என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cancelled"
- ரூ.1.48 கோடி டெண்டர் ரத்து நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
- டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த தனவிமல், உயர் நீதிமன்ற கிளையில் த ாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில் சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டருக்கு நான் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ஆனால் நான் உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரிப்பட்டது. விசாரித்தபோது போலி ஆவணம் சமர்ப்பித்த நெம்மக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு 20 சதவீத கமிஷனை பெற்றுக் கொண்டு டெண்டர் ஒதுக்க முடிவு செய்ததாக தெரியவந்தது. இதனால் திருவரங்குளம் வட்டத்தில் 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்ய உத்தவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் ரூ.1.48 கோடி மதிப்பிலான சாலை பலப்படுத்தும் பணி ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை முடித்து நீதிபதி உத்தவிட்டார்.
- தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், 67 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- மத்திய அரசு தொழில்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
திருப்பூர்,
பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்கள், வேலைக்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், வழக்கமான பாடத்திட்டத்துடன், தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், 67 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டது.பல்திறன் தொழில்நுட்பம் என்ற பிரிவில் விவசாயம், எலக்ட்ரானிக் வயரிங் மற்றும் ஸ்விட்சிங் வேலை, கார்பெண்டர், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் என்ற பிரிவில் கார், மோட்டார் சைக்கிள் என்ஜின் மற்றும் அவற்றை பழுதுபார்க்கும் முறை குறித்து அத்தனை நுட்பங்களும் கற்றுத் தரப்படும். ஆனால், தொழிற்கல்வி பாடங்களை நடப்பாண்டு முதல் நிறுத்தி விடுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.நடப்பாண்டு முதல் 9ம் வகுப்பில் இதற்காக புதிதாக மாணவர்களை சேர்க்க வேண்டாம் எனவும், ஏற்கனவே பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குபிளஸ் 2 வகுப்பு வரை தொடரவும் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-
மத்திய அரசு தொழில்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தொழில் கல்வியானது6 பிரிவுகளின் கீழ் 12 பாடங்களாக செயல்பாட்டில் உள்ளது.எனவே 9,10-ம் வகுப்புகளுக்கு தொழில் பயிற்சி வகுப்புகள் நிறுத்தியதால் எவ்வித பாதிப்பும் இல்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தயாராக கூடுதல் நேரம் கிடைக்கும். இதில் பெறப்படும் சான்றிதழ்களை அவர்கள் சுய தொழில் தொடங்கவும், வங்கிக்கடன் பெறவும் பயன்படுத்தலாம்.எனினும் அதுமட்டுமே போதுமானதாக இல்லை. அதேசமயம் இடை நிற்றல் அதிகரிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கூறியதாவது:-
கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் மற்றும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால், அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
உயர் அந்தஸ்தில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு 6 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதற்கு மேல் வழங்கப்படமாட்டாது. ஒரே சிபாரிசு கடிதத்தில் 3 பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படமாட்டாது. ஒரு வி.ஐ.பி. சிபாரிசு கடிதத்துக்கு ஒரு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
இந்த உத்தரவு கோடைக்காலம் முடியும் வரை அமலில் இருக்கும். அதற்கு பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘13-ந் தேதி ஒரே நாளில் 99 ஆயிரத்து 840 வி.ஐ.பி. பக்தர்களுக்கும், 20-ந் தேதி 1 லட்சத்துக்கும்மேல் வி.ஐ.பி. பக்தர்களுக்கும் சாமி தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார். #Tirupati
இறுதிக்கட்ட பிரசாரம் 6 மணிக்கு முடிந்த நிலையில், தேர்தல் ரத்து என்பது வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் இப்படி அறிவித்தது வேதனை அளிக்கிறது. அரசு அதிகாரிகள் இரவு பகலாக உழைத்த உழைப்பு வீணடிக்கப்பட்டு விட்டது. மக்களை தேர்தல் கமிஷன் ஏமாற்றிவிட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் பணம் கொடுத்த புகார்கள் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 15 நாட்களுக்கு முன்பு பணம் கைப்பற்றப்பட்டதற்கு இப்போது தேர்தலை ரத்து செய்திருப்பது தேவையில்லாத ஒன்று என்று பொதுமக்கள் தங்களது கருத்தை கூறினர்.
தேர்தல் ரத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பரந்தாமன் முன்னாள் எம்.எல்.ஏ. - வேலூர்
வேட்பாளரிடம் பணம் பறிமுதல் செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தி உடனே தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு தேர்தல் ரத்து என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கபட்டுள்ளது.
ஷீலா - தோட்டபாளையம்
தேர்தல் ரத்து செய்தது சரியான நடவடிக்கை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எந்தவித நலத் திட்டங்களையும் செய்யமாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறவே ஒழிக்க வேண்டும்.
தாமோதரன் - ஆம்பூர்
தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்திருப்பது சரி என்றால் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தலையும் ரத்து செய்திருக்க வேண்டும்.
தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க சென்னையில் வேலை பார்க்கும் நான் விடுப்பு எடுத்து ஆவலாக ஊருக்கு வந்தேன், ஆனால் தேர்தல் ஆணையம் திடீரென நேற்று தேர்தலை ரத்து செய்து விட்டது.
இது எனக்கும் என்னை போன்ற இளம் வாக்காளர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இக்பால் வாணியம்பாடி
தேர்தலை ரத்து செய்திருப்பது சரியல்ல, இதனால் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பணத்தை பறிமுதல் செய்த அன்றே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு இவ்வாறு நடந்து கொள்வது தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.
சுகுமார் - வாணியம்பாடி
தேர்தல் ரத்து என்பது வேலூர் மாவட்ட தொகுதியில் மட்டும் செய்திருப்பது சரியானதல்ல. எல்லா தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தை திரும்ப பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தேர்தல் நடப்பதற்கு முன்பே இவ்வளவு குளறுபடி என்றால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் என்னென்ன நடக்கும் தேர்தல் ரத்து செய்தது ஒரு விதத்தில் நல்லது தான். ஆனாலும் வெளியூரில் இருந்து லீவு போட்டு ஓட்டுபோட வந்தவர்களுக்கு ஏமாற்றம். மீண்டும் அவர்கள் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
தேர்தல் கமிஷன் எடுத்த முடிவு சரிதான். அரசியல்வாதிகளிடம் பிடிபட்ட பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியாக பல தரப்பு மக்களும் தேர்தல் கமிஷன் எடுத்த ரத்து முடிவுக்கு தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மீண்டும் தேர்தல் நடத்தும் போதாவது பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினர். #LokSabhaElections2019 #VelloreConstituency
மராட்டியத்தில் காட்சி ரோலி மற்றும் சந்திராபூர் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்தது. பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அங்கு நேற்று 11 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
2 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் காட்சிரோலி மற்றும் சந்திராபூருக்கு வந்தார். ஹெலிகாப்டர் இறங்கும் மைதானத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
ஆனால் அவர் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பிரசாரம் செய்யாமல் ரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய நிதி மந்திரியுமான சுதிர் முஸ்கான்டிவர் கூறும் போது, “தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக அங்கு செல்ல முடியாததால் அவர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை” என்றார்.
ஆனால் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #LoksabhaElections2019 #BJP #Amitshah
இந்த திட்டத்துக்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை ஐகோர்ட்டில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து 8 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. வாதப் பிரதிவாதங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டனர். 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளனர். #SalemChennaiGreenCorridor #8LaneRoad #MadrasHighCourt
சென்னையில் வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நேற்று மாலை கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி கடலில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்ததோடு, பயங்கர சீற்றத்துடனும் காணப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலையிலேயே விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
திருவள்ளுவர் சிலையை பார்க்க அழைத்து செல்லப்பட்ட பயணிகளும் அவசர, அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதுபோல நேற்று காலையிலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் பயங்கர சீற்றம் காணப்பட்டது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்தை ரத்து செய்தது.
இன்றும் அங்கு கடல் சீற்றம் நீடித்தது. இதனால் 2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் குகன், பொதிகை, விவேகானந்தா படகுகள் கரையில் ஓய்வெடுத்தன.
கடல் சீற்றம் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் அவர்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
கட்டுமரம், வள்ளத்தில் கடலுக்கு செல்வோரும் இன்று பணிக்கு செல்லவில்லை. அலைகளின் சீற்றத்தை கண்டு அவர்கள் கட்டுமரங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். விசைபடகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
இதுபோல கடற்கரை பகுதி முழுவதும் பயங்கர சூறைக்காற்றும் வீசியது. சாலைகளில் நடந்து செல்லும் பயணிகள் முகத்தை மூடியபடி சென்றனர்.
இன்று அதிகாலையில் சூரியோதயம் பார்க்க சென்ற பயணிகள் அதன்பின்பு கடலில் குளிக்க சென்றனர். அவர்களை பாதுகாப்பு கருதி சுற்றுலா போலீசார் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.
இந்த அரசாணையை எதிர்த்து 140 கல்வி நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறுபான்மை பள்ளிகள் நடத்துவதற்காக வழங்கப்பட்ட உரிமையை பறிக்கும் வகையில் இந்த அரசாணை உள்ளது என்றும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தது. #MinoritySchools #MadrasHighCourt
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி-ராமேஸ்வரம் மற்றும் மதுரை-ராமேஸ்வரம் இடையே இயங்கக்கூடிய பயணிகள் ரெயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை புறப்படவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி புறப்பட வேண்டிய விரைவு ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரெயில் ராமேஸ்வரம் மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒக்காவிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு ரெயில் மதுரை வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம்-ஒக்கா விரைவு ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி மற்றும் மன்னார்குடி ஆகிய மார்க்கத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் உழவன் ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் இருந்து திருச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் நெல்லையில் நேற்று இரவு 7.15 மணிக்கு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத இருந்தன.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த போட்டி உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மறைவுக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் இன்று இரவு 7.15 மணிக்கு நத்தத்தில் (திண்டுக்கல்) நடக்க இருந்த கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் இடையிலான வெளியேற்றுதல் சுற்று ஆட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ரத்து செய்யப்பட்ட இவ்விரு ஆட்டங்களும் மற்றொரு தேதியில் நடத்தப்படும், அதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோரை விசாரணை ஆணையம் நியமித்து உத்தரவிட்டது. இந்த வக்கீல்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்ய இருந்தனர்.
இந்தநிலையில், வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. வக்கீல்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும், அதனால் மற்றொரு நாளில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், அதை ஏற்றுக் கொண்டு இன்று நடைபெற இருந்த ஆய்வுப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #JayalalithaaDeath #ApolloHospital #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்