search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார இறுதி நாட்களில் திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து
    X

    வார இறுதி நாட்களில் திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கூறியதாவது:-

    கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் மற்றும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால், அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.

    உயர் அந்தஸ்தில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு 6 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதற்கு மேல் வழங்கப்படமாட்டாது. ஒரே சிபாரிசு கடிதத்தில் 3 பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படமாட்டாது. ஒரு வி.ஐ.பி. சிபாரிசு கடிதத்துக்கு ஒரு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

    இந்த உத்தரவு கோடைக்காலம் முடியும் வரை அமலில் இருக்கும். அதற்கு பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘‘13-ந் தேதி ஒரே நாளில் 99 ஆயிரத்து 840 வி.ஐ.பி. பக்தர்களுக்கும், 20-ந் தேதி 1 லட்சத்துக்கும்மேல் வி.ஐ.பி. பக்தர்களுக்கும் சாமி தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார். #Tirupati
    Next Story
    ×