search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணத்துக்கடவு அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்றதால்  காய்கறி கடைக்காரர் சாவு
    X

    கிணத்துக்கடவு அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்றதால் காய்கறி கடைக்காரர் சாவு

    • கிணத்து க்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கிணத்துக்கடவு,

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளை யம் பிரிவை சேர்ந்தவர் ெஜயா ஹரி (வயது23).

    இவர் தனது தாய் மகேஸ்வரி, தங்ைக நந்தினி ஆகியோருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் சொந்தமாக காய்கறி கடையும் நடத்தி வந்தார்.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜெயாஹரி விபத்து ஒன்றில் காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மாலை வீட்டில் இருந்த ஜெயாஹரிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதை பார்த்த அவரது தாயார் மகேஸ்வரி, தனது மகனை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் சுய நினைவை இழந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அவரது கிட்னி மற்றும் கல்லீரல் ஆகியவை செயலிழந்து விட்டதாக தெரிவித்த டாக்டர்கள் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஜெயாஹரி இறந்து விட்டார்.

    இதுகுறித்து கிணத்து க்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். விசாரணை யில், ஜெயாஹரி செல்போனில் உள்ள ஆன்லைன் லோன் ஆப் மூலம் தனது வியாபாரத்திற்காக கடன் பெற்றதும், இதற்காக அவர் முன்பணமும் செலுத்தியதும் தெரியவந்தது. இதனால் அவரை அந்த ஆன்லைன் லோன் ஆப் நிறுவனத்தை சேர்ந்த யாராவது செல்போனில் தொடர்பு கொண்டு கடனை திருப்பி கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியிருக்க வாய்ப்பு ள்ளது.இதன் காரணமாகவே அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்திரு க்கலாம் என்றும், அப்போது அளவுக்கு அதிகமாக மாத்திரை களை தின்று தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர் கடன் வாங்கியது உண்மை தானா? அவரை யாராவது மிரட்டினரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×