என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
- அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- மற்றொரு தரப்பினர் குறிப்பிட்ட தேதியில் கும்பாபிசேகம் நடைபெறும் வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த நிலையில் வரும் 8-9-2022 அன்று உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில், கரியகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கும் கும்பாபிஷேக விழா நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு தரப்பினர், ஆகம விதிகளுக்கு மாறாக அம்மன் சிலை உள்ளதாகவும், அதனை சரியான முறையில் வைத்து, கோவிலின் பழமையான முறைகள் மாறாமல் கும்பாபிசேகவிழா நடத்த வேண்டுமென கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.இதற்கு மற்றொரு தரப்பினர் குறிப்பிட்ட தேதியில் கும்பாபிசேகம் நடைபெறும் வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்