search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம்
    X

    பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம்

    • திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • பெரும்பாலானோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று நடைபெற்றது.

    திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு பகுதி செயலா ளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலா ளர் நிலையூர் முருகன் முன் னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் செல் லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை பொருத்த வரை ஏற்கனவே பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் பணி செய்து கொண்டிருக்கிறீர் கள். விரைவில் நாடாளு மன்ற தேர்தல் வரவுள்ளது. எனவே தற்போது தேர்தல் பணிகளை செய்ய தொடங் குங்கள். வீடு வீடாக சென்று அ.தி.மு.க.வின் திட்டங்களை யும் தி.மு.க. தடுத்து நிறுத்திய அ.தி.மு.க.வின் தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறுங்கள். நகை கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, செய்வதாக அறிவித்து தி.மு.க. மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி கடந்த முறை ஆட்சிக்கு வந்துள்ளது.

    அது குறித்து நீங்கள் வாக்காளர்களிடம் வீடு, வீடாக சென்று தெரிவிக்க வேண்டும். தற்போது நாடா ளுமன்றத் தேர்தலுக்காக ஒரு சிலருக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்கிவிட்டு பெரும்பாலா னோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட வில்லை.

    அது குறித்தும் மக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிக்க வேண்டும். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கட்சி தலைமை நிறுத்தும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதை நமது இலக் காக கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார் வட்டச் செய லாளர்கள் பொன்.முருகன், நாகரத்தினம், பாலா, வாசு தக்கார் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×