search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணத்துக்கடவு"

    • பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.
    • பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கோவை மாநகரில் இருந்து தெற்கே

    சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது கிணத்துக்கடவு.

    இந்த ஊரின் நடுவே உள்ள பொன்மலையில் மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும்

    பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    ஞானப்பழத்திற்காக பெற்றோரான சிவ பெருமான் உமையாளுடன் கோபித்துக் கொண்டு

    பழனியில் குடிகொண்ட முத்துக்குமார சுவாமி இந்தபொன்மலையில் பாதம் பதித்ததாக இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

    எனவே இங்கு மூலவரான வேலாயுத சுவாமிக்கு பூஜை நடத்துவதற்கு முன்பாக,

    பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில்

    தனி மண்டபத்தில் உள்ள முருகப் பெருமானின் திருப்பாதங்களை தரிசித்தால்,

    விரைவில் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

    மேலும் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

    • நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.
    • தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி பகுதியில் 3 வாக்குசாவடிகளும், குருநல்லிபாளையம் ஊராட்சியில் ஒரு வாக்கு சாவடியும் என 4 வாக்கு சாவடிகள் அமைக்கப்ப ட்டிருந்தது. வாக்கு ப்பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் ஏற்கனவே செய்ய ப்பட்டிருந்தது.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 6 மணிக்கே மக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடிகளுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர். 3 வாக்குசாவடிகளிலும் மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து சென்றனர்.

    குருநல்லிபாளையத்தில் நடந்த ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலிலும் அந்த வார்டு மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

    ×