சிகிச்சை பெறுவதும் எளிதாக இருக்கும். மேற்கண்ட இந்த அறிகுறிகள் எல்லாமே கர்ப்பப்பை இறக்கத்துக்கான அறிகுறிகள் என்று அச்சப்பட வேண்டாம். அதே நேரம் அலட்சியப்படுத்தவும் வேண்டாம். ஏனெனில் கர்ப்பப்பை இலேசாக இறக்கம் கொள்ளும் போது இந்த அறிகுறிகளையும் தீவிரமாகவெளிப்படுத்தாது.
40 வயதுக்கு பிறகு மாதம் ஒருமுறை கர்ப்பபை குறித்த முழுபரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.






