search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gurunathasamy temple festival"

    • விதிமீறி வாகன ஓட்டிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடித்தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. இந்த நாட்களில் மட்டுமே கோவிலுக்கு வரும் வாகனங்களில் வருவேரிடம் பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்பட்டது.

    ஆனால் கடந்த 13-ந் தேதி விடுமுறை நாளிலும் விதிமீறி வாகன ஓட்டிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து வாகன ஒட்டிகள் கூறியதாவது, கடந்த 12-ந் தேதி ஆடித்திருவிழா முடிந்தாலும் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலுக்கு ஆயிரக்கண க்கானேர் வந்தனர்.

    இவர்களிடம் விதிமீறி கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர் என்றனர்.

    இது குறித்து அந்தியூர் யூனியன் அதிகாரி ஒருவர் கூறும்போது,

    திருவிழா நடந்தது 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மட்டுமே வாகனங்களுக்கு வசூல் செய்ய வேண்டும். அதை மீறி வசுலித்து இருந்தால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றார்.

    • திருவிழா நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. அறிவுரை வழங்கினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா வரும் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து 26-ந் தேதி கொடியேற்றுதலும், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் வன பூஜையும், மறுபூஜையும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை புகழ்பெற்ற கால்நடை சந்தை, குதிரை சந்தையும், 16-ந் தேதி பால்பூஜையும் நடைபெற உள்ளது.

    இந்த திருவிழாவில் லட்சக ணக்கான பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் திருவிழா நடத்துவது தொட ர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோ சனைகூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவல கத்தில் ஆர்.டி.ஓ. திவ்யபி ரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வரன், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, கோவில் செயல் அலுவலர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், பொதுசுகாதாரத் துறையினர், கால்நடை பராமரிப்பு த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவிழாவில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி அறிவுரை வழங்கினார்.

    ×