search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clash"

    • பணத் தகராறில் 2 பேருக்குள் மோதல் ஏற்பட்டது
    • வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய நண்பரான வேலு என்பவர் பிஎம்எஸ் கார் கன்சல்டிங் என்ற நிறுவனத்தை கண்டோன்மென்ட் பகுதியில் நடத்தி வருகிறார்.

    கடந்த மார்ச் மாதம் தியாகராஜன் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வேலு என்பவர் மூலம் ஆதித்தியன் என்பவரிடம் வாங்கியுள்ளார். ஒவ்வொரு மாதமும் 10 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்தி வந்த அவர் கடந்த ஒரு மாதம் மட்டும் வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தியாகராஜன் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர்.
    கரகஸ்:

    வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
     
    இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர். கலவரத்தை தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர்.

    இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். கைதிகள் தாக்கியதில் 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் உருவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MaduraiCentralPrison
    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள்  சட்டைகளை அவிழ்த்து சிறையில் கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கைதிகள் கற்களை வீசினர். சிறை அருகே உள்ள சாலைகளில் கற்களை வீசியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiCentralPrison
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் நோயாளிகள் பயந்து ஓட்டம் பிடித்தனர். #VirudhachalamClash
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அம்புஜவல்லிபேட்டையில், இரண்டு குடும்பத்தினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர்  தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக வந்தனர்.

    அப்போது, இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதனால் பயந்துபோன மற்ற நோயாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் போலீசார் வந்து இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #VirudhachalamClash
    வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. #PakistanF16 #IndianAirForce
    பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது. 

    எப்.16 ரக போர் விமானம் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என குற்றம் சாட்டப்பட்டது. 

    இந்நிலையில்  அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரீன் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தான் வசம் உள்ள எப். 16 ரக விமானங்கள் எத்தனை உள்ளது என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. இதனை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.

    “இரு தரப்பு மோதலின் போது மிக் 21 விமானம், பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை நவ்சேகரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஸ்திரமாக கூறியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று நிலைக்கு திரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanF16 #IndianAirForce
    மண்ணச்சநல்லூரில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக காவல் துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தில் தட்டியங்காமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. விழாவின் நிறைவு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.

    இதனை பார்ப்பதற்காக அதேபகுதி பூணாம்பாளையத்தை சேர்ந்த தனசேகர் (37), சிறுமி இந்துமதி (15) உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். அப்போது ராசாம்பாளையத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இந்த திடீர் தாக்குதலில் தனசேகர் உள்ளிட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து வந்த அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனாலும் போலீசார் புகாரினை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 4 நாட்கள் கடந்த நிலையில் இன்றும் வழக்கு பதிவு செய்யாததால் ஆத்திரமடைந்த பூணாம்பாளைத்தை சேர்ந்த பொதுமக்கள் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், உயர் அதிகாரிகள் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என கூறினர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று மண்ணச்சநல்லூர் போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. #tamilnews
    கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரெயிலில் மோதலில் ஈடுபட்ட சென்னை கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது.

    இதில் எளாவூர், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    அவர்கள் கையில் பட்டாக்கத்தி, மதுபாட்டில், பட்டாசு வைத்திருந்தனர். ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    மாணவர்கள் பட்டாக்கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையம் வந்தபோது அங்கு தயாராக நின்ற போலீசார் ரகளையில் ஈடுபட்ட 8 மாணவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்டவர்கள் அனைவரும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்துகல்லூரி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக்கத்தியை பிளாட்பாரத்தில் உரசியபடி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddiLeague
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு அரங்கேறுகிறது.

    ரோகித் குமார் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணி லீக் சுற்றில் 13 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (பி) முதலிடம் பிடித்ததுடன், முதலாவது தகுதி சுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக்கில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடத்தை பெற்றது. பின்னர் முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்சிடம் தோல்வி அடைந்தாலும், 2-வது தகுதி சுற்றில் உ.பி.யோத்தாவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இவ்விரு அணிகளும் முந்தைய சீசனில் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தாலும் அதில் தோற்று இருந்தன. அதனால் தற்போது முதல் முறையாக கோப்பையை வெல்வதில் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள். சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

    இந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் லீக் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இறுதிப்போட்டி குறித்து குஜராத் கேப்டன் சுனில் குமார் கூறுகையில் ‘இந்த சீசன் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முதல்முறையாக கேப்டனாகி அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுள்ளேன். தொடர் முழுவதும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நாங்கள், கோப்பையை வெல்ல ஆவலாக இருக்கிறோம். பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் நாங்கள் சில தவறுகளை இழைத்து விட்டோம். அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்வோம்’ என்றார்.

    பெங்களூரு புல்ஸ் கேப்டன் ரோகித் குமார் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த அருமையான வாய்ப்பை நாங்கள் நழுவ விடமாட்டோம். இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் எங்களுடைய நோக்கம் கோப்பையை வெல்வது தான். எங்களது ரைடை வலுப்படுத்துவதிலும், டேக்கிள்சை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினோம். இறுதிப்போட்டியிலும் நிச்சயமாக எதிரணிக்கு கடும் சவாலாக விளங்குவோம்’ என்றார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாகும். இதில் கோப்பையை வெல்லும் அணி ரூ.3 கோடியையும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.1.80 கோடியையும் பரிசாக பெறும்.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddiLeague
    சாத்தான்குளம் அருகே முன்விரோத தகராறில் லோடு ஆட்டோ உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தெற்குராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் நாடார். இவரது மகன் சிவக்குமார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார் . இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், முத்துலிங்கம், கஞ்சா கருப்பு என்ற சரவணன் ஆகியோருக்கும் இடையே தசரா விழாவின் போது தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் மனைவியை சக்திவேல் அவதூறாக பேசினாராம். இதை சிவக்குமார் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல், கஞ்சா கருப்பு, முத்துலிங்கம் ஆகிய 3 பேர் சேர்ந்து லோடு ஆட்டோவை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    பதிலுக்கு எதிர்தரப்பினர் சிவக்குமார் மற்றும் கோபால் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் சக்திவேலை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சக்திவேல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியே தட்டார்மடம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜன் விசாரணை நடத்தி சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து முத்துலிங்கத்தை கைது செய்தனர். சக்திவேல் கொடுத்த புகாரில் சிவக்குமார், கோபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஜனாதிபதி டிரம்ப் மோதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #President #DonaldTrump #ChiefJustice #JohnRobert
    வாஷிங்டன்:

    மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி டிரம்ப் சாடினார். படையெடுப்பு என வர்ணித்தார்.

    அத்துடன், அமெரிக்காவின் தென்பகுதியின் வழியாக நுழைகிற அகதிகள் யாரும் அமெரிக்காவினுள் தஞ்சம் கேட்க முடியாது என நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    இதை சட்ட விரோதம் என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன. அத்துடன் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை நீதிபதி ஜோன் டைகர் விசாரித்து, டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.



    இந்த உத்தரவு, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    இந்த உத்தரவால் டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியின் உத்தரவு, அவமானகரமானது என விமர்சித்தார்.

    அதுமட்டுமின்றி, “ இது ஒபாமா நீதிபதி வழங்கிய உத்தரவு. இது இனியொரு முறை நடக்காது. இந்த கோர்ட்டை நெருக்கமான கோர்ட்டு என்று கருதி அத்தனை பேரும் ஓடிச்சென்று வழக்குகள் போட விடக்கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் வெற்றி பெறுவோம்” என கூறினார்.

    இந்த நீதிபதி, ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரை ஜனாதிபதி டிரம்ப், ‘ஒபாமா நீதிபதி’ என முத்திரை குத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.



    இது தொடர்பாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் கருத்தை பிரபல பத்திரிகை நிறுவனம் அறிய விரும்பியது.

    “ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜனாதிபதிகளால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகள், தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதிக்கு எதிராக செயல்படுவதாக டிரம்ப் புகார் கூறுகிறாரே?” என கேள்வி எழுப்பியது.

    அதற்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், “ ஒபாமா நீதிபதிகள் அல்லது டிரம்ப் நீதிபதிகள், புஷ் நீதிபதிகள் அல்லது கிளிண்டன் நீதிபதிகள் என நாங்கள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் பெற்றிருப்பது, அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தனிச்சிறப்பான நீதிபதிகளைத்தான். அவர்கள் தங்கள் முன்னிலையில் ஆஜர் ஆகிறவர்களுக்கு சமநீதி வழங்குவதற்கு தங்களால் முடிந்தவரையில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.” என பதில் அளித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, “சுதந்திரமான நீதித்துறைக்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் இந்த கருத்து, டிரம்புக்கு பதிலடியாக அமைந்தது.

    ஜனாதிபதி டிரம்ப், புளோரிடாவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அவர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் கருத்தை அறிந்து அவருடன் நேருக்கு நேர் மோதுகிற வகையில், அவர் கருத்தை மறுத்து டுவிட்டரில் பதில் வெளியிட்டார்.

    அதில் அவர், “மன்னிக்கவும், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். உண்மையிலேயே நீங்கள் ஒபாமா நீதிபதிகளை கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் பார்வை, தங்கள் பாதுகாப்புக்காக குற்றம்சாட்டுகிற மக்களின் பார்வையில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், “ சட்ட விரோதமாக நுழைகிற அகதிகள் விவகாரம் உள்பட எனது சர்ச்சைக்குரிய, முன்னுரிமை வழக்குகள் பலவற்றில், கோர்ட்டு உத்தரவுகள் தலைகீழாகி விட்டன. அப்படி எத்தனை ஆகி இருக்கின்றன என்பதை எண்ணிப்பாருங்கள். அவை அதிர்ச்சி அளிக்கின்றன” எனவும் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

    அமெரிக்காவில் ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இப்படி நேருக்கு நேர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு இருப்பது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    டிரம்ப் மோதியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்சால் 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #President #DonaldTrump #ChiefJustice #JohnRobert
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. #WomenWorldT20 #India #Australia
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கி தோல்வியையே சந்திக்காமல் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கின்றன. கடைசி ஆட்டத்திலும் வெற்றியை ருசித்து தங்களது பிரிவில் முதல் இடத்தை பிடிக்க இரு அணிகளும் முனைப்பு காட்டும். மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் வலுமிக்கது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சுழற்பந்து வீச்சில் மிரட்டக்கூடியது. இரு அணியிலும் திறமையான வீராங்கனைகள் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 3 முறையும், ஆஸ்திரேலிய அணி 11 தடவையும் வென்று இருக்கின்றன. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘அரைஇறுதியை உறுதி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இன்னும் சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லா நேரமும் ஆக்ரோஷமாக ஆட வேண்டும்’ என்றார்.

    இந்திய துணை கேப்டன் மந்தனா கூறுகையில் ‘இந்த போட்டி தொடரில் எல்லா ஆட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி காண வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணமாகும். அடுத்த ஆட்டத்திலும் எங்களது இந்த மனநிலையில் மாற்றம் இருக்காது. முதல் 2 லீக் ஆட்டங்களில் எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அயர்லாந்துக்கு எதிரான 3-வது லீக்கில் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை’ என்றார். #WomenWorldT20 #India #Australia
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. #WomenWorldT20
    புரோவிடென்ஸ்:

    10 அணிகள் இடையிலான பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜவேரியா கான் 52 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு இருந்த பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அயர்லாந்து அணி தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்து இருக்கிறது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்துடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. அலிசா ஹீலி 53 ரன்னும், ராச்சல் ஹெய்ன்ஸ் 29 ரன்னும் விளாசினர். அடுத்து களம் புகுந்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. எனவே ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 48 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மெகன் ஸ்கட் 3 விக்கெட்டும், சோபி மொயின்ஸ், டெலிசா கிம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்று, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அதே சமயம் 2-வது தோல்வியை சந்தித்த நியூசிலாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது. இந்த போட்டியில் தாமதமாக பந்து வீசிய புகாரில் சிக்கியதால் நியூசிலாந்து அணி வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதமும், கேப்டனுக்கு 20 சதவீதமும் அபராதமாக ஐ.சி.சி. நடுவர் ரிச்சர்ட்சன் விதித்துள்ளார்.

    புரோவிடென்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் ஆயத்தமாக உள்ளனர். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #WomenWorldT20
    ×