search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
    X

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
    திருபுவனை:

    திருபுவனை பாலாஜி நகரை சேர்ந்தவர் ரகு (வயது55). இவர் திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குமுதசெல்வி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ரகு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று கொண்டு இருந்தார்.

    திருபுவனை ஏரிக்கரை அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரகு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு ரகு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை ரகு இறந்து போனதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×