search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Preparations"

    • மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.
    • தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

    இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.சில பள்ளிகளில், போதுமான தூய்மைப்பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தான் துவங்கப்பட்டுள்ளன.

    பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள் விநியோகித்து கற்றல், கற்பித்தல் பணிகளை துவங்க வேண்டும். இதற்கு பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய, வட்டார கல்வி அலுவலர்கள், ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தெரி விக்கப்பட்டுள்ளது.

    இது குறித்துகல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டாலும், மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கின்றன. புதிய கல்வியாண்டை துவங்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.

    • நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.
    • பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இந்தநிலையில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகவிழா நடக்கிறது. இதையொட்டி யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள்முடிவடைந்தது. தற்போது மின் விளக்கு அலங்காரப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இது குறித்து விழா குழுவினர் கூறுகையில், இந்த உலகேஸ்வரசாமி கோவில் பல நூற்றாண்டுகள் பழமையானது .சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு,அப்பர் அடிகளாரால் பாடல் பெற்ற ஸ்தலம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்ட கோவில்கள் என்பதற்கு அடையாளமாக கோவில்களில் பல்வேறு சின்னங்கள், சிலைகள் இன்றும் உள்ளது. இங்கு மூலவராக சிவபெருமான் லிங்க வடிவிலும், இவருக்கு வலப்புறம் உண்ணாமலை அம்மன் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. இந்த கோவிலில் முன்பு தேர் இருந்ததாகவும், தேரோட்டம் சிறப்பாக நடந்ததாகவும், இங்கிருந்த தெப்பக்குளத்தை சுற்றி, 12 தீர்த்த கிணறுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    கரிய காளியம்மன் கோவில் சிலையானது 8 கைகளுடன் வேல், திரிசூலம், போர் கவசம், பாம்புடன் கூடிய உடுக்கை, கத்தி, கிளி, தீச்சட்டி, ஆயுதம், மணி ஆகியவற்றை ஏந்தியபடி, மண்டை ஓடுகளை அணிகலன்களாகக் அணிந்து கொண்டு, ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த உலகேஸ்வரர் கோவிலில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது யாகசாலை பந்தல் அமைக்கும் வேலைகள் முடிவுற்று மின் விளக்கு அலங்கார வேலைகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆன்றோர்கள், சான்றோர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அவசியம்.
    • நுழைவு படிவம் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 6 குறு மைய அளவில் குழு போட்டிகள், தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக், நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டில் திறமையான மாணவர்கள் பங்கேற்கலாம்.மேலும் 14 வயது, 17 வயது, 19 வயது என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பிறப்பு சான்றிதழ், ஆதார் எண், 19 வயது எனில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மிக அவசியம்.நுழைவு படிவம் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மாணவர் ஏதேனும் ஒரு வயது பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும்.

    11 வயதுக்குட்பட்ட தொடக்க பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.திருப்பூர் தெற்கில் கோவில்வழியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியில், திருப்பூர் வடக்கில் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசியில் எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்தில் முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை)நடக்கிறது.
    • நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, மானூர், அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய 8 தாலுகாக்களில் நடைபெறுகிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை)நடக்கிறது.

    நெல்லை மாவட் டத்தில் நெல்லை, பாளை, மானூர், அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய 8 தாலுகாக்களில் 191 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதனை 61, 086 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் தலா ஒரு துணைகலெக்டர் வீதம் 8 துணை கலெக்டர்களும், தேர்வெழுதுவோரை கண்காணிக்க 230 ஆய்வு அலுவலர்களும், 11 பறக்கும்படை அலுவலர்களும் தேர்வு பணிகள் மேற்கொள்ள தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 59 சுற்றுக்குழு அலுவலர்களும், தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்திடும் வகையில் 238 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், வீ.கே.புதூர், செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகாக்களில் 237 மையங்களில் தேர்வுகள் நாளை நடக்கிறது.

    இந்த தேர்வில் 59,700 பேர் கலந்து கொண்டு எழுத உள்ளனர். 8 துணை கலெக்டர்கள், 237 ஆய்வு அலுவலர்கள், 8 பறக்கும் படையினர், 44 துணை தாசில்தார்கள், 237 வீடியோ கிராபர்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்.

    மாவட்டங்களில் நடை–பெறும் தேர்வுக்காக அனைத்து மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம் தேர்வர்களுக்கு பஸ் வசதியும், தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர்கள் விஷ்ணு, ஆகாஷ் ஆகியோர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    ×