search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைக் கூட்டம்"

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.கூட்டத்திற்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முரு கேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதா வது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிச் சாமி வழிகாட்டுதல்படி நாம் பூத் கமிட்டி அமைத்தால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நமது கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி செல்லும். கடந்த சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டியில் அதிகமான பெண்கள் பணியாற்றியதால் 30,000 வாக்கு வித்தியாசத் தில் நான் வெற்றி பெற்றேன்.

    தேவர் ஜெயந்தி விழா விற்கு எடப்பாடியார் வர முடியுமா என்று கேட்டார் கள். ஆனால் அங்கு வந்தார். குறிப்பாக அ.தி.மு.க. என்பது எதிர்ப்பு அரசியலை கொண்டுதான் வளர்ந்தது. புரட்சித்தலைவர், புரட் சித்தலைவி அம்மா ஆகி யோரை தொடர்ந்து எடப் பாடியாரும் வெற்றி பெற் றார்.

    இன்றைக்கு தலைமை கழகம் சின்னம் ஆகியவற்றை இழந்த ஓ.பி.எஸ். தூண்டுத லால் சிலர் கோஷம் போட்ட னர். அதையெல்லாம் எடப் பாடியார் முறியடித்து உள் ளார். தேவர் ஜெயந்தி விழா வில் குருபூஜையில் ஸ்டா லின் விபூதியை கூட வாங்கா மல் மரியாதை கொடுக்க வில்லை. ஆனால் எடப்பாடி யார் தேவர் காலில் விழுந்து வணங்கி உரிய மரியாதை அளித்தார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் காந்தி, பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி வேல்ராஜ், வட்டச் செயலாளர் பொன்முருகன், பாலா, எம்.ஆர்.குமார் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க இன்பதுரை தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
    • பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. அ.தி. மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் வக்கீல் பிரிவு மாநிலச் செயலாளராக ஐ.எஸ். இன்பதுரை நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க இன்பதுரை தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் பெற்ற பிறகு அ.தி. மு.க. அணிகளில் வக்கீல் அணியே முதல் கூட்டத்தை கூட்டியுள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது தி.மு.க. அரசு போட்டு வரும் பொய் வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக வக்கீல் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    • ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது.
    • வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்து ரைத்தனர்.

    மேலும் மருத்துவத் துறை சார்பில் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் நோய்கள், டெங்கு, மலேரியா மற்றும் கொசு ஒழிப்பு மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் பனை விதைகள், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துசாமி, ஜோதி, சரண்யா, உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் தலைமை தாங்கி பேசினார்.

    மாவட்ட துணை தலைவர் மோகன், முருகன், ராணி வெங்கடேசன், வசீகரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் நிர்வாகிகள் காஜா, ஏ.கே.சுந்தரமூர்த்தி, சுவேதா பானு, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் அடையும் வரையில் ஒரு கோடிக்கும் மேலான பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழா முதல்-அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது போன்று மாவட்ட கழகம் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் சார்பிலும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும், தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் சிறப்பாக நடத்த வேண்டும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது.

    பெருந்துறை:

    பெருந்துறையில் விநாயகர் சதுர்த்தியை விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பெருந்து றை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது. சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும். சென்ற ஆண்டு ஊர்வலம் நடத்தி யவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும்.

    சிலை வைக்கப்படும் நபர்கள் சிலையை பாதுகாப்பாகவும், அரசு வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி வைக்க வேண்டும் என்பது உட்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதில் பெருந்துறை, சென்னிமலை மற்றும் காஞ்சிக்கோவில் ஆகிய போலீஸ் நிலையம் பகுதிகளில் விழா ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

    • கூட்டம் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.
    • 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி கூட்டரங்கில் மாதாந்திர மன்ற கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வரவு - செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.

    மழைக்காலங்களில் சாலை மற்றும் தெருக்களின் ஓரம் தேங்கும் கழிவுநீரை அகற்றுவதற்காக மத்திய ஸ்வச்சபாரத் திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாகனம் மற்றும் குப்பைகளை அள்ளி செல்ல தானியங்கி வாகனம் வாங்கவும், கழிவு நீர் கால்வாய் இல்லாத பகுதிகளில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், பழுதடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீர் கால் வாய்களை புனரமைக்கவும், 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

    • காவேரிப்பட்டிணம் தனியார் ஓட்டலில் காலை 10 மணியளவில் நடக்கிறது.
    • காவேரிப் பட்டிணத்தில் உள்ள காந்தி மண்டபம் குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

    கிருஷ்ணகிரி, 

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவருமான சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ண கிரி, பர்கூர் ஊத்தங்கரை, சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட, வட்டார, நகர மற்றும் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 27 தேதி காவேரிப்பட்டிணம் ஓட்டல் பாலாவில் காலை 10 மணியளவில் நடக்கிறது கூட்டத்தில் காவேரிப் பட்டிணத்தில் உள்ள காந்தி மண்டபம் குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் உள்ளிட்ட ஆலோசனை நடத்த உள்ளது எனவே கூட்டத்தில் மாநில மாவட்ட வட்டார நகர மற்றும் கட்சியின் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோ சனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு தனது அறிக்கை யில் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

    • ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
    • மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும்.

    செங்கோட்டை:

    மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட பொருளாளர் சண்முகையா வரவேற்று பேசினார். தொடா்ந்து மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    700 வாகனங்கள்

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று நாம் அனைவரும் குடும்பத்துடன் மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் உள்ளது. எனவே அன்று அதிகாலையில் அவருடைய நினைவிடம் சென்று அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் மாநாட்டிற்கு வாகனங்களில் அணிவகுத்து செல்ல வேண்டும்.

    ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூருக்கும் ஒதுக்கப் பட்டுள்ள வாகனங்களில் அனைவரும் பாதுகாப்புடன் பயணம் செய்து மாநாடு சென்று வர வேண்டும். வாடகை கார், வேன், லாரி மற்றும் சொந்த உபயோக வாகனங்கள் என சுமார் 700 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

    குடிநீர் வசதி

    ஒவ்வொரு வாகனத் திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப் பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். ஒருசேர சென்று மாநாட்டினை சிறப்பு செய்து மீண்டும் ஊருக்கு பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.

    மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகள் அனைவருக்கும் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும். மாநாட்டை வெற்றி அடைய செய்து அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர முதல்படி எடுத்து வைத்திடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர். ராமசந்திரன், செல்லப்பன், வசந்தம் முத்துபாண்டியன், ஜெயகுமார், ரமேஷ், மகாராஜன், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், எம்.கே. முருகன், பரமேஸ்வர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வைத்தார்.
    • சபரிஷன், திருப்பதி, அருண்குமார் மற்றும் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வைத்தார். மாவட்ட செயலாளர் ஆனந்த குமார் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் சம்பத், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் அர்ச்சனா, சபரிஷன், திருப்பதி, அருண்குமார் மற்றும் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கட்சியை வலுப்படுத்துவது, கிளை தோறும் கொடிக்கம்பம் ஏற்றுதல் , திண்ணை கூட்டம் நடத்துவது, வரும் டிசம்பர் மாதம் தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு பொது செயலாளர் தலைமையில் நடத்துவது மற்றும் பிப்ரவரி 4-ல் பெருந்துறையில் நடைபெறும் கொங்கு மக்கள் மாநாட்டிற்கு திரளாக கலந்து கொள்வது போன்ற கட்சி வளர்ச்சிக்கான கருத்துக்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

    • தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் மற்றும் வடக்கு ஒன்றிய பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச் சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீமானூத்து வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமை தாங்கினார்.

    அவைத் தலைவர் பெத்தணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், குமுதா, பாலகிருஷ்ணன், அன்னைராஜா, ஒன்றிய பொருளாளர் ஆண்டி, மாவட்ட பிரதிநிதிகள் பிரசாத், எபினேசர், துரைப்பாண்டி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கலைவாணன், கலை இலக்கிய மாவட்ட துணை அமைப்பாளர் பிரசாந்த், கீரிபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் மற்றும் வடக்கு ஒன்றிய பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • தருமபுரி செல்லும் வாகனங்கள் நகரின் உட்புறம் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்லவும், பேரூராட்சி சார்பில் தற்காலிக நிழல்கூடம், குடிநீர் வசதி செய்து தருதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பாலக்கோடு.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.

    கூட்டத்தில் பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். பேருந்து நிலைய சீரமைப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ஆலோசனையில் திரௌபதி அம்மன் கோவில் முன்பு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கலாம் என்றும், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள ஜே.சி.பி வாகனங்கள், லாரிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தற்காலிகமாக கோவில் உட்புறமாக வரிசைப்படுத்தி நிறுத்திக் கொள்ளவும்,

    தருமபுரி செல்லும் வாகனங்கள் நகரின் உட்புறம் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்லவும், பேரூராட்சி சார்பில் தற்காலிக நிழல்கூடம், குடிநீர் வசதி செய்து தருதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் இது குறித்து வணிக நிறுவனங்கள், டிராவல்ஸ், ஆட்டோ மற்றும் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசித்து தற்காலிக பேருந்து நிலையம் இடமாற்றம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என ஆலோசனை கூட்ட முடிவில் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தெரிவித்தார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி.எஸ்.பி. சிந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×