search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்விழா மாநாடு"

    • அ.தி.மு.க., பொன்விழா மாநாடு வரும் 20 ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது
    • மாநாட்டுக்கு செல்லும் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர் , சிறப்பு பாஸ்களையும் வழங்கினார்.

    உடுமலை:

    அ.தி.மு.க., பொன்விழா மாநாடு வரும் 20 ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் உடுமலை எம்எல்ஏ.வுமான ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக., நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும் என கூறினார்.

    மேலும் மாநாட்டுக்கு செல்லும் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர் , சிறப்பு பாஸ்களையும் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., வழங்கினார்.

    இதில் பல்லடம் முன்னாள் எம்எல்ஏ., கரைபுதூர் நடராஜன், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்டக் இணை செயலாளர் சாஸ்திர சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ் ,முருகேசன், பிரனேஸ், பொள்ளாச்சி ஒன்றிய கழக செயலாளர் இளஞ்செழியன், ஆவல் பட்டி நட்ராஜ், சோமசுந்தரம், உடுமலை, பொள்ளாச்சி, குடிமங்கலம், பல்லடம் நகர ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • குளச்சல் நகர அ.தி.மு.க. முடிவு
    • மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. குளச்சல் நகர்மன்ற கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் குமாரதாஸ் வரவேற்று பேசினார். துணை செயலாளர் செர்பா தீர்மானங்கள் வாசித்தார்.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர முன்னாள் செயலாளர்கள் தாசீம், கில்லேரியன் மற்றும் நிர்வாகிகள் நாஞ்சில் அனீபா, சிசிலி, ஜெகன், ரமேஷ்பாபு, வெள்ளிச்சந்தை சரவணன், பெலிக்ஸ்ராஜன், ஆனக்குழி சதீஷ், ஆன்றனி, சுபல், தேவிசக்தி, சகாயராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற ஆகஸ்டு 20-ந்தேதி மதுரை யில் நடக்கும் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு குளச்சலில் இருந்து 5 வேன்களில் 100-க்கும் மேற்பட்டோர் செல்வது, மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ராஜ்ய சபாவில் வலியுறுத்தி பேசிய தம்பித்துரை எம்.பி.க்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது. நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது நன்றி கூறினார்.

    ×