என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

அப்பர் கயிலாய காட்சி திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்

- ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும்.
- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஆடி அமாவாசையையொட்டி இந்த திருவிழா நடைபெறுவது தொடர்பாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பழனியப்பா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், திருவிழாவில் போலீசாரின் மூலம் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் காவிரி ஆற்றில் உரிய தடுப்பு வசதிகள் , மின்சார துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சி மூலம் குடிநீர், சுகாதார வசதிகள் செய்ய வேண்டும், ஐயாறப்பர் கோவில் நிர்வாகம் மூலம் ஆகம விதிகளின்படி விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் பேரூராட்சி துணை தலைவர் நாகராஜன், போலீசார், பொதுப்பணித்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
