search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kinathukidavu"

    • கிணத்து க்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கிணத்துக்கடவு,

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளை யம் பிரிவை சேர்ந்தவர் ெஜயா ஹரி (வயது23).

    இவர் தனது தாய் மகேஸ்வரி, தங்ைக நந்தினி ஆகியோருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் சொந்தமாக காய்கறி கடையும் நடத்தி வந்தார்.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜெயாஹரி விபத்து ஒன்றில் காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மாலை வீட்டில் இருந்த ஜெயாஹரிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதை பார்த்த அவரது தாயார் மகேஸ்வரி, தனது மகனை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் சுய நினைவை இழந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அவரது கிட்னி மற்றும் கல்லீரல் ஆகியவை செயலிழந்து விட்டதாக தெரிவித்த டாக்டர்கள் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஜெயாஹரி இறந்து விட்டார்.

    இதுகுறித்து கிணத்து க்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். விசாரணை யில், ஜெயாஹரி செல்போனில் உள்ள ஆன்லைன் லோன் ஆப் மூலம் தனது வியாபாரத்திற்காக கடன் பெற்றதும், இதற்காக அவர் முன்பணமும் செலுத்தியதும் தெரியவந்தது. இதனால் அவரை அந்த ஆன்லைன் லோன் ஆப் நிறுவனத்தை சேர்ந்த யாராவது செல்போனில் தொடர்பு கொண்டு கடனை திருப்பி கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியிருக்க வாய்ப்பு ள்ளது.இதன் காரணமாகவே அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்திரு க்கலாம் என்றும், அப்போது அளவுக்கு அதிகமாக மாத்திரை களை தின்று தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர் கடன் வாங்கியது உண்மை தானா? அவரை யாராவது மிரட்டினரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.
    • தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி பகுதியில் 3 வாக்குசாவடிகளும், குருநல்லிபாளையம் ஊராட்சியில் ஒரு வாக்கு சாவடியும் என 4 வாக்கு சாவடிகள் அமைக்கப்ப ட்டிருந்தது. வாக்கு ப்பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் ஏற்கனவே செய்ய ப்பட்டிருந்தது.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 6 மணிக்கே மக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடிகளுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர். 3 வாக்குசாவடிகளிலும் மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து சென்றனர்.

    குருநல்லிபாளையத்தில் நடந்த ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலிலும் அந்த வார்டு மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

    ×