search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்பாடுகள்"

    • சங்கிலித்துறை கடற்கரையில் ரசாயனகலவை மூலம் பாசிகள் அகற்றம்
    • நாளை ஆடி அமாவாசை விழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை நாளில் லட்சக்க ணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு நாளை (16-ந் தேதி) ஆடி அமாவாசை விழா கொண்டாடப்படு கிறது. ஆடி அமாவாசையை யொட்டி குமரி மாவட்டத் துக்கு நாளை உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள் என்பதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. தர்ப்பணம் கொடுப்பவர்கள் அமரும் இடம், நீராடும் படித்துறை போன்றவை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் உள்ள படித்துறையில் படிந்திருந்த பாசிகள், ரசாயண கலவை மூலம் அகற்றப்பட்டது.

    நாளை பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு தரிசனம் செய்வார்கள். எனவே அங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. நாளை அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடக்கி றது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழை வாசல் திறக்கப்பட்டு பக்தர் கள் தரிசனத்துக்கு அனும திக்கப் படுகிறார்கள். இதற்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பி னர்கள், நாகர் கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண் காணிப்பாளரும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கன்னியாகுமரி வரும் பக்தர்கள் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குக நாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்த புரத்தில் உள்ள சர்க்கரதீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    பக்தர்கள் அதிக அளவில் கன்னியாகுமரி வருவார்கள் என்பதால், அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்க ளில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் மற்றும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர் தலைமை யில் பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.

    • ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும்.
    • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலாய காட்சி திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஆடி அமாவாசையையொட்டி இந்த திருவிழா நடைபெறுவது தொடர்பாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பழனியப்பா தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில், திருவிழாவில் போலீசாரின் மூலம் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் காவிரி ஆற்றில் உரிய தடுப்பு வசதிகள் , மின்சார துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சி மூலம் குடிநீர், சுகாதார வசதிகள் செய்ய வேண்டும், ஐயாறப்பர் கோவில் நிர்வாகம் மூலம் ஆகம விதிகளின்படி விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதில் பேரூராட்சி துணை தலைவர் நாகராஜன், போலீசார், பொதுப்பணித்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.

    ராஜபாளையம்

    சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜ பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா சத்திரப்பட்டி நடுத்தெருவில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிழக்கு ஒன்றியசெயலாளரும், கூட்டுறவு வங்கி தலை வருமான குறிச்சியார்பட்டி மாரியப்பன் வரவேற்று பேசினார். கிளைக் கழகச்செயலாளரும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான முருகபூபதி, சத்திரப்பட்டி கிளை செயலாளரும், ஒன்றிய அவைத்தலைவருமான முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான மா.பா.க.பாண்டியராஜன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தலைமைக்கழக பேச்சா ளர்கள் சவுண்ட் சரவணன், மதுரை முத்தரசு, சரவெடி சம்சுகனி பேசினர்.

    கூட்டத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் சண்முக கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மேற்குஒன்றிய செயலாளர் மணிகண்டன், மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணபதியாபுரம் கிளை செயலாளரும், ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான சேகர் மற்றும் லட்சுமணன், முத்து கணபதி நன்றி கூறினர். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.

    • ஆம்னி பஸ், லாரிகள் நுழைய அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட வேண்டும்.
    • இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    கீழக்கரையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் கீழக்கரை கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி சார்பில் மனு அளித்தனர்.

    இது குறித்து அந்த நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி அவைத்தலைவர் சீனா தானா (எ) செய்யது அப்துல் காதர் தலைமையில் குழுவினர் கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர்.

    இதையடுத்து கீழக்க ரையில் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த வி. ஏ. ஓ. அலுவலகம் மற்றும் பீசா பேக்கரி பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து கண்காணிப்பதோடு அதன் மூலம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.

    கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஊருக்குள் வரும் கனரக வாகனங்கள், லாரிகள், ஆம்னி பஸ்களை ஊருக்குள் அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.

    திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி செல்லும் தொலைதூர பஸ்கள் கீழக்கரை புதிய பஸ் நிலையம் வரை வந்து செல்லவும் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். விரைவில் கீழக்கரையில் போக்குவரத்து காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

    ஆலோசனை கூட்டத்தில் கீழக்கரை காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி தலைவர் சாகுல்ஹமீது ஆலிம், துணை தலைவர்கள் உமர் களஞ்சியம், செய்யது அபுதாஹிர், பொருளாளர் ஷபீக், சமூக ஆர்வலர் ஜஹாங்கீர் ஆலிம், ஏர்வாடி தீயணைப்பு நிலைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் கூறு கையில், கலெக்டரின் அறிவுரையின்படி, முதற்கட்டமாக நகராட்சி சேர்மன், அதிகாரிகள், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல நேர கட்டுப்பாடு தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் உள்ளே செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது என்றார்.

    • ஜூனியர் பெடரேசன் கோப்பை ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி நடந்தது.
    • போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை

    உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில் ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டிகள் மதுரையில் 3 நாட்கள் நடக்கிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூறியதாவது:-

    6-வது ஜூனியர் பெட ரேஷன் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நாளை (1-ந்தேதி) முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி அளவில் செல்லூர் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கபடி வீரர்கள் சிலை முன்பிருந்து வீரர் -வீராங்கனை களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    இந்த அணி வகுப்பினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். தொடர்ந்து முதல் நாள் கபடி போட்டி நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், கலந்து கொள்கிறார்கள்.

    2-ந்தேதி 2-ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்கள். கடைசி நாளாக 3-ந் தேதி போட்டி களை தளபதி எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள், மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.

    மதுரையில் நடைபெறும் இந்த கபடி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், இந்திய விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய அணி களும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேஷ், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய அணிகளும் மோதுகின்றனர்.

    இந்த போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்ப டுகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஊக்க தொகையாக முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படு கிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணி வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஈரானில் நடைபெறும் உலக கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
    • சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை நிறுவி தமிழர்களின் கட்டிடக்கலையை உலகறிய செய்த சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் "சதய விழா"வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் விழா மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.

    அதன்படி நாளை தொடங்கும் விழா நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பெரிய கோவிலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது மேயர் சண். ராமநாதன் கூறியதாவது :-

    தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட , இந்த ஆண்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் வந்தாலும் அதற்கேற்றவாறு பல்வேறு வசதிகளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 3 -ம் தேதி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.
    • பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இந்தநிலையில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகவிழா நடக்கிறது. இதையொட்டி யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள்முடிவடைந்தது. தற்போது மின் விளக்கு அலங்காரப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இது குறித்து விழா குழுவினர் கூறுகையில், இந்த உலகேஸ்வரசாமி கோவில் பல நூற்றாண்டுகள் பழமையானது .சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு,அப்பர் அடிகளாரால் பாடல் பெற்ற ஸ்தலம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்ட கோவில்கள் என்பதற்கு அடையாளமாக கோவில்களில் பல்வேறு சின்னங்கள், சிலைகள் இன்றும் உள்ளது. இங்கு மூலவராக சிவபெருமான் லிங்க வடிவிலும், இவருக்கு வலப்புறம் உண்ணாமலை அம்மன் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. இந்த கோவிலில் முன்பு தேர் இருந்ததாகவும், தேரோட்டம் சிறப்பாக நடந்ததாகவும், இங்கிருந்த தெப்பக்குளத்தை சுற்றி, 12 தீர்த்த கிணறுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    கரிய காளியம்மன் கோவில் சிலையானது 8 கைகளுடன் வேல், திரிசூலம், போர் கவசம், பாம்புடன் கூடிய உடுக்கை, கத்தி, கிளி, தீச்சட்டி, ஆயுதம், மணி ஆகியவற்றை ஏந்தியபடி, மண்டை ஓடுகளை அணிகலன்களாகக் அணிந்து கொண்டு, ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த உலகேஸ்வரர் கோவிலில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது யாகசாலை பந்தல் அமைக்கும் வேலைகள் முடிவுற்று மின் விளக்கு அலங்கார வேலைகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆன்றோர்கள், சான்றோர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×