search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம்
    X

    அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம்

    • அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டின் முகூர்த்த கால் மற்றும் பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோ சனை செய்வதற்காக மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெறு கிறது.

    இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன.

    இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்டக் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள் அனைவரும் திர ளாக பங்கேற்று சிறப் பிக்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×