என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "consultation"
- ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும்.
- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஆடி அமாவாசையையொட்டி இந்த திருவிழா நடைபெறுவது தொடர்பாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பழனியப்பா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், திருவிழாவில் போலீசாரின் மூலம் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் காவிரி ஆற்றில் உரிய தடுப்பு வசதிகள் , மின்சார துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சி மூலம் குடிநீர், சுகாதார வசதிகள் செய்ய வேண்டும், ஐயாறப்பர் கோவில் நிர்வாகம் மூலம் ஆகம விதிகளின்படி விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் பேரூராட்சி துணை தலைவர் நாகராஜன், போலீசார், பொதுப்பணித்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் சுதந்திர தினவிழா ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.
சுதந்திர தினவிழாவை காண்பதற்காக வரும் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, போக்கு வரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டடார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பாதேவி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 2 தினங்களுக்கு முன்பு சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த மோதல் உச்சத்தை பெற்றது.
- கர்நாடக மாநிலத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடக்கிறது. மற்றொரு கூட்டம் மந்திரிகளுடன் நடத்தப்படுகிறது.
பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் ஆட்சி அமைத்து 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் கர்நாடக காங்கிரசில் மோதல் நடைபெற்று மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் இடையே பிரச்சினைகள் வெடித்து இருக்கின்றன.
அதாவது அமைச்சர்கள் தங்களிடம் எதுவும் ஆலோசிக்காமல் சுயமாக முடிவு எடுப்பதாகவும், சில மந்திரிகளை அணுகவே முடிய வில்லை என்றும் மூத்த எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த மோதல் உச்சத்தை பெற்றது.
ஊழல் குற்றச்சாட்டு உட்கட்சி பூசல் ஆகியவற்றின் காரணமாக காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 2-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், ராகுல்காந்தி தலைமையில் என 2 கூட்டம் நடக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடக்கிறது. மற்றொரு கூட்டம் மந்திரிகளுடன் நடத்தப்படுகிறது.
அரசாங்கத்துக்கும், கட்சிக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கவும், அதிருப்தியை சமாளிப்பதற்காகவும் ஒரு குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏ.க்களை அணுகுவதால் மாற்றம் வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.
- கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
- இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அந்த சட்டதிருத்தம் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால் அந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதை அமல்படுத்தக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஒருங்கிணைந்த இலங்கையின் வளர்ச்சிக்காகவும், இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, தங்கள் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டம் அதிபரின் செயலகத்தில் நடக்கிறது.
இதுகுறித்து அதிபரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அதிபர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அதிபர் செயலகத்தில் நாளை நடைபெறும். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். இதில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட அனைத்து கட்சிகளும், சுயேட்சைகளும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான தேசிய நல்லிணக்க திட்டம் பற்றி எடுத்துரைக்கப்படும்.
- பாதாள சாக்கடை திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- ஜமாஅத் நிர்வாகிகள் பலர் தங்களது கருத்துக்க ளையும், சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சியில் உள்ள பொதுமக்கள் பல ஆண்டுகளாக பாதாள சாக் கடை திட்டத்தினை அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தி.மு.க. கட்சி சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக் குறுதி அளித்தனர்.
இந்த நிலையில் கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் அனைத்து ஜமாஅத்தார்கள், நகர்மன்ற தலைவர், துணை தலைவர், நகர் மன்ற உறுப் பினர்கள், மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட பாதாள சாக்கடை திட்டம் பற்றிய கருத்து கேட்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பில் நகரிலுள்ள 21 வார்டுகள் முழுவதும் வெளியேறும் கழிவு நீரை கடற்கரை வரை கொண்டு சென்று அங்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் செப்டிக் டேங்க் மற்றும் மின் மோட் டார் அறைகள் அமைத்து சுமார் ரூ. 13 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக உள்ளதாகவும், அதற்கு 3 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என்றும், காணொலி மூலம் விளக்கி கூறப்பட்டது.மேலும் கீழக்கரை கடற் கரை பகுதியில் அரசு புறம் போக்கு நிலம் ஏதும் இல்லை என்பதால் செல்வந்தர்கள் மற்றும் சங்கங்கள் ஜமா அத்திற்கு உட்பட்ட இடங்கள் இருப்பின் யாரேனும் தான மாக தர முன்வந்தால் இத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற தகவலுடன் கோரிக்கையும் வைக்கப் பட்டது. ஜமாஅத் நிர்வாகி கள் பலர் தங்களது கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர்.
மேலும் இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் நகராட்சி பொறி யாளர் அவர்களிடம் விளக் கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
- சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது.
- மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நடப்பாண் டில் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 ஆயிரம் கூடுதலாகும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்து வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப் பிக்கும் நடை முறை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது.
இந்நிலையில், விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் ஆர்.முத்துச்செல்வன் கூறியதாவது:-
நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26 ஆயிரத்து 805 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 394 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது.
- சில்லடி கடற்கரையை மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் அறிவிக்க ப்பட்டுள்ள திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.
நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய கட்டடம், சாமந்தான் பேட்டை மீன்பிடி துறைமுகம், பட்டினச்சேரி கடல் அரிப்பு தடுப்புச் சுவர், நாகையில் பணிபுரியும் மகளிர்க்கு அரசு தங்கும் விடுதி, நாகூர் நெய்தல் பூங்கா, நாகை புதிய கடற்கரையை நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்படுத்துவது, நாகூர் துணை மின் நிலையம், நம்பியார் நகர் புயல் பாதுகாப்பு மையம், நாகை வருவாய் அலுவலகம் பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு ஆகிய திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாகையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு, சில்லடி கற்கரையை மேம்படுத்துவது, தமிழ்நாடு ஹோட்டல் புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் முகூர்த்த கால் மற்றும் பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோ சனை செய்வதற்காக மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெறு கிறது.
இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன.
இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்டக் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள் அனைவரும் திர ளாக பங்கேற்று சிறப் பிக்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
- 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
- மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு துணை வேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.
கோவை,
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவடைந்தது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளநிலை பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தில் உள்ள 6 இளநிலை பட்டப் படிப்புகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 756 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் 79 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதில், 287 விளையாட்டு வீரர்கள், 77 மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசைப்பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூலை 1 -ந் தேதி வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு விளையாட்டு வீரர்கள் பிரிவில் 70 விண்ணப்பதாரர்களும், மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு 71 விண்ணப்பதாரர்களும், அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முறையே 6515 விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்தது.
இதன் தொடர்ச்சியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான 20 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 64 இடங்கள் நிரப்பப்பட்டன. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் நிரம்பவில்லை.
மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு துணை வேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ் வழங்கினார். வேளாண் பல்கலைக்கழக முதன்மையர் வெங்கடேச பழனிசாமி, மீன்வளப்பல்கலைக்கழக முதன்மையர் பாலசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர்.
- நுகர்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி. விலைப்பட்டியல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
- உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
மதுரை
மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஜி.எஸ்.டி.வரி முறையில் தற்போது புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகள், மாற்றங்கள் போன்றவற்றில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில வரி ஆலோசகர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. வரி முறையில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும், கடந்த 6 மாதங்களாக நமது உறுப்பினர்களுக்கு ஜி.எஸ்.டி. விலைப்பட்டியலில் ஏற்படும் சிறிய தவறுகளுக்கு கூட பெரிய அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராதத்தை தவிர்ப்பதற்கு உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
- விருதுநகர் மாவட்டத்தை குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசினார்.
- குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி களிலும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், பொதுமக்க ளுக்கு குடிநீர் வழங்கும் பணி தான் அரசின் முதன்மையான பணியாகும். ஆகவே அதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். அதற்கு தேவை யான நிதி பெற்று தரப்படும்.மேலும் விருதுநகர் மாவட் டம் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றார்.
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ராஜபாளையம் நகராட்சி யில் 1 முதல் 21 வார்டு பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும் 22 முதல் 42 வார்டு பகுதி களில் 10 முதல் 15 நாட்க ளுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனை சரி செய்து 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் கேட்கின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட வேண்டும். பேரூராட்சி மற்றும் ஊராட்சி கிராம பகுதிகளிலும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய இதுபோல் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், கண்டிப்பாக கிராம பகுதிகளிலும் முறை யாக குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார்.
கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சேர்மன்கள், கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
- மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2023 - 24 ஆம் கல்வியாண்டு இளநிலை பாடப் பிரிவுகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) மலா்விழி கூறியதாவது:-
இக்கல்லூரியில் முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
நாளை காலை 9 மணிக்கு பி.எஸ்.ஸி. கணினி அறிவி யல், பி.எஸ்ஸி. கணிதம், பி.எஸ்ஸி. இயற்பியல், பி.எஸ்ஸி. வேதியியல், பி.எஸ்ஸி. புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 3 ஆம் தேதி 9 மணிக்கு பி.எஸ்ஸி. தாவரவியல், பி.எஸ்ஸி. விலங்கியல், பி.எஸ்ஸி. புவியியல், பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதேபோல, இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 5 முதல் 7 ஆம் தேதி வரையும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இக்கலந்தாய்வுக்கு மாணவிகள் குறித்த நேரத்தில் கட்டாயம் வர வேண்டும். வரும் போது எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 1, பிளஸ்- 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான உரிய சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல், ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்களை மாணவிகள் எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்