search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடியில் விபத்தில் தலையாரி பலி
    X

    பரமக்குடியில் விபத்தில் தலையாரி பலி

    பரமக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையாரி பலியானார்.
    ராமநாதபுரம்:

    பரமக்குடி மைக்கேல் பட்டணத்தை சேர்ந்தவர் வேதமுத்து (வயது55). இவர் கமுதி தாலுகா கள்ளிகுளம் தலையாரியாக இருந்தார்.

    நேற்று பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்வதற்காக வேதமுத்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது முன்னால் சென்ற சைக்கிளை சரியாக கவனிக்கவில்லை.

    அதன் மீது வேதமுத்து மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சைக்கிளில் சென்ற கணக்கனேந்தல் ராமச்சந்திரன் (36) காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து பரமக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபிஇசக்கி பிரகதம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்.
    Next Story
    ×