search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by election"

    • ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில்விஜய் (வயது 34) என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.

    • திமுக. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.
    • ஈஸ்வரமகாலிங்கம் 191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20ல் துவங்கியது. இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி திமுக. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில் 4740 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. வெற்றி செல்வன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈஸ்வரமகாலிங்கம் 191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம். ஈஸ்வரமகாலிங்கம் - 1605 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்கள் சதீஷ்குமார் - 1414 வாக்குகளும், ராஜ் - 743 வாக்குகளும், சின்னசாமி - 632 வாக்குகளும், ஜெயப்பிரகாஷ் - 193 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் குமரவேல் - 84 வாக்குகளும் பெற்றனர். 69 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 191 வாக்குகள் வித்தியாசத்தில் ஈஸ்வரமகாலிங்கம் வெற்றி பெற்றார்.

    • ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.
    • தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20ந்தேதி துவங்கியது.

    இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேவராயன்பாளையம்,அரசு துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதுார் ஆர்.சி. துவக்கப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த நிலையில் இன்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. வெற்றி செல்வன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது.
    • பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    கோவை:

    கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர். குருநல்லிபாளையம் 4-வது வார்டு, சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு நல் லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய இடங்கள் காலியானது.

    இதே போல பொள்ளாச்சி வடக்கு வடக்கிப்பாளையம் ஊராட்சி 2 வார்டு உறுப்பினர், தொண்டாமுத்தூர் பேரூர் செட்டிப்பாளையம் 1 -வது வார்டு உறுப்பினர் பதவிகள் காலியானது. காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் அறி விக்கப்பட்டது. ஏற்கனவே நல்லட்டிபாளையம், சொக்க னூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினருக் கான தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் 2 பேர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதனால் நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் குருநல்லிபாளையம், வடக்கிப்பாளையம், பேரூர் செட்டிப்பாளையம் வார்டு உறுப்பினர் ஆகிய பதவிக ளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பின்னர் நெ.10 முத்தூர், குருநெல்லிப்பாளையம் பதிவான வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    அங்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டு உள்ளது. வடக்கிப்பாளையத்தில் பதிவான வாக்குகள் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணுவதற்கு மேஜைகள் போடப்பட்டு உள்ளது. ஒரு மேஜைக்கு 3 பேர் என 2 மேஜைகளுக்கு 6 பேர் பணிபுரிவார்கள். ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணியில் வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு நபர் என 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அதேபோல வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது. வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் போது, செல்போன், பேனா, நோட்டு கொண்டு வர அனுமதி இல்லை. 

    • இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.
    • மொத்தம் 7518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20-ந்தேதி துவங்கியது.

    இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இந்தநிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.தேவராயன்பாளையம்,அரசு துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதூர் ஆர்.சி. துவக்கப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    இது 63.06 சதவீதம் ஆகும். இந்த தேர்தல் பணியில் வாக்குச்சாவடி மையத்தில் 48 ஊழியர்கள், மற்றும் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தேர்தல் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பார்வையிட்டனர்.

    • இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
    • கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும், பல்லடத்தில் 1-வது வார்டுக்கு இச்சிப்பட்டியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற பார்கள் மூடப்பட்டன.

    பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

    கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்படி 4 மையங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது தெரிவித்தார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன்உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.
    • தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி பகுதியில் 3 வாக்குசாவடிகளும், குருநல்லிபாளையம் ஊராட்சியில் ஒரு வாக்கு சாவடியும் என 4 வாக்கு சாவடிகள் அமைக்கப்ப ட்டிருந்தது. வாக்கு ப்பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் ஏற்கனவே செய்ய ப்பட்டிருந்தது.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 6 மணிக்கே மக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடிகளுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர். 3 வாக்குசாவடிகளிலும் மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து சென்றனர்.

    குருநல்லிபாளையத்தில் நடந்த ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலிலும் அந்த வார்டு மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிதேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • இன்று காலை 7மணிக்கு தேர்தல் தொடங்கியது. மாலை 6மணி வரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவ ட்டத்தில் முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரணை ஊராட்சி வார்டு எண் 7-ல் உள்ள அம்பேத்கர் தெரு, பிள்ளையார் கோவில் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குத்தெரு ஆகிய பகுதிகள், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-ல் உள்ள குளக்கரை தெரு, மெயின் ரோடு, மேட்டுத் தெரு, தச்சர் தெரு ஆகிய பகுதிகள், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் அன்னமங்கலம் ஊராட்சி வார்டு எண் 5-ல் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெரு, மடவிளாகம், மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகள் அமைந்துள்ள கிராம ஊராட்சி வார்டுகளின் வார்டு உறுப்பினர்களுக்கான தற்செயல் தேர்தல் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 7மணிக்கு தேர்தல் தொடங்கியது. மாலை 6மணி வரை நடைபெறவுள்ளது.

    முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-ல் 513 வாக்குகள் உள்ளது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    • இடைத்தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
    • வாக்குச்சாவடி பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் காலியாக உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்று மாலை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்தனர். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

    • பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 9-ம் தேதி நடைபெறுகிறது.
    • 4 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பானுமதி. இவர் சமீபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த ஊராட்சியில் ஆண் வாக்காளர்கள் 921, பெண் வாக்காளர்கள் 931 பேர் என 1852 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கியது. கடைசி நாளான நேற்று 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க தரப்பில் பானுமதி மற்றும் உமா ஆகிய இருவரும், தி.மு.க தரப்பில் சுசீலா மற்றும் நீலாவதி ஆகிய இருவர் என 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

    இந்த தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலராக கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, தேர்தல் பணி மேற்பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலாளர் பிரவீன் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை 30ஆம் தேதி திரும்ப பெறலாம். அதனைத் தொடர்ந்து போட்டி இருப்பின் இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடைபெறுகிறது.

    • தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது.
    • வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் நாளை கடைசி நாள் ஆகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலி பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்திட தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கால அட்டவணை வரப் பெற்றுள்ளது.

    அதன்படி வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் நாளை கடைசி நாள் ஆகும்.

    வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடம், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தஞ்சை மாநகராட்சி வார்டு -8 மற்றும் அய்யம்பேட்டை பேரூராட்சியில் வார்டு -9 என மொத்தம் 30 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 32 வாக்குச்சாவடி மையங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 5 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 37 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தேர்தலில் 6704 ஆண் வாக்காளர்களும், 6986 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 13690 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    • இடைத்தேர்தலில் போட்டியிட மேலும் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
    • வருகிற 9-ந்தேதி நடக்கிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்(இடைத்தேர்தல்) வருகிற 9-ந்தேதி நடக்கிறது.

    அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ஏற்கனவே ஒரு பெண், ஒரு ஆண் என 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிலிமிசை கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஏற்கனவே ஒரு பெண் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று ஒரு பெண் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஆலத்தூர் ஒன்றியத்தில் இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது."

    ×