search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ulageshwarar Temple"

    • மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.

    நேற்று முதல் 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது. மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாள் மண்டலபூஜை நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகவிழா இன்று நடைபெற்றது. அதன்படி நேற்று யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 4ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

    இதற்கிடையே நேற்று அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வருகை தந்தார் .அவருக்கு கோவில் விழா குழுவினர் சார்பில் பரிவட்டம் கட்டி பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று 8ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 5.15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி, பெருசலங்கை ஆட்டம், பவளக்கொடி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.
    • பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இந்தநிலையில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகவிழா நடக்கிறது. இதையொட்டி யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள்முடிவடைந்தது. தற்போது மின் விளக்கு அலங்காரப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இது குறித்து விழா குழுவினர் கூறுகையில், இந்த உலகேஸ்வரசாமி கோவில் பல நூற்றாண்டுகள் பழமையானது .சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு,அப்பர் அடிகளாரால் பாடல் பெற்ற ஸ்தலம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்ட கோவில்கள் என்பதற்கு அடையாளமாக கோவில்களில் பல்வேறு சின்னங்கள், சிலைகள் இன்றும் உள்ளது. இங்கு மூலவராக சிவபெருமான் லிங்க வடிவிலும், இவருக்கு வலப்புறம் உண்ணாமலை அம்மன் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. இந்த கோவிலில் முன்பு தேர் இருந்ததாகவும், தேரோட்டம் சிறப்பாக நடந்ததாகவும், இங்கிருந்த தெப்பக்குளத்தை சுற்றி, 12 தீர்த்த கிணறுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    கரிய காளியம்மன் கோவில் சிலையானது 8 கைகளுடன் வேல், திரிசூலம், போர் கவசம், பாம்புடன் கூடிய உடுக்கை, கத்தி, கிளி, தீச்சட்டி, ஆயுதம், மணி ஆகியவற்றை ஏந்தியபடி, மண்டை ஓடுகளை அணிகலன்களாகக் அணிந்து கொண்டு, ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த உலகேஸ்வரர் கோவிலில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது யாகசாலை பந்தல் அமைக்கும் வேலைகள் முடிவுற்று மின் விளக்கு அலங்கார வேலைகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆன்றோர்கள், சான்றோர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மற்றொரு தரப்பினர் குறிப்பிட்ட தேதியில் கும்பாபிசேகம் நடைபெறும் வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த நிலையில் வரும் 8-9-2022 அன்று உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில், கரியகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கும் கும்பாபிஷேக விழா நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு தரப்பினர், ஆகம விதிகளுக்கு மாறாக அம்மன் சிலை உள்ளதாகவும், அதனை சரியான முறையில் வைத்து, கோவிலின் பழமையான முறைகள் மாறாமல் கும்பாபிசேகவிழா நடத்த வேண்டுமென கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.இதற்கு மற்றொரு தரப்பினர் குறிப்பிட்ட தேதியில் கும்பாபிசேகம் நடைபெறும் வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ×