search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consultation"

    • அஞ்சலக ஊழியா்களுக்கு அஞ்சல் வணிக வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.
    • அஞ்சலக பதிவுபெற்ற வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    அவிநாசி,அக்.15-

    அஞ்சலக வார விழாவையொட்டி, அஞ்சலக ஊழியா்களுக்கு அஞ்சல் வணிக வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.

    அவிநாசி அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவிநாசி அஞ்சல் அலுவலா் ஏஞ்சலின் ஐஸ்வா்யா வரவேற்றாா்.

    அஞ்சல் வணிக வளா்ச்சித் திட்டம், விரைவு அஞ்சல் சேவை, பாா்சல் சேவை, இணையவழி, வெளிநாட்டு அஞ்சல், அஞ்சலக வங்கிக் கணக்கு சேவை, வங்கி வட்டி விகிதம், பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம், பென்ஷன் திட்டம், ஆதாா் சேவைகள் உள்ளிட்டவை குறித்து திருப்பூா் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் விளக்கமளித்தாா்.

    இதில், தெக்கலூா், சேவூா், பழங்கரை, துலுக்கமுத்தூா், செம்பியநல்லூா் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த அஞ்சலக பதிவுபெற்ற வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    • திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • பெரும்பாலானோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று நடைபெற்றது.

    திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு பகுதி செயலா ளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலா ளர் நிலையூர் முருகன் முன் னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் செல் லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை பொருத்த வரை ஏற்கனவே பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் பணி செய்து கொண்டிருக்கிறீர் கள். விரைவில் நாடாளு மன்ற தேர்தல் வரவுள்ளது. எனவே தற்போது தேர்தல் பணிகளை செய்ய தொடங் குங்கள். வீடு வீடாக சென்று அ.தி.மு.க.வின் திட்டங்களை யும் தி.மு.க. தடுத்து நிறுத்திய அ.தி.மு.க.வின் தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறுங்கள். நகை கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, செய்வதாக அறிவித்து தி.மு.க. மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி கடந்த முறை ஆட்சிக்கு வந்துள்ளது.

    அது குறித்து நீங்கள் வாக்காளர்களிடம் வீடு, வீடாக சென்று தெரிவிக்க வேண்டும். தற்போது நாடா ளுமன்றத் தேர்தலுக்காக ஒரு சிலருக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்கிவிட்டு பெரும்பாலா னோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட வில்லை.

    அது குறித்தும் மக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிக்க வேண்டும். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கட்சி தலைமை நிறுத்தும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதை நமது இலக் காக கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார் வட்டச் செய லாளர்கள் பொன்.முருகன், நாகரத்தினம், பாலா, வாசு தக்கார் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கபிஸ்தலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஏ. எம். மோகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் ஊராட்சி செயலாளர் சேரன் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி சின்னப்பா, ஊராட்சி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், கருணாநிதி, மஞ்சுளா கோபால், ராணி கலியபெருமாள், ரோசாப்பூ சுந்தரமூர்த்தி, மதுபாலா மூர்த்தி, ரவி, சித்ரா அன்பரசன், மாலதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தி.மு.க ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும்,வரவு செலவு கணக்கு குறித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள், நடைபெற உள்ள பணிகள், குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் கோபால், தி.மு.க நிர்வாகிகள் சண்முகம், நேரு, சுரேஷ், அன்பழகன், கலியபெருமாள், மூர்த்தி, முத்துராமன், ராஜ் ,வசந்த், பிரகாஷ் ,அமீர், ராஜ்குமார், சாமிநாதன், உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வேஷ்டி, புடவைகள் மற்றும் மதிய விருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் சார்பில் வழங்கப்பட்டது.

    • கருணாநிதி நூற்றாண்டு விழா ஆலோசனை நடக்கிறது.
    • ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் வருகிற 14-ந்தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவ லகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார்.

    கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி கருத்தரங்கு, பட்டிமன்றம் மற்றும் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளன. இதில் அமைச் சர்கள் ராஜகண்ணப்பன், அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். மேலும் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
    • பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நாம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், சிறப்பாகத் திட்டமிட்டு, இந்த ஆண்டும் நாம் எதிர்வரும் பருவமழைக் காலத்தை அதேபோன்ற முறையை கையாளவேண்டும்.

    கடந்த ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட புயல், கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து, பேரிடர்களின் சேதத்தை குறைப்பதற்கும், பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வள ஆதாரத்துறை ஆகிய துறைகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 716 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக 4399 ஆக இருந்த பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 3770 ஆக குறைந்துள்ளன.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

    வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

    பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். பள்ளிகளில் மாணவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

    பருவமழைக் காலத்தில், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, நோயுற்ற மக்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு, உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருத்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள், கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை பல்துறை மண்டல குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளையும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல. இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. அமைச்சர் பெரு மக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்யதிட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன்.

    இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்பதை கண்டிப்போடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உட னுக்குடன் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவ மழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அனிதா ராதா கிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, டி.ஜி.பி. சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் ரத்தோர், தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • காவல்துறையில் சீர்திருத்தம் தொடர்பாக அலுவலர்களுடன் விவாதம்
    • போலீஸ் ஏ.டி.ஜி.பி. உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்பு

    கோவை,

    மேற்கு மண்டல காவல்து றையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த பணிகள் குறித்த 5-வது போலீஸ் கமிஷன் ஆலோசனைக் கூட்டம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார்அகர்வால், முன்னாள் நீதிபதி செல்வம், முன்னாள் கலெக்டர் அலாவுதீன் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர்கள் கிராந்திகுமார்பாடி, அருணா, கிறிஸ்துராஜ், ராஜகோபால்சுன்கரா, உமா, கார்மேகம், சராயு, சாந்தி, கோவை மாநகராட்சி கமிஷனர்பிரதாப், போலீஸ் கமிஷனர்கள் பால கிரு ஷ்ணன், பிரவீன்குமார் அபினபு, விஜயகுமாரி, மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்வரி, டி ஐ ஜி-க்கள் சரவணசுந்தர், ராஜேஸ்வரி, எஸ்.பி.க்கன் பத்ரி நாராயணன், பிரபாகர், சாமிநாதன், ஜவகர், அருண் கபிலன், ராஜேஷ் கண்ணன், ஸ்டீபன் ஜேசுபாதம், சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் காவல்து றையில் பணிநி யமனம், ஊதியம், பணிக ளுக்கான நெறிமுறை, மனஅழுத்தம், மனஉளை ச்சலை போக்குவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    • கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
    • ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

    தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து கோப்பை கவர்னருக்கு அனுப்பியது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்புக்கு அனுமதி தரவில்லை.

    கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதோடு இந்த கோப்பும் கிடப்பில் போடப்பட்டது.

    புதிதாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    கடந்த மாதம் கவர்னர் தமிழிசை, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூடி உள்ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பினார்.

    இதனிடையே நீட் அல்லாத கலை, அறிவியல், தொழில்படிப்புகளுக்கான 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து, 3-ம் கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

    ஆனால் புதுவையில் மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கவில்லை. உள் ஒதுக்கீடு அனுமதிக்காக கவுன்சிலிங் தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 இடங்கள் கிடைக்கும். அரசு மருத்துவக்கல்லூரியில் புதுவைக்கு 10, காரைக்காலுக்கு 2, மாகி 1 என 13 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிம்ஸ் 6, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தலா 9 இடங்களும் கிடைக்கும்.

    இதுதவிர பி.டி.எஸ். 11 சீட், பி.ஏ.எம். 4 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். மருத்துவ கல்விக்கான உத்தேச தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.

    இதற்காக இன்று மாலை 5 மணி வரை அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க சென்டாக் அனுமதி அளித்துள்ளது.

    விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இதன்பிறகு மீண்டும் இறுதி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். இதன்பிறகு கவுன்சிலிங் நடைபெறும். இதனால் ஓரிருநாளில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.
    • அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன.

    6326 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1768 பி.டி.எஸ். இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றி இடங்கள் நிரப்பப்பட்டன.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.

    மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 11-ந் தேதி மாலைக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 14-ந் தேதி மாலைக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டது.

    அதன்படி பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். ஒரு சிலர் சேரவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவ-மாணவிகளின் பெயர் விவரங்கள், காலி இடங்கள் பற்றிய தகவல்களை மருத்துவ கல்வி ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம். அந்த வகையில் உருவாகும் காலி இடங்கள் மற்றும் இடம் கிடைத்தவர்கள் வேறு காரணத்திற்காக மாறி செல்ல வசதியாக அந்த இடத்தை நிராகரித்து விட்டு செல்லவும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அதனை தேவையில்லை என்றால் விலகி செல்ல வருகிற 20-ந் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் 2-வது கட்ட அகில இந்திய கலந்தாய்வு முடிந்து இறுதி முடிவு நாளை வெளியாக உள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் மூலமும் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது.

    இந்த இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதே போல் பிற மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. அதன் முழு விவரம் இன்று மாலை தெரிந்துவிடும்.

    • அ.தி.மு.க., பொன்விழா மாநாடு வரும் 20 ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது
    • மாநாட்டுக்கு செல்லும் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர் , சிறப்பு பாஸ்களையும் வழங்கினார்.

    உடுமலை:

    அ.தி.மு.க., பொன்விழா மாநாடு வரும் 20 ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் உடுமலை எம்எல்ஏ.வுமான ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக., நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும் என கூறினார்.

    மேலும் மாநாட்டுக்கு செல்லும் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர் , சிறப்பு பாஸ்களையும் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., வழங்கினார்.

    இதில் பல்லடம் முன்னாள் எம்எல்ஏ., கரைபுதூர் நடராஜன், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்டக் இணை செயலாளர் சாஸ்திர சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ் ,முருகேசன், பிரனேஸ், பொள்ளாச்சி ஒன்றிய கழக செயலாளர் இளஞ்செழியன், ஆவல் பட்டி நட்ராஜ், சோமசுந்தரம், உடுமலை, பொள்ளாச்சி, குடிமங்கலம், பல்லடம் நகர ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும்.
    • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஆடி அமாவாசையையொட்டி இந்த திருவிழா நடைபெறுவது தொடர்பாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பழனியப்பா தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில், திருவிழாவில் போலீசாரின் மூலம் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் காவிரி ஆற்றில் உரிய தடுப்பு வசதிகள் , மின்சார துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சி மூலம் குடிநீர், சுகாதார வசதிகள் செய்ய வேண்டும், ஐயாறப்பர் கோவில் நிர்வாகம் மூலம் ஆகம விதிகளின்படி விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதில் பேரூராட்சி துணை தலைவர் நாகராஜன், போலீசார், பொதுப்பணித்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் சுதந்திர தினவிழா ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில், சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சுதந்திர தினவிழாவை காண்பதற்காக வரும் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, போக்கு வரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டடார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பாதேவி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 தினங்களுக்கு முன்பு சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த மோதல் உச்சத்தை பெற்றது.
    • கர்நாடக மாநிலத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடக்கிறது. மற்றொரு கூட்டம் மந்திரிகளுடன் நடத்தப்படுகிறது.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில் ஆட்சி அமைத்து 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் கர்நாடக காங்கிரசில் மோதல் நடைபெற்று மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் இடையே பிரச்சினைகள் வெடித்து இருக்கின்றன.

    அதாவது அமைச்சர்கள் தங்களிடம் எதுவும் ஆலோசிக்காமல் சுயமாக முடிவு எடுப்பதாகவும், சில மந்திரிகளை அணுகவே முடிய வில்லை என்றும் மூத்த எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த மோதல் உச்சத்தை பெற்றது.

    ஊழல் குற்றச்சாட்டு உட்கட்சி பூசல் ஆகியவற்றின் காரணமாக காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

    ஆகஸ்ட் 2-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், ராகுல்காந்தி தலைமையில் என 2 கூட்டம் நடக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடக்கிறது. மற்றொரு கூட்டம் மந்திரிகளுடன் நடத்தப்படுகிறது.

    அரசாங்கத்துக்கும், கட்சிக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கவும், அதிருப்தியை சமாளிப்பதற்காகவும் ஒரு குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏ.க்களை அணுகுவதால் மாற்றம் வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.

    ×