search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவமழை"

    • நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது.
    • பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை (700மி.மி), அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை (300 மி.மி), ஏப்ரல்-மே மாதங்களில் கோடை மழை (250 மி.மி) வீதம் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    மேலும் அக்னி நட்சத்தி ரம் தொடங்குவதற்கு முன்பாகவே நீலகிரி பகுதியில் வழக்கத்தைவிட அதிகமாக, சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதற்கிடையே ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் ஆறாக வழிந்தோடியது.

    மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. நீலகிரியில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் அங்கு நீண்ட நாட்களாக நீடித்து வந்த அனல் வெப்பம் தணிந்து தற்போது மீண்டும் குளுகுளு காலநிலை திரும்பி உள்ளது. இதனால் அங்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் அவர்கள் கொட்டும் மழைக்கு மத்தி யில் பூங்காவில் குழந்தை களுடன் சேர்ந்து விளையாடி யதை காண முடிந்தது. ஊட்டி பகுதியில் நேற்று பகல் நேரத்தில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், காற்றில் 73 சதவீதம் ஈரப்பதமும் நிலவியது.

    கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநில ங்கள் இணையும் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கோடை மழையால் அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் வெயில்-புழுக்க த்தால் தவித்துவந்த மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆகியோரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட நடப்பாண்டில் 6 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்திருந்தது. இதனால் தற்போதே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு மேல் கோடை வெயில் அதிக அளவில் இருக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தை அடையும், அப்போது மதிய நேரங்களில் அனல் பறக்கும், இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து வீட்டில் முடங்குவார்கள்.

    ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் 96.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொது மக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்பங்கூழ், மோர், தர்பூசனி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி பொது மக்கள் வெப்பத்தை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    சேலம் சத்திரம் உள்பட பல பகுதிகளில் திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசனி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கத்தை விட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பனிப்பொழிவு இருப்பதால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும், மழை வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் எச்சரிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற வட மாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி போன்ற தென்மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

    பருவமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து காக்கவும், அடுத்த 2 மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்களுக்கு, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவ மழைகாலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    அதன்படி மாவட்ட அளவில் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அத்தகைய கட்டமைப்பை தயாராக வைத்திருக்க வேண்டும். அதனுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால், ஆஸ்பத்திரி வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

    குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிப்பதும் முக்கியம். புயல் மற்றும் கன மழைக்கு முன்பாகவே விரைவு சிகிச்சை குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.

    அதேபோன்று கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு சுகாதார குழுக்களையும் அமைக்க வேண்டும்.

    மருத்துவக் கட் டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல் அவசியம். கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற் கொள்ள வேண்டும்.

    பருவ மழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

    காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பலாம். பருவகால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
    • வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:-

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கழிவுநீர், செப்டிங் டேங்க் தூய்மை படுத்துபவர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, வார்டு கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-

    தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதனை சிலர் முறையாக பயன்படுத்துவதில்லை. எனவே அவர்கள் உபகரணங்களை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். பாதாள சாக்கடையை ரோபோ மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஜே.சி.பி. எந்திரங்கள், ஆட்டோ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்ட எந்த பிரச்சினை என்றாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் 7598016621 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளான மழைநீர் வடிகால் வசதி, சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

    குறிப்பாக, 12.90 சதுர கீலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 20,498 மக்கள் தொகை கொண்டதாகும். பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஆத்தூர் - நகரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் 1.552 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு தற்போது நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 76 லிட்டர் தினசதி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சாலை வசதிகளைப் பொறுத்தவரை பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2022-2023 நிதியாண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வி.ஐ.பி நகர் பகுதியில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிலும், பாலாண்டியூர் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.96 கோடி மதிப்பீட்டிலும், நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.98 கோடி மதிப்பீட்டிலும், முத்து ஹேவே நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் என ஆக மொத்தம் 15.402 கிலோ மீட்டர் நீளத்தில், ரூபாய் 11.34 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் மழைநீர்வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தெருவிளக்கு, குப்பைகள் சேகரித்து தரம் பிரித்தல் என பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்ட துடன், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பணிகளை செய்து முடித்திட வேண்டுமென அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியளார் துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகா விஷ்ணு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம், பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

    அம்பத்தூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7- க்குட்பட்ட 15 வார்டுகளில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பி.கே. மூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் விஜிலா மற்றும் மின்சாரத்துறை, வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மண்டலத்துக்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர். மேலும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தேங்கும் பட்சத்தில் அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதிக திறன் கொண்ட மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    அதேபோல் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தங்குவதற்கான திருமண மண்டபங்கள், பள்ளி வகுப்பறைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல குழு தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், உஷா நாகராஜ், சாந்தகுமாரி, செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார்,குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக பஸ் நிலையம் அமைப்பதற்கு விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க கமிட்டி அமைக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, துணை தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உறுதிமொழி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் மேலாளர் சீதாலட்சுமி, சுகாதாரத்துறை ஆய்வாளர் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்.

    அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்:-

    திருத்துறைப்பூண்டி நகரில் நடைபெற்று வரும் 128 சாலைகள் பணிகள், 110 சாலை சேவை பணிகள் முடிந்துள்ளது. மேலும், ரூ.7 கோடியில் பஸ் நிலையம் புதிதாக அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்றார்.

    • கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.
    • இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக மக்காச்சோளம் இருந்தது. தீவன உற்பத்திக்கு மக்காச்சோளம் தேவை அதிகமாக இருப்பதால் நல்ல விலையும் கிடைத்து வந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதையொட்டி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயிரின் வளர்ச்சி தருணத்தில் பருவ மழை பெய்யும். எனவே அந்த சீசனில் 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும். இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது. மழையும் பெய்யவில்லை. இதனால் நான்காம் மண்டல ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் நடவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. சிலர் மட்டும் உலர் தீவன தேவைக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.

    இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மானாவாரியாக மக்காச்சோளம் நடவு செய்ய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் 90 - 110 நாட்கள் வயதுடையது. பயிரின் வளர்ச்சித்தருணம் மற்றும் கதிர் பிடிக்கும் போது மழை பெய்தால் இறவை பாசனம் போல மானாவாரியிலும், விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் மழை பெய்யாவிட்டால் பயிரின் வளர்ச்சி பாதித்து கதிர்கள் சரியாக பிடிக்காது. விளைச்சலும் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 10 மூட்டையாக குறைந்து விடும்.இருப்பினும் மக்காச்சோள பயிர்களை கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்தலாம். வறட்சியால் தீவனத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகிறோம் என்றனர்.  

    • அதிகாரி விளக்கம்
    • வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:- குமரி மாவட்டமானது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டையும் ஒருங்கே கிடைக்கப்பெறும் மாவட்டமாகும். தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்தல், மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்த்தல், கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரிநீர் வடிந்த பின் நடவு, விதைப்பணிகளை மேற்கொள்ளல், வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்த்தல், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்தல், மழைநீர் வடிந்தபின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே குமரி மாவட்ட வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளுமாறும், மேலும் பாதிப்பு ஏற்பட்டால் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்
    • பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழைக்காலங்களில் விபத்தை தவிர்க்கும் பொருட்டு வீடுகளில் இன்வெர்ட்டர் பயன் படுத்தும்போது நுகர்வோர் கள் அதற்கென நியூட்ரல் வயரினை தனியாக பயன்படுத்த வேண்டும். நில இணைப்புக்கானது குறைந்தபட்சம் 3 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத் தப்படும் கிரைண்டர், குளிர் சாதனப்பெட்டி, அயர்ன் பாக்ஸ், துணி துவைக்கும் எந்திரம் போன்ற சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் பிளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவற்றை பயன்படுத்தும்போது காலணிகள் அணிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

    விவசாய மின் இணைப்பு, வீடுகள் மற்றும் ஓ.எச்.டி. மின் இணைப்புகளில் உள்ள மின் மோட்டர்களில் பணிபுரியும் போது கவனமுடன் பாதுகாப்பாக பணி புரியுமாறும், அருகில் உள்ள வயரிங் மற்றும் சர்வீஸ் வயர்கள் நல்ல நிலையில் உள்ளதையும் சர்வீஸ் பைப்பில் பி.வி.சி. குழாய் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்டிட வேலை செய்யும்போது அருகில் போதிய இடைவெளி இன்றி செல்லும் மின்கம்பிகளை மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து மாற்றி அமைத்த பின் பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும். குளிர் சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற சாதனங்களை சுத்தம் செய்யும்போது சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் மின் சாதனங்களில் கவனமுட னும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி யும் மின் விபத்துகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்தார்.

    மதுரை

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் 14,314 கண்மாய்கள் உள்ள நிலையில், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் நிரம்பிஉள்ளது. குறிப்பாக 3,422 கண்மாய்களில் அதாவது 24 சதவீதம் கண்மாய்கள் முற்றிலுமாக வறண்டு உள்ளது.

    தென்மேற்கு பருவமழை குறைவு என்று காரணம் சொல்லப்பட்டாலும் கண்மாய்களில் தூர்வராதே பிரதான காரணம் என்றும், இந்த வடகிழக்கு பருவ மழையில் காலத்தில் காண்மாய் நிரம்புவதற்கு குடிமராமத்து திட்டம் செய்தால் கண்மாய்கள் நிரம்ப வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

    வடகிழக்கு பருவ மழையில் சென்னை மிகவும் அதிகமாக பாதிக்கப்படும். ஏனென்றால் 2 மீட்டர் உயரம் தான் புவியியல் அடிப்படையில் கடல் மட்டத்திலிருந்து இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் தெருக்கள்உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுடன் ரூ. 2,850 கோடி மதிப்பில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டன.ஏறத்தாழ 3,600 மழைநீர் தேங்கும் இடங்கள் சென்னையில் இருந்தது எடப்பாடியார் எடுத்த நடவடிக்கையால் 40 இடங்களாக குறைக்கப் பட்டது.

    தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நட வடிக்கை எதுவும் முழுமை பெறவில்லை மழை நீர் வடிகால் பணிகள் 50 சதவீதம் தான் முடிந்து இருக்கிறது 100 சதவீதம் முடியவில்லை.

    இன்னும் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் கூடிய சூழ்நிலை இன்னும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முடிய வில்லை. தூர்வா ரப்பணிகள் மேற்கொள் ளப்படவில்லை. தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதி களை எத்தனை என்ப தையும், அதேபோல கண்கா ணிப்பு அலுவலர்கள் பட்டியலை முதலமைச்சர் முழுமையாக அறிவிக்க வில்லை. கடந்த தென்மேற்கு பருவமழையில் கண்மாய்கள் வறண்டு போனது அதேபோல் இந்த வடகிழக்கு பருவமழையில் குடி மராமத்து செய்யாததால் பருவமழையில் நீரை தேக்கமுடியாத நிலையில் உள்ளது.

    ஆகவே முதல்-அமைச்சர் எதிர்க்கட்சி குரலாக நினைக்காமல் மக்களின் குரலாக நினைத்து இந்த வடகிழக்கு பருவ மழையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவ மழையின் போது பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகை யில் மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்த ஆய் வுக்கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் பொறியாளர், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதில், கனமழை பெய்த வுடன் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் மழைநீர் தேங்காதவாறு கால்வாய் தூர்வார வேண்டும். நக ராட்சி பகுதியில் உள்ள 15 குளங்கள் மழை நீர் தேக்கி வைத்திடும் வகையில் கால் வாயை சீரமைக்க வேண்டும். தொற்று நோய் பரவாத வகையில் சுகாதார பணி களை மேற்கொள்ள வேண் டும் என ஆலோசனை வழங்கப்பட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ×