search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலந்தாய்வு கூட்டம்
    X

    கலந்தாய்வு கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதாள சாக்கடை திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • ஜமாஅத் நிர்வாகிகள் பலர் தங்களது கருத்துக்க ளையும், சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சியில் உள்ள பொதுமக்கள் பல ஆண்டுகளாக பாதாள சாக் கடை திட்டத்தினை அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தி.மு.க. கட்சி சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக் குறுதி அளித்தனர்.

    இந்த நிலையில் கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் அனைத்து ஜமாஅத்தார்கள், நகர்மன்ற தலைவர், துணை தலைவர், நகர் மன்ற உறுப் பினர்கள், மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட பாதாள சாக்கடை திட்டம் பற்றிய கருத்து கேட்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் நகராட்சி சார்பில் நகரிலுள்ள 21 வார்டுகள் முழுவதும் வெளியேறும் கழிவு நீரை கடற்கரை வரை கொண்டு சென்று அங்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் செப்டிக் டேங்க் மற்றும் மின் மோட் டார் அறைகள் அமைத்து சுமார் ரூ. 13 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக உள்ளதாகவும், அதற்கு 3 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என்றும், காணொலி மூலம் விளக்கி கூறப்பட்டது.மேலும் கீழக்கரை கடற் கரை பகுதியில் அரசு புறம் போக்கு நிலம் ஏதும் இல்லை என்பதால் செல்வந்தர்கள் மற்றும் சங்கங்கள் ஜமா அத்திற்கு உட்பட்ட இடங்கள் இருப்பின் யாரேனும் தான மாக தர முன்வந்தால் இத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற தகவலுடன் கோரிக்கையும் வைக்கப் பட்டது. ஜமாஅத் நிர்வாகி கள் பலர் தங்களது கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர்.

    மேலும் இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் நகராட்சி பொறி யாளர் அவர்களிடம் விளக் கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

    Next Story
    ×