search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new bus station"

    • பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை.
    • புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய காலத்தில் வருசநாடு பகுதிக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான இடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வருசநாட்டில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. அதேபோல வருசநாடு கிராமத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இடங்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் சின்னமனூரைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தாமாக முன்வந்து வருசநாடு கிராமத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக ஆளுநர் பெயருக்கு பத்திரம் பதிவு செய்து வழங்கினார். அதற்கான ஆவணங்களை வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவிடம் வழங்கினார். பஸ் நிலையம் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

    • சுமார் 88 ஏக்கரில் ரூ.394 கோடி செலவில் நவீன வசதிகளுடன் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
    • தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 88 ஏக்கரில் ரூ.394 கோடி செலவில் நவீன வசதிகளுடன் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே சமீபத்தில் பெய்த மழையின்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தின் முன்பகுதியில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வெளியேற சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்கி பார்க்கும் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. அரசு விரைவு பஸ்கள், மாநகர பஸ்கள் என சுமார் 100 பஸ்கள் அனைத்தும் வெளியில் இருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் புதிய நிலையத்திற்குள் வந்தது. பின்னர் அனைத்து பஸ்களும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் கழித்து புறப்பட்டு சென்றன. பஸ்கள் நிறுத்தும் இடங்களில் அந்தந்த ஊர்களின் பெயர் பலகைகள் இருந்தன. பஸ்கள் உள்ளே வந்து பின்னர் வெளியே செல்லும் போது ஏற்படும் இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல், தேவையான கூடுதல் வசதிகள் குறித்து டிரைவர், கண்டக்டர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இந்த வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி நாளையும் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. அங்கு மேலும் செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் போக்குவரத்தில் உள்ள பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய பஸ்களை இயக்கி ஒத்திகை நடைபெற்றது. நாளையும் இது நடைபெறும் என்றார்.

    • வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
    • பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    கடலூர்:

    அ.தி.மு.க.ஆட்சியில் கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சீர்செய்திட வலியுறுத்தியும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம். சி.சம்பத் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், அழகானந்தம், ஒன்றிய குழு தலைவர் தெய்வ.பக்கிரி, பகுதி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கந்தன், வினோத் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், மீனவர் அணி தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தஷ்ணா, வினோத், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், ஒன்றிய செயலா ளர்கள் தமிழ்ச்செல்வன், நாகபூஷணம், சிவா, நகர செயலாளர் தாடி முருகன், பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ச்சுனன், இலக்கிய அணி ஏழுமலை, முத்து, மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர்கள் கெமிக்கல் மாதவன், வெங்கட்ராமன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
    • ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதி உள்ள கால்வாய் பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் கால்வாய் பணியை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பகுதி தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியை தாண்டி இப்போது செங்கல்பட்டு பகுதியில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னைக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மின்சார ரெயில் சேவை உள்ளதால் செங்கல்பட்டு பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    தற்போது செங்கல்பட்டு பஸ்நிலையம் ஜி.எஸ்.டி.சாலையை ஒட்டி ரெயில் நிலையம் அருகே உள்ளது. இங்கிருந்து மதுராந்தகம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தாம்பரம், அச்சரப்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் போதிய இடவசதி இல்லாததாலும், வாகன பெருக்கம் காரணமாகவும் செங்கல்பட்டு பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெண்பாக்கம் பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு சுமார் ரூ.40 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய பஸ்நிலையம் அமைய இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரி உள்ளது. பஸ்நிலைய பணிகளை ஒரு ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 பஸ்களை நிறுத்தும் வகையிலும், சுமார் 67 நான்குசக்கர வாகனங்கள், 782 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் வகையிலும் பார்க்கிங் பகுதி அமைய இருக்கிறது. மேலும் 30 கடைகள், ஓட்டல்கள், பெரியவளாகம், சுற்றுலா தகவல் மையம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வெடுக்கும் அறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, செங்கல்பட்டு நகரின் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. நிலம் கையகப்படுத்தும் செலவு திட்டத்திற்கு அதிகமாக இருப்பதால், சாலையை விரிவாக்கம் செய்ய முடியாது. எனவே, புதிய கலெக்டர் அலுவலகம் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் நகருக்குள் நெரிசல் குறையும் என்றார்.

    செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிலையம் மாற்றலாகி வெண்பாக்கம் பகுதிக்கு பஸ்நிலையம் மாற்றபடும். பொது பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது.

    இதற்காக ரெயில்வே குடியிருப்பில் உள்ள ஒரு பகுதியும் மற்றும் அருகில் உள்ள சில பகுதிகளை அப்புறப்படுத்தி நகர பஸ்கள் ரெயில் நிலையத்தில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் படி பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
    • புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பொண்ணுபாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசியதாவது:-

    மாணவர்கள் பஸ் படிக்கட்டில் செய்வதால் அதிக விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனை தடுக்க பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

    படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தட்டி கேட்கும் போது, டிரைவர், கண்டக்டர்களுடன் மாணவர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். அது குறித்து உடனடியாக டிரைவர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும்.

    மாணவர்கள் பஸ்சில் அதிகம் ஏறும் இடங்களான வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பாகாயம், தொரப்பாடி, ஒடுகத்தூர் உள்ளிட்ட இடங்களில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளிகள், பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக சேரும்போது செல்போன் பறிப்பு, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கிறது.

    அதனை தடுக்க போலீசார் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் அடிக்கடி தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பஸ் உரிமையாளர்கள் பேசுகையில்:-

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    அதில் ஒரு கேமரா கூட தற்போது வேலை செய்யவில்லை. பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை தடுக்க போலீசார் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும்.

    ஆந்திரா மற்றும் சித்தூரில் இருந்து வரும் பஸ்கள் கிரீன் சர்கிள் வழியாக வந்து முத்து மண்டபம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக புதிய பஸ் நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.

    ஆனால் அந்த பஸ்கள் செல்லியம்மன் கோவில் வழியாக எதிர் திசையில் வந்து பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது என குற்றம் சாட்டினர்.

    இதற்கு பதில் அளித்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.

    • புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் 13 ஏக்கரில் ரூ 20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.

    தொடர்ந்து அவர் கூறியதா வது: நாமக்கல் புதிய பஸ் நிலையம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பஸ் நிலைய பணிகள் முடிய காலம் உள்ள நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சண்முகம் உடனிருந்தனர்.

    • நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
    • எதிர்காலத்தில் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியதில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மனித உரிமை கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் புதுவை கவர்னர், முதல்-அமைச்சர், மாவட்ட கலெ க்டர், தலைமை செயலாளர் ஆகியோரை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி வேகமாக வளர்ந்துவரும் ஒரு நகரம், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் வேகமான வளர்ச்சியை கணக்கிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தற்போதைய பஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் உருவாகும்,

    குறிப்பாக குடும்பத்துடன் பயணம் செய்யும் பொது மக்கள் மேலும் அலைச்சலுக்கும், தேவையற்ற செல வினங்களுக்கு உள்ளா வார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு தற்போதைய பஸ் நிலையத்தின் பின்புறமுள்ள அரசு பணிமனை வளா கத்தை ஒன்றிணைத்தால் கூடுதல் இடவசதி கிடைக்கும், வாகன போக்கு வரத்து நெரிசல் முற்றிலும் குறையும், எதிர்காலத்தில் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியதில்லை.எனவே பஸ் நிலையத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடைகளை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர்
    • கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர்.

    தற்போது பயணிகளின் வசிக்காக பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ்

    ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

    பஸ் நிலையம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கோவில்வழியில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பூமி பூைஜ செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3, வார்டு-60 கோவில் வழியில் அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு தளங்களில் 42 பேருந்து நிறுத்தம், 35 கடைகள், 550 இருசக்கர வாகன நிறுத்துமிடம், 1 உணவகம், 1 தாய்மார்கள் பாலூட்டும் அறை, 3 மின்தூக்கிகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, காவல் துறை மற்றும் அலுவலர்களுக்கான அறை, கண்காணிப்பு அறை, மற்றும் தகவல் மையம் போன்ற வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-4, வார்டு-43 நடராஜ் தியேட்டர்அருகில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழைய உயர்மட்டபாலம் அருகே புதிய பாலம் அமைத்து அகலப்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த உயர்மட்ட பாலம் 105 மீட்டர் நீளமும், 9.50 மீட்டர் அகலத்தில் அமைய பெற உள்ளது. மேலும் 20 தெரு விளக்குகளுடன் நொய்யல் ஆற்றின் கரையோரம் இரு புறம் அமையும் புதிய சாலைகளுக்கு இணைப்பு பாலமாக அமைய உள்ளது. இந்த புதிய பாலத்தின் மூலம் 80,000 முதல் 90,000 பொதுமக்கள் பயன்பெறுவர்.

    இந்நிகழ்ச்சிகளில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன் , கோவிந்தசாமி , கவுன்சி லர்கள் கோமதி , சாந்தாமணி , தலைமை பொறியாளர் வெங்கடேஷ், உதவி ஆணையாளர் வினோத், மாநகர துணை பொறியாளர்கள் வாசுகுமார், செல்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.
    • அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இது திறக்கப்படுகிறது.

    இந்த பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.

    முதல் தளத்தில் டிரைவர்கள் கண்டக்டர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் அமர்வதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் வடிவமைப்பு குளறுபடி காரணமாக அதை சரி செய்யும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக இந்த துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவ்வப்போது உயர் அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    மழை பெய்தால் இப்போது அங்கு தண்ணீர் தேங்குகிறது. அதை சரிசெய்ய வழிவகை காணுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. அதை சரி செய்யும்படி கூறி உள்ளார். அதனடிப்படையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த புதிய பஸ் நிலையத்தில் 100 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுக்க 1000 பேர்களுக்கு மேல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள் வாரியத் தலைவர்கள் கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் என தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பல பேர் கட்சியினருக்கு கடைகளை வாங்கி கொடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் போட்டி பலமாக உள்ளது.

    ஆனால் எந்த கடைகளும் இன்னும் ஏலம் விடப்படவில்லை. சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதா? அல்லது பொது ஏலத்தில் விடுவதா? என்று முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ஒவ்வொரு கடைக்கும் சிபாரிசு பலமாக உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டதற்கு புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு பெறுவதற்கு கடும் போட்டி நிலவுவது உண்மைதான். இதை சமாளிப்பது பெரிய கஷ்டம். எனவே சி.எம்.டி.ஏ. வழி காட்டி விதிமுறைப்படி விரைவில் இதுபற்றி முடிவெடுப்போம் என்றார்.

    • மேம்பாட்டு பணியினையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பஸ்கள் குறித்தும் கேட்டறிந்து கட்டுமான பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினையும் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணியினையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை யினை பார்வையிட்டு, அம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு நாள் தோறும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு மேற்கொ ள்ளப்பட்டு வரும் சிகிச்சைமுறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறி ந்தார்.

    மேலும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.64.00 கோடி மதிப்பீட்டில் 2,32,602 ச.அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினை பார்வை யிட்டு, கட்டிடத்தினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றை பார்வையிட்டு, பஸ் நிலையத்தில் நடை பாதை மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை அமைத்து பயணாளிகள் எந்தஒரு இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்து தர அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக ஈரோடு மாநகராட்சி சம்பத் நகர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையினை பார்வையிட்டு, கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் மற்றும் பொருட்கள் சுத்தமாக உள்ளதா என்றும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்து, பதிவேடுகளில் உள்ள அளவுகளின் படி அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மூட்டைகள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும், பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகிய வற்றை பார்வையிட்டார். மேலும் இப்பஸ் நிலை யத்தின் மார்க்கமாக இயக்கப்பட உள்ள பஸ்கள் குறி த்தும் கேட்டறிந்து கட்டுமான பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் இளஞ்செழியன், இணை இயக்குநர் (குடும்பநலன்) ராஜசேகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு) சண்முகவடிவு (மாநகராட்சி) உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×