search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative meeting"

    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொது மக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துதல், சென்னை தீவுத் திடலை மேம்படுத்துதல், விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த நிதியளித்தல் போன்றவை குறித்து பேசப்பட்டது.

    சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

    2023-2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறி விக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழு மத்தின் நிர்வாக நடவடிக்கை கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தொழில், முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம், (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், சி.எம்.டி.ஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, , நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன், குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் வருகை குறித்து நாளை தி.மு.க. ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.
    • முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டக் கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம். எம்.எல்.ஏ. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (23-ந் தேதி) பிற்பகல் 3 மணியளவில் ராமநாதபுரம், பட்டிணம் காத்தான் கிங்ஸ் பேலஸ் மகாலில் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகி கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் ராமநாதபுரத்தில் கலந்து கொள்ளும் மண்டல அளவிலான பாகமுகவர்கள் கூட்டம், மீனவர்கள் சந்திப்பு மாநாடு, கட்சி ஆக்கப்ப ணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ. தெரி வித்துள்ளார்.

    ஆகஸ்ட் 10-ந்தேதி ராமநாதபுரம், ஆகஸ்ட் 11-ந்தேதி ராமேசுவரத்தில் மீனவர்களுடன் சந்திப்பு மாநாடு என இரண்டு நாட்கள் தங்க உள்ளார். ராமநாதபுரம் வருகை தரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

    • கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாடான 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்' பெருவாரியான இளைஞர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாடான 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்' பெருவாரியான இளைஞர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு தகுதியான இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கினார்.

    கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ராமசந்திரன், வேல்முருகன், செல்லப்பன், வாசுதேவன், ஜெயகுமார், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், கார்த்திக், ரவி, முத்து குட்டி சேவக பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

    • எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    • டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளதிட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடை பெற்றது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியால் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மீது ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சில கருத்துக்களை தெரிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது பற்றி பேசலாம் என முடிவு செய்தனர். அதன்படி அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் தலை நகரான சிம்லாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. ஜெய்ப்பூர் அல்லது ராய்ப்பூரில் கூட்டத்தை நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆேலாசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய பர்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இதற்காக இந்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட 24 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார்.

    நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

    இந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உரு வாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும், மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    அதன் தொடர்ச்சியாக ஜூலை 17-ந்தேதி பெங்களூரில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டம் 18-ந்தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கும். உங்கள் அனைவரையும் பெங்களூர் கூட்டததில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய மீண்டும் ஆலோசிக்கிறார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இன்று சோனியாகாந்தி அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்காமல் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    பெங்களூரில் இன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் நாளை (18-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

    நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    நாளை மாலை நடை பெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளுக்கும் அழைப்பு வந்துள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இதனை ஏற்று பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவையும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    மாநிலங்களில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அர வணைத்து போதிய இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    • ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.
    • விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த மாதம் 20-ந் தேதி மதுரை வலையங்குளம் எழுச்சி மாநாடு திடலில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

    ஆலோசனை கூட்டம்

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ஏ.கே. சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்து பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டி யன், மருதூர் ராம சுப்பிர மணியன், கே.பி.கே.செல்வ ராஜ், அந்தோணி அமல ராஜா, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, சண்முக குமார், காந்தி வெங்கடாசலம், ஜெனி, வக்கீல் ஜெயபாலன், நெல்லை மாவட்ட ஆவின் பாலக தலைவர் கட்டளை அன்பு, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட பொரு ளாளர் காளிதாஸ் பாண்டி யன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், பகுதி மாணவரணி செய லாளர் ஜெய்சன் புஷ்பராஜ் , பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவிப்பது, வருகிற 20-ந்தேதி தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நடத்த உள்ள ஆர்ப்பாட்டம், மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    • தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ராஜா வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் விடுவது சம்பந்தமாக விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு நாமக்கல் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சரபங்கா வடிநில கோட்ட பிரிவு அலுவலகத்தில், தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ராஜா வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் விடுவது சம்பந்தமாக விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நாமக்கல் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சுரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், நீரேற்று பாசன சங்கங்கள் முறையற்ற முறையில் தண்ணீர் எடுப்பதை நிறுத்தாவிட்டால் ராஜா, பொய்யேரி, கொமரபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்களில் முறை வைத்து தண்ணீர் விடும் பாசன முறையை அமுல்படுத்த கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முறை வைத்து தண்ணீர் விடும் பாசன முறையை அமல்படுத்தினால் மோகனூர் ராஜாவாய்க்காலில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ராஜா, பொய்யேரி, கொமராபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகளின் நலன் கருதி முறை வைத்து தண்ணீர் விடும் முடிவை பொதுப்பணித்துறையினர் கைவிட வேண்டும்.

    காவிரி ஆற்றின் கீழ் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தாமதம் ஏற்படுவதால் காவிரி ஆற்றில் குறுக்கே மணல் எடுப்பதற்காக போடப்பட்டுள்ள மணல் தடுப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆலோசனை கூட்டத்தில் வேலூர் ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வையாபுரி, செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் வையாபுரி, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் அஜித்தன், மோகனூர் விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் வரதராஜன், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • பா.ம.க. சிறுபான்மை பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறுபான்மை பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ரா ஹிம் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு தலைவர் இமானுவேல் முன்னிலை வகித்தார்.

    மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் முகையதீன் சிறப்புரை யாற்றினார். ராமநாதபுரம் நகர செயலாளர் பாலகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் சை. அக்கிம் கலந்து கொண்டு பேசினார்.

    ஒன்றிய செயலாளர் பொறியாளர் ஷரீப் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். திருப்புல்லாணி பாமக ஒன்றிய செயலாளர் மக்தும்கான் தீர்மானம் நிறைவேற்றினார். ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி உரை கூறினார்.

    ஆலோசனைக் கூட்ட த்தில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறை வாசி களை உடனடியாக விடுத லை செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    வருகின்ற ஜூலை 29-ந் தேதி திருநெல்வேலி மாவட்ட மாநாட்டிற்கு வருகை தரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசை வரவேற்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அனைத்து பொறுப்பா ளர்களும் சென்று கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    முன்னதாக சிறுபான்மை பிரிவின் மாநில தலைவராக பதவி ஏற்று முதல் முறை யாக ராமநாத புரத்திற்கு வருகை தந்த ஷேக் முகை யதீனுக்கு சிறு பான்மை பிரிவு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட தலைவர் இமானு வேல் ஆகியோர் பொன்னா டை அணிவித்து வரவேற்றனர்.

    • திருவிழா நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. அறிவுரை வழங்கினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா வரும் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து 26-ந் தேதி கொடியேற்றுதலும், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் வன பூஜையும், மறுபூஜையும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை புகழ்பெற்ற கால்நடை சந்தை, குதிரை சந்தையும், 16-ந் தேதி பால்பூஜையும் நடைபெற உள்ளது.

    இந்த திருவிழாவில் லட்சக ணக்கான பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் திருவிழா நடத்துவது தொட ர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோ சனைகூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவல கத்தில் ஆர்.டி.ஓ. திவ்யபி ரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வரன், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, கோவில் செயல் அலுவலர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், பொதுசுகாதாரத் துறையினர், கால்நடை பராமரிப்பு த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவிழாவில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி அறிவுரை வழங்கினார்.

    • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • துணை செயலாளர் பொற்கிலை என்ற பூரணி, மாநில பொருளாளர் வீரப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் வில்லியனூர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், தெற்கு மாநில செயலாளருமான யூ.சி.ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது, பூத் கமிட்டி அமைப்பது, வார்டு நிர்வாகிகள் நியமிப்பது மற்றும் மாநிலம் முழுவதும் கட்சி கொடியை ஏற்றுவது என்று ஒருமனதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் அவை தலைவர் அரிகிருஷ்ணன், இணை செயலாளர் லாவண்யா, துணை செயலாளர் பொற்கிலை என்ற பூரணி, மாநில பொருளாளர் வீரப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.
    • பட்டா நிலத்தில் காமராஜருக்கு முழு உருவச் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    கடையம்:

    கடையம் கோமதிநாயகம் வளாகத்தில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சோனியாகாந்தி பேரவை செயலாளர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் அழகுதுரை, முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் கடையம் பகுதியில் வாங்கப்பட்ட பட்டா நிலத்தில் காமராஜருக்கு முழு உருவச் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ராமநதி, கடனாநதி பாசன நீர்மடை, கால்வாய்களை விவசாயிகளின் நலன்கருதி விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடையம் - ராமநதி செல்லும் சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடையத்திற்கு புதிய தாலுகா அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இதில் ஐ.என்.டி.யு..சி. மாநில செயலாளர் மாரிகணேசன் மற்றும் மும்பை ராமையா, மகளிர் அணியினர் சீதாலட்சுமி, கே.டி.ஆர். சுகந்தா, வட்டாரத் துணைத் தலைவர் ராமச்சந்திர பாண்டியன், அந்தோணி, சாஸ்தா மாரிதுரைசிவா, பேச்சி அருண்குமார், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
    • தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    ஜூன் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ந்தேதி வெள்ளிக் கிழமை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரி யபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • ஆலோசனை கூட்டத்திற்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மேயர் சரவணன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை பழையபேட்டையில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது. நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலைராஜா, மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மேயர் சரவணன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், கோபி, அண்டன் செல்லத்துரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், இளைஞரணி மீரான், மாவட்ட பிரதிநிதிகள் வேங்கை வெங்கடேஷ், முகமது அலி, இசக்கி பாண்டியன், சுரேஷ், மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், மீரான், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பழையபேட்டை நிர்வாகிகள் செந்தில் முருகன், நெல்லையப்பன், மாரியப்பன், பண்டாரம், ராஜேஸ்வரி, சார்லஸ் முத்துராஜ், அங்கப்பராஜ், பாண்டி, பரமசிவன், முருகன், முத்துசங்கா், சுபராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×